Shuru
Apke Nagar Ki App…
RR AARI WORK, Aari Work, Aari Embroidery, Aari Blous🙂 RR AARI WORK
RR AARI WORK
RR AARI WORK, Aari Work, Aari Embroidery, Aari Blous🙂 RR AARI WORK
More news from தமிழ்நாடு and nearby areas
- RR AARI WORK, Aari Work, Aari Embroidery, Aari Blous🙂 RR AARI WORK1
- கோவில்பட்டியில் நாய்கள் மற்றும் மாடுகள் தொல்லையை கட்டுப்படுத்த - கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் நகரத்தின் அருகிலுள்ள கிராம பகுதிகளிலும் தெருநாய்கள் பொதுமக்களையும் பள்ளி செல்லும் குழந்தைகளையும் விரட்டி செல்வதும் கடிப்பதுமாக உள்ளது. ஏராளமானோர் நாய் கடிபட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள். ஏராளமான மாடுகள் சாலைகளில் சுற்றி திரிவதால் போக்குவரத்து நெருக்கடியும், விபத்துக்களும் நடைபெறுகிறது.நாய்கள் மற்றும் மாடுகள் தொல்லையை கட்டுப்படுத்தி பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு தர வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக தலைவர் தமிழரசன் தலைமையிலும் நிர்வாகி தவம் பாலாஜி முன்னிலையிலும் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்பு நகராட்சி பொறியாளர் சேர்மாக்கணியிடம் மனு வழங்கினர்.ஆர்ப்பாட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நிர்வாகிகள் நல்லையா, மோகன், HMS வினோபா, ஆவல்நத்தம் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார், இந்திய கலாச்சார நட்புறவு கழகம் மாநில துணை தலைவர் அபிராமி முருகன், நிர்வாகிகள் வழக்கறிஞர் ஜெய ஸ்ரீ கிரிஸ்டோபர், ராமலட்சுமி, மணிமேகலை, மக்கள் நீதி மய்யம் கல்லூரணி ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில் குமார், INTUC ராஜசேகரன், திராவிடர் கழகம் செண்பகராஜ், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்து குமார், ஜெகநாதன், பகத்சிங் இரத்ததான கழகம் காளிதாஸ், லட்சுமணன், வேல்முருகன், தியாகி விஸ்வநாததாஸ் பேரவை சங்கர், தமிழ்நாடு பெண்கள் இணைப்புகுழு மேரிஷீலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.1
- ஆன்லைன் முதலீட்டு மோசடி தொடர்பாக விழிப்புணர்வு மற்றும் அறிவுறுத்தல் அறிவிப்பு மதுரை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 'FQL Trading Wallet' என்ற ஆன்லைன் செயலி மூலம் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் (USDT) முதலீடு செய்தால் 45 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என்றும், தினசரி அதிக லாபம் ஈட்டலாம் என்றும் ஆசைவார்த்தைகள் கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் பெறப்பட்டுள்ளன. நிதி மோசடி தொடர்பாக மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இதுவரை நிதி மோசடி வழக்கில் தொடர்புடைய 12 எதிரிகள் கைது செய்யப்பட்டு, அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு, அவர்களது பாஸ்போர்ட் முடக்குவதற்கும் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், நிதி மோசடியில் பாதிக்கப்பட்டு பணத்தை இழந்த பொதுமக்களுக்கு, அவர்கள் இழந்த பணத்தை மீட்டு தருவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புகார் அளிக்கும் வசதி இச்செயலியின் மூலம் பணத்தை இழந்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள், புகார் அளிப்பதற்காக மதுரைக்கு நேரில் வர் வேண்டிய அவசியமில்லை. பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட அருகிலுள்ள காவல் நிலையத்திலோ அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்திலோ நேரடியாக புகார் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.1
- கடம்பூரில் சீனிவாச பெருமாள் கோயில் வருஷாபிசேக விழா நடைபெற்றது கடம்பூர் ஸ்ரீ செளந்தர்ய பத்மாவதி ஸ்ரீ கோதா சமேத ஶ்ரீ மகா ஸ்ரீ சீனிவாசகம் பெருமாள் கோயில் வருஷாபிஷேகம் திராளன பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் .கயத்தாறு அருகே உள்ள கடம்பூர் ஸ்ரீ செளந்தர்ய பத்மாவதி ஸ்ரீ கோதா சமேத ஶ்ரீ மகா ஸ்ரீ சீனிவாசகம் பெருமாள் கோயில் வருஷாப்பிஷேகத்தை முன்னிட்டு காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது.பின்னர் திருப்பள்ளியெழுச்சி பூஜையும், நித்திய பூஜையும் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து யாகசாலை மண்டபத்தில் பல்வேறு ஹோம்கள் நடை பெற்று கும்பகலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யபட்டடன.பூஜைகளைதொடந்து மேள தாளம் முழங்க கடம் புறப்பட்டு கோயில் மூன்று முறை வலம் வந்து ஸ்ரீ மகா ஸ்ரீனிவாச பெருமாளுக்கு ஸ்ரீ சௌந்தர்யா பத்மாவதி மற்றும் ஆண்டாள் நாச்சியாருக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அதைத் தொடர்ந்து மூலவர் ஸ்ரீ மகா ஸ்ரீனிவாச பெருமாள் பத்மாவதி தாயார் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் மற்றும் விநாயகர் ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் பரிவாரமூர்த்தககளுக்கு மஞ்சள் பொடி மாபொடி திரவியம் பால் தயிர் இளநீர் தேன் சந்தனம் வாசனை உட்பட 21 திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது . இவ்விழாவில் திருக்குறுங்குடி ஜீயர் மடம்மடாதிபதி 50வது பட்டம் ஸ்ரீமத் பரமஹம்ஸ ஸ்ரீ ஸ்ரீ பேரருளானராமானுஐ ஜீயர் ஸ்வாமிகள் கலந்து கொண்டு மங்களாசாஸனம் செய்தருளி அனுக்ரஹ பாஷணம் செய்த அருளாசி வழங்கினார்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் நிறைவாக பிரசாதம் வழங்கப்பட்டது.அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.4
- பி. சி. ஆர் மற்றும் எஸ்சி /எஸ்டி சட்டங்களில் பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்படுவதை தடுக்க மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள எஸ் .டி மஹாலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பி. சி. ஆர் மற்றும் எஸ்சி /எஸ்டி சட்டங்களில் பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்படுவதை தடுக்க மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள எஸ் .டி மஹாலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் சமூகங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு பி. சி .ஆர் மற்றும் எஸ்சி /எஸ்டி சட்டங்களின் நடைமுறை தொடர்பான தங்களது கருத்துக்களையும் கோரிக்கைகளையும் முன்வைத்தனர் தமிழ் வேள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர்SS. சரவணச்செல்வம்MA ஆறுநாட்டு வேளாளர் முன்னேற்ற சங்க தலைவர் பேசியதாவது இது எந்த சமுதாயத்திற்கும் எதிரான கூட்டம் அல்ல என தெரிவித்தார்1
- தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் அவசர பழுதுநீக்கும் பணிகள் காரணமாக நாளை (மே 16) சனிக்கிழமை மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை (16.05.2026) சனிக்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து மின் நிறுத்தம் செய்யபடும் பகுதிகள் முத்தையாபுரம், தோப்புத்தெரு, வடக்குதெரு, பாரதிநகர், முள்ளகாடு,அத்திமரப்பட்டி,பொட்டல்காடு, அனல்மின்நகர் பகுதி, அபிராமிநகர், கேம்ப்,சுற்றியுள்ள பகுதிகள்,சுனாமிநகர், கேம்ப்,சவேரியார்புரம், துறைமுகம் மற்றும் துறைமுக, விரநாயக்கன் தட்டு. குடியிருப்பு பகுதிகள் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்பட்டுள்ளது.1
- RR AARI WORK, Aari Work, Aari Embroidery, Aari Blouse, RR AARI WORK1
- காரியாபட்டி அருகே பேருந்து நிறுத்தத்தில் இறக்காததால் பெண்கள் வாக்குவாதம் – ஓட்டுநரை செருப்பால் விரட்டியடிக்க முயன்றதால் பரபரப்பு விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே வலையங்குளம் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்தை நிறுத்தாமல் அடுத்த நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டதாக கூறி, 5 பெண்கள் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. காரியாபட்டியில் இருந்து விருதுநகர் நோக்கி அரசு பேருந்து ஒன்று கல்குறிச்சி வழியாக சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் வலையங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 5 பெண்கள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வலையங்குளம் பேருந்து நிறுத்தத்தில் 5 பெண்களும் இறங்க வேண்டிய நிலையில், பேருந்தில் பள்ளி மாணவர்கள் அதிகளவில் இருந்ததாகவும், இதனால் பேருந்தை வலையங்குளம் நிறுத்தத்தில் நிறுத்தாமல் அடுத்த பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி பெண்களை இறக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் இதுகுறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஓட்டுநர் பேருந்தில் இருந்து கீழே இறங்கி பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், பெண்களை தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் மேலும் ஆத்திரமடைந்த பெண்கள், தங்களது செருப்புகளை கழற்றி ஓட்டுநரை விரட்டி விரட்டி அடிக்க முயன்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெண்களுக்கும் பேருந்து ஓட்டுநருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் தகராறு காரணமாக அரசு பேருந்து சுமார் 15 நிமிடங்கள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர் நிலைமை சுமூகமானதைத் தொடர்ந்து, அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பயணிகளை ஏற்றிக்கொண்டு விருதுநகர் நோக்கி சென்றனர். பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாதது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம், பின்னர் ஓட்டுநரை பெண்கள் செருப்பால் விரட்டிய சம்பவமாக மாறியதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இந்த சம்பவத்தை பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.1