logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தெய்வத்திரு கந்தசாமி கவுண்டர் அவர்களின் நினைவு நாள் இன்று! மகாத்மா காந்தி ஆசிரமத்தில் அவர்களுக்கு கூட்டுப் பிரார்த்தனை செய்யப்பட்டது! முகவரி : மகாத்மா காந்தி ஆசிரமம், ஆனைமலை, பொள்ளாச்சி - 642 104 கோயம்புத்தூர் மாவட்டம்! தொலைபேசி: +91 90432 00016 +9190432 00014 உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் நன்றி🙏

3 hrs ago
user_Varun pradeep B
Varun pradeep B
Political party office Coimbatore South, Tamil Nadu•
3 hrs ago

தெய்வத்திரு கந்தசாமி கவுண்டர் அவர்களின் நினைவு நாள் இன்று! மகாத்மா காந்தி ஆசிரமத்தில் அவர்களுக்கு கூட்டுப் பிரார்த்தனை செய்யப்பட்டது! முகவரி : மகாத்மா காந்தி ஆசிரமம், ஆனைமலை, பொள்ளாச்சி - 642 104 கோயம்புத்தூர் மாவட்டம்! தொலைபேசி: +91 90432 00016 +9190432 00014 உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் நன்றி🙏

  • user_Varun pradeep B
    Varun pradeep B
    Coimbatore South, Tamil Nadu
    ஆனைமலை மகாத்மா காந்தி ஆசிரமம் – வரலாறு ஆனைமலை மகாத்மா காந்தி ஆசிரமம் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில், ஆனைமலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான தேசசேவை மற்றும் ஆன்மிக மையம் ஆகும். இந்த ஆசிரமம், மகாத்மா காந்தி அவர்களின் அகிம்சை, சத்தியம், எளிமை, சுயநம்பிக்கை போன்ற கொள்கைகளைப் பரப்புவதற்காக உருவாக்கப்பட்டது. தொடக்கம் இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில், கிராம மக்களிடம் தேசப்பற்று மற்றும் சமூக சீர்திருத்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த ஆசிரமம் நிறுவப்பட்டது. காந்திய சிந்தனைகளை நடைமுறை வாழ்க்கையில் கொண்டு வரவேண்டும் என்ற இலட்சியத்துடன், உள்ளூர் சமூகத்தினர் மற்றும் காந்தியவாதிகள் இணைந்து இதை வளர்த்தனர். முக்கிய நோக்கங்கள் காதி & கைநெசவு: சுயநிறைவு மற்றும் வேலைவாய்ப்பை ஊக்குவித்தல் கல்வி சேவை: மதிப்புமிக்க கல்வி, நெறிமுறைகள் சமூக சீர்திருத்தம்: சாதி ஒற்றுமை, மத நல்லிணக்கம் ஆன்மிக வளர்ச்சி: எளிமை, சுயகட்டுப்பாடு, சேவை காந்திய தாக்கம் மகாத்மா காந்தி நேரில் வந்ததாக உள்ளூர் வரலாறுகள் குறிப்பிடுகின்றன; அவரது வருகைகள் ஆசிரமத்தின் திசைமாற்றத்திற்கும் மக்கள் ஆதரவுக்கும் காரணமாகின. ஆசிரமத்தில் காந்தி ஜெயந்தி, தேசபக்தி நிகழ்ச்சிகள், சேவை முகாம்கள் போன்றவை தொடர்ந்து நடத்தப்படுகின்றன. இன்றைய நிலை இன்றும் இந்த ஆசிரமம் கல்வி, சமூக சேவை, கலாச்சாரப் பணிகள் மூலம் காந்திய மரபை உயிருடன் வைத்திருக்கிறது. சுற்றுப்புற கிராமங்களின் வளர்ச்சிக்கான திட்டங்கள் இங்கே முன்னெடுக்கப்படுகின்றன.
    8 min ago
More news from தமிழ்நாடு and nearby areas
  • தேனி மாவட்டம் கம்பத்தில் முல்லைப் பெரியார் சம்பந்தமாக நடந்து வரும் முறை கேடுகளை பற்றிய கருத்துக்களை விவசாய சங்கத்தினர் எடுத்துரைக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தாங்கள் தப்பிப்பதற்கு என்று அதிகாரிகள் தவறான செய்தி பரப்புகின்றனர் எனக் குற்றச்சாட்டு. தேனி மாவட்டம் கம்பத்தில் பெரியார் வைகை பாசன விவசாய சங்கத்தின் சார்பாக முல்லைப் பெரியார் அணையில் கடந்த சில நாட்களாக நடந்துவரும் முறைகேடுகளை பற்றியும் அவற்றை சமாளிப்பதற்காக அதிகாரிகள் பொய் பிரச்சாரம் செய்வது குறித்தும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சங்கத்தின் மாநில தலைவர் மனோகரன் தலைமையிலும் ஒருங்கிணைப்பாளர் பென்னிகுக் அன்னூர் பாலசிங்கம் முன்னிலையிலும் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய பென்னிகுக் அன்வர் பாலசிங்கம் பேசுகையில் கடந்த இரண்டு மாதங்களாக முல்லைப் பெரியாறு அணையில் நடைபெற்று வரும் சிக்கல்கள் குறித்தும் அவற்றிலிருந்து தப்பிப்பதற்கு அதிகாரிகள் பரப்பி வரும் விசம்பத்தனமான பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த பத்திரிகையாளகள் சந்திப்பு நடைபெறுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முல்லைப் பெரியாறு அணையில அங்கு உள்ள தளவாடங்கள் அரசின் உத்தரவின் பேரில் எடை போடப்பட்டு ஏலத்தில் வற்க்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை 13 லாரிகளில் கொண்டு சென்று விட்டதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் மொத்தத்தில் கொண்டு சென்றது நான்கு லாரிகள் மட்டுமே ஆனால் அதிகாரிகள் 13 லாரி என்று முன்னுக்கு முன்னுக்கு பின் முரணாக பேசி வருகிறார்கள். நாங்கள் அந்த லாரியில் சம்பந்தமாக அனைத்து விவரங்களையும் ஒப்படைக்க தயாராக உள்ளோம் ஆனால் அவர்கள் 13 லாரியில் கொண்டு சென்றதற்கான உத்தரவாத்தை தர நிரூபிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினர். மேலும் முல்லைப் பெரியாறு அணையில் எப்பொழுதுமே அதிகாரிகள் அங்கு காணப்படுவதில்லை 142 அடி தண்ணீர் தேக்கும் போது அதிகாரிகள் அங்கு இருக்க வேண்டும் ஆனால் யாருமே இல்லை இவ்வாறு அதிகாரிகள் செயல்பட்ட கேரளாவில் உள்ளவர்கள் முல்லைப் பெரியானையை துச்சமாக நினைத்துவிடுவார்கள் என்று கூறினார். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் மதுரையில் உள்ள கோட்ட பொறியாளரிடம் சென்று புகார் மனுவை அளிப்போம் என்று தெரிவித்தார்.
    1
    தேனி மாவட்டம் கம்பத்தில் முல்லைப் பெரியார் சம்பந்தமாக நடந்து வரும் முறை கேடுகளை பற்றிய கருத்துக்களை விவசாய சங்கத்தினர் எடுத்துரைக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தாங்கள் தப்பிப்பதற்கு என்று அதிகாரிகள் தவறான செய்தி பரப்புகின்றனர் எனக் குற்றச்சாட்டு.
தேனி மாவட்டம் கம்பத்தில் பெரியார் வைகை பாசன விவசாய சங்கத்தின் சார்பாக முல்லைப் பெரியார் அணையில் கடந்த சில நாட்களாக நடந்துவரும் முறைகேடுகளை பற்றியும் அவற்றை சமாளிப்பதற்காக அதிகாரிகள் பொய் பிரச்சாரம் செய்வது குறித்தும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சங்கத்தின் மாநில தலைவர் மனோகரன் தலைமையிலும் ஒருங்கிணைப்பாளர் பென்னிகுக் அன்னூர் பாலசிங்கம் முன்னிலையிலும் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய பென்னிகுக் அன்வர் பாலசிங்கம் பேசுகையில் கடந்த இரண்டு மாதங்களாக முல்லைப் பெரியாறு அணையில் நடைபெற்று வரும் சிக்கல்கள் குறித்தும் அவற்றிலிருந்து தப்பிப்பதற்கு அதிகாரிகள் பரப்பி வரும் விசம்பத்தனமான பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த பத்திரிகையாளகள் சந்திப்பு நடைபெறுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முல்லைப் பெரியாறு அணையில அங்கு உள்ள தளவாடங்கள் அரசின் உத்தரவின் பேரில் எடை போடப்பட்டு ஏலத்தில் வற்க்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை 13 லாரிகளில் கொண்டு சென்று விட்டதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனால் மொத்தத்தில் கொண்டு சென்றது நான்கு லாரிகள் மட்டுமே ஆனால் அதிகாரிகள் 13 லாரி என்று முன்னுக்கு முன்னுக்கு பின் முரணாக பேசி வருகிறார்கள்.
நாங்கள் அந்த லாரியில் சம்பந்தமாக அனைத்து விவரங்களையும் ஒப்படைக்க தயாராக உள்ளோம் ஆனால் அவர்கள் 13 லாரியில் கொண்டு சென்றதற்கான உத்தரவாத்தை தர நிரூபிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினர்.
மேலும் முல்லைப் பெரியாறு அணையில் எப்பொழுதுமே அதிகாரிகள் அங்கு காணப்படுவதில்லை 142 அடி தண்ணீர் தேக்கும் போது அதிகாரிகள் அங்கு இருக்க வேண்டும் ஆனால் யாருமே இல்லை இவ்வாறு அதிகாரிகள் செயல்பட்ட கேரளாவில் உள்ளவர்கள் முல்லைப் பெரியானையை துச்சமாக நினைத்துவிடுவார்கள் என்று கூறினார்.
மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் மதுரையில் உள்ள கோட்ட பொறியாளரிடம் சென்று புகார் மனுவை அளிப்போம் என்று தெரிவித்தார்.
    user_Shakthi
    Shakthi
    Journalist பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • Post by Mr Mr. Gandhi
    1
    Post by Mr Mr. Gandhi
    user_Mr Mr. Gandhi
    Mr Mr. Gandhi
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    3 hrs ago
  • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு
    2
    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு
    user_Raja
    Raja
    செய்தியாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கேக் தயாரிப்பு மும்முரம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பேக்கரி கடைகளில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கேக் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பலரது இல்லங்களில் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்பது வழக்கம் அதன் அடிப்படையில் வண்ண வண்ண நிறங்கள் அழகிய வடிவமைப்புகளுடன் குழந்தை உருவங்கள் மற்றும் வெண்ணிலா பைனாப்பிள் ஆரஞ்சு பட்டர் ஸ்காட்ச் ஹனி சாக்லேட் பிளாக் பாரஸ்ட் வைட் ஃபாரஸ்ட் ஐஸ்கிரீம் கேக் அரை கிலோ முதல் 10 கிலோ வரையிலும் கேக்கல் தயார் நிலையில் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது இதனை வாங்க மக்கள் வழக்கத்திற்கு மாறாக ஆர்வம் காட்டி வருகின்றனர்
    1
    ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கேக் தயாரிப்பு மும்முரம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பேக்கரி கடைகளில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கேக் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பலரது இல்லங்களில் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்பது வழக்கம் அதன் அடிப்படையில் வண்ண வண்ண நிறங்கள் அழகிய வடிவமைப்புகளுடன் குழந்தை உருவங்கள் மற்றும் வெண்ணிலா பைனாப்பிள் ஆரஞ்சு பட்டர் ஸ்காட்ச் ஹனி சாக்லேட் பிளாக் பாரஸ்ட் வைட் ஃபாரஸ்ட் ஐஸ்கிரீம் கேக் அரை கிலோ முதல் 10 கிலோ வரையிலும் கேக்கல் தயார் நிலையில் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது இதனை வாங்க மக்கள் வழக்கத்திற்கு மாறாக ஆர்வம் காட்டி வருகின்றனர்
    user_Arunkumar k
    Arunkumar k
    Journalist கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • தகவல் வழங்காத குற்றம்: மனுதாரருக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்கிய கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உரிய காலத்தில் தகவல் வழங்காததற்காக, மாநில தகவல் ஆணையத்தின் உத்தரவுப்படி கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலக பொதுத் தகவல் அலுவலர், மனுதாரருக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்டம் மாளகுப்பம் பகுதியைச் சேர்ந்த சங்கரன் என்பவர் அளித்த புகாரின் பேரில் நடைபெற்ற விசாரணையில், பொதுத் தகவல் அலுவலர் சட்டப்பூர்வ கடமையைச் செய்யத் தவறியது உறுதி செய்யப்பட்டது. மாநில தகவல் ஆணையர் பி. தாமரைக்கண்ணன் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் காலவிரையத்திற்காக இழப்பீடு வழங்கப்பட்டதுடன், காலதாமதத்திற்கு காரணமான அலுவலர் மீது பிரிவு 20(1), 20(2) கீழ் நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என்பதற்கான விளக்கமும் கோரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, புதிய பொதுத் தகவல் அலுவலர் ரூ.5,000 காசோலையை மனுதாரரிடம் நேரில் வழங்கினார். இழப்பீடு பெற்றுக்கொண்டதற்கான உறுதிமொழி அறிக்கையை 30.12.2025 அன்று மாநில தகவல் ஆணையத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
    1
    தகவல் வழங்காத குற்றம்: மனுதாரருக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்கிய கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம்
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உரிய காலத்தில் தகவல் வழங்காததற்காக, மாநில தகவல் ஆணையத்தின் உத்தரவுப்படி கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலக பொதுத் தகவல் அலுவலர், மனுதாரருக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்டம் மாளகுப்பம் பகுதியைச் சேர்ந்த சங்கரன் என்பவர் அளித்த புகாரின் பேரில் நடைபெற்ற விசாரணையில், பொதுத் தகவல் அலுவலர் சட்டப்பூர்வ கடமையைச் செய்யத் தவறியது உறுதி செய்யப்பட்டது.
மாநில தகவல் ஆணையர் பி. தாமரைக்கண்ணன் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் காலவிரையத்திற்காக இழப்பீடு வழங்கப்பட்டதுடன், காலதாமதத்திற்கு காரணமான அலுவலர் மீது பிரிவு 20(1), 20(2) கீழ் நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என்பதற்கான விளக்கமும் கோரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, புதிய பொதுத் தகவல் அலுவலர் ரூ.5,000 காசோலையை மனுதாரரிடம் நேரில் வழங்கினார். இழப்பீடு பெற்றுக்கொண்டதற்கான உறுதிமொழி அறிக்கையை 30.12.2025 அன்று மாநில தகவல் ஆணையத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
    user_Pooma
    Pooma
    கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    15 hrs ago
  • பொங்கல் சிறப்பு ஆஃபர் ஊத்தங்கரை அலினா சிக்ஸில்
    1
    பொங்கல் சிறப்பு ஆஃபர் ஊத்தங்கரை அலினா சிக்ஸில்
    user_செல்வம்
    செல்வம்
    Journalist Krishnagiri, Tamil Nadu•
    23 hrs ago
  • நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது.
    1
    நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    5 hrs ago
  • Post by Mr Mr. Gandhi
    1
    Post by Mr Mr. Gandhi
    user_Mr Mr. Gandhi
    Mr Mr. Gandhi
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    3 hrs ago
  • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பூசணி விலை கடும் வீழ்ச்சி: விவசாயிகள் கவலை தைப்பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட சுற்றுப்புற கிராமங்களில் பூசணிக்காய் விளைச்சலும் விலையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் பூசணிக்காய்களின் வரத்து அதிகரித்து, நல்ல விலை கிடைக்கும் நிலையில், இந்த ஆண்டு எதிர்பாராத விலை வீழ்ச்சி விவசாயிகளை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. பொங்கல் வழிபாட்டில் முக்கிய இடம் பெறும் பூசணிக்காயை நம்பி, நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஆண்டுதோறும் இப்பகுதிகளில் பயிரிட்டு வருகின்றனர். இந்த ஆண்டில் பனி மற்றும் பூச்சி தாக்குதலால் பல இடங்களில் விளைச்சல் குறைந்ததாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த ஆண்டு கிலோ ரூ.50 வரை விற்பனையான பூசணிக்காய், தற்போது ரூ.10 முதல் ரூ.15 வரை மட்டுமே விலை கிடைப்பதால், விதை, உரம், ஆட்கள் கூலி உள்ளிட்ட முதலீட்டு செலவுகளை கூட ஈடுசெய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடன் சுமை அதிகரித்து, வரும் நாட்களில் விலை உயரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் காத்திருக்கும் நிலையில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து தகுந்த இழப்பீடு அல்லது நிதியுதவி வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பூசணி விலை கடும் வீழ்ச்சி: விவசாயிகள் கவலை
தைப்பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட  சுற்றுப்புற கிராமங்களில் பூசணிக்காய் விளைச்சலும் விலையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் பூசணிக்காய்களின் வரத்து அதிகரித்து, நல்ல விலை கிடைக்கும் நிலையில், இந்த ஆண்டு எதிர்பாராத விலை வீழ்ச்சி விவசாயிகளை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. பொங்கல் வழிபாட்டில் முக்கிய இடம் பெறும் பூசணிக்காயை நம்பி, நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஆண்டுதோறும் இப்பகுதிகளில் பயிரிட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டில் பனி மற்றும் பூச்சி தாக்குதலால் பல இடங்களில் விளைச்சல் குறைந்ததாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த ஆண்டு கிலோ ரூ.50 வரை விற்பனையான பூசணிக்காய், தற்போது ரூ.10 முதல் ரூ.15 வரை மட்டுமே விலை கிடைப்பதால், விதை, உரம், ஆட்கள் கூலி உள்ளிட்ட முதலீட்டு செலவுகளை கூட ஈடுசெய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடன் சுமை அதிகரித்து, வரும் நாட்களில் விலை உயரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் காத்திருக்கும் நிலையில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து தகுந்த இழப்பீடு அல்லது நிதியுதவி வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Pooma
    Pooma
    கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    15 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.