Shuru
Apke Nagar Ki App…
நாமக்கல் வேட்டாம்பாடியில் நடைபெறவுள்ள புறவழிச்சாலை திறப்பு விழா மற்றும் திருச்சி சாலை முதல் வள்ளிபுரம் வரை நான்காம், ஐந்தாம் கட்ட பணிகள் தொடர்பான ஏற்பாடுகளை எம்பி ராஜேஷ்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் செய்தியாளர்களிடம் உரையாடினார்.
DHINESH KUMAR
நாமக்கல் வேட்டாம்பாடியில் நடைபெறவுள்ள புறவழிச்சாலை திறப்பு விழா மற்றும் திருச்சி சாலை முதல் வள்ளிபுரம் வரை நான்காம், ஐந்தாம் கட்ட பணிகள் தொடர்பான ஏற்பாடுகளை எம்பி ராஜேஷ்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் செய்தியாளர்களிடம் உரையாடினார்.
More news from தமிழ்நாடு and nearby areas
- தன்னார்வலர்களை பாராட்டிய சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் தர்மபுரி ஆதி பவுண்டேஷன் சார்பாக இண்டூர் ஏரி புனரமைப்பு செய்த பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் அவர்கள் தலைமையிலும் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அவர்களின் முன்னிலையிலும் இன்று ஏரியை பார்வையிட்டு பாராட்டுகளை தெரிவித்தனர் மற்றும் பல்வேறு ஆலோசனைகளும் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுதிமொழி குழு உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்1
- தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சார்பில் மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் வாக்குறுதிப்படி வருவாய் கிராம உதவியாளருக்கு உள்ளது போல் சிறப்பு பென்சன் 6750 ரூபாய் வழங்க வேண்டும், சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், 10 ஆண்டுகள் பணி முடித்த சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு அரசு துறை காலிப் பணியிடங்களை நிரப்பும் போது 50 சதவீதம் சலுகை வழங்க வேண்டும், உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசிற்க்கு கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.1
- வேடசந்தூர் கிராமங்களில் கரூர் MP ஜோதிமணி அவர்கள் மகாத்மா காந்தி 100 நாள் வேலை குறித்து விளக்கம்..... வேடசந்தூர் ஒன்றியத்தில் கரூர் MP ஜோதிமணி 100 நாள் வேலை பார்க்கும் பொதுமக்களிடம் கருக்காம்பட்டி, அய்யர்மடம், குட்டம், தேவிநாயக்கன்பட்டி, விருதலைப்பட்டி, கல்வார்பட்டி கிராம பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசுரம் வழங்கி விளக்கமாக பேசினார் இந்நிகழ்ச்சியில் வேடசந்தூர் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் மாநில பொதுக்குழு உறுப்பினர் வடமதுரை வட்டார காங்கிரஸ் தலைவர் மாநில மாவட்ட ஒன்றிய கிராம காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் வேடசந்தூர் தொகுதி காங்கிரஸ் கட்சி செய்தி தகவல் தொடர்பாளர் கலந்து கொண்டனர் வேடசந்தூர் கூம்பூர் காவல்துறை சார்பு ஆய்வாளர்கள் உடனிருந்தனர்1
- த.வெ.க சார்பில், திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட மாபெரும் கொள்கை பரப்பு பொதுக்கூட்டம்! திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கோட்டை மூலையில், த.வெ.க.சார்பில் கிழக்கு மாவட்ட மாபெரும் கொள்கை பரப்பு பொதுக்கூட்டம் திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. வரவேற்புரை, எஸ்.வசந்த்கெவின், நைனா முகம்மது, சிறப்பு அழைப்பாளார், நட்சத்திர பேச்சாளர், மாநில ஒருங்கிணைப்பாளர் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணி எஸ்.ரமேஷ் ஆகியோர் திமுக அரசின் அவலநிலையை கண்டித்து சிறப்புரையாற்றினர். திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மேனலூர் எஸ்.கே.எம் ரமேஷ் அவர்களுக்கு திருவள்ளுவர் உருவ சிலை அன்பளிப்பு வழங்கி கௌரவித்தார், கிழக்கு மாவட்ட தலைவர் உதயகுமார் அவர்களுக்கும் திருவள்ளுவர் சிலை வழங்கப்பட்டது. மற்றும் மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட சார்பு அணிகள் செய்யாறு நகர,மத்திய ஒன்றிய செயலாளர்கள் செய்யாறு, அனக்காவூர்,வெம்பாக்கம் ஒன்றியங்களிலிருந்து, வந்தவாசி நகரம் வந்தவாசி , தெள்ளார், பெரணமல்லூர் ஒன்றியங்களிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர் மேலும் தேசூர் பேரூராட்சி மழையூர் ஒன்றியம் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர் சுமார் ஆயிரம் பேருக்கு மேலாக நிகழ்வில் கலந்து கொண்டனர் அனைவருக்கும் பிஸ்கட்டுகள், மிக்சர் தண்ணீர் பாக்கெட் வழங்கப் பட்டது இறுதியில் நன்றி உரை நகர செயலாளர் ராஜேஷ். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட இணைச் செயலாளர் கார்த்திக் சிறப்பாக செய்திருந்தார்.4
- திண்டுக்கல் மாவட்டத்திற்கு முடிவுற்ற பல்வேறு நலத்திட்ட பணிகளை திருவாங்கி வைக்கவும் பலத்திட்ட நலத்திட்ட பணிகளை துவங்கி வைக்கவும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்னும் சற்று நேரத்தில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தலைவர் அலுவலகத்திற்கு வரவுள்ள நிலையில் ஏராளமான பயனாளிகள் குவிந்துள்ளனர்.1
- *திண்டுக்கல் பேருந்து நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து அங்கன்வாடி பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்*1
- பென்னாகரத்தில் சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் ஆய்வு தர்மபுரி மாவட்டத்தில் இன்று தமிழக சட்டமன்ற ஆணையர் உறுதிமொழிக் குழு தலைவர் வேல்முருகன் தலைமையில் உறுப்பினர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பென்னாகரம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர் அப்போது பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி சட்டமன்ற ஆணைய உறுதிமொழிக்குழு தலைவர் வேல்முருகனை வரவேற்றார். உடன் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ், மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.1
- தருமபுரி பேருந்து நிலையத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இணைந்ததால் தொண்டர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க கூட்டணி அமைக்கும் பணியில் தமிழக அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் வெற்றி கூட்டணியான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி தற்போது இணைந்துள்ளது. இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் , பட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணிராமதாஸ் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் பாமக கூட்டணி உறுதியானது, அதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அன்புமணி ஆகியோர் கூட்டணியை அறிவித்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பாமக தொண்டர்கள் தமிழகம் முழுவதும், பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். அதனை தொடர்ந்து தருமபுரி பேருந்து நிலையத்தில் முன்னாள் எம்.பி. மருத்துவர் செந்தில் தலைமையில் பாமகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் எம்.பி.செந்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பாமக - தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த நாளை நாங்கள் மட்டுமல்ல தமிழகமே கொண்டாடுகிறது, இது அறிவிப்பு வந்த நாள் இல்லை தேர்தல் முடிவு வந்த நாள், இன்றிலிருந்து வெற்றி பயணம் தான், எப்படி 2001ல் 2006ல் தமிழகத்தின் முடிவை பாட்டாளி மக்கள் கட்சி மாற்றியதோ அதே போல இந்த மாற்றமும் உறுதியாக நடைபெறும், 5 ஆண்டு காலமாக தமிழகத்தில் ஒரு கொடுங்கோல் ஆட்சி நடத்திய, மக்கள்விரோத ஆட்சி நடத்திய, தமிழகத்தின் எல்லா முன்னேற்றத்திற்க்கும் முட்டுகட்டை போட்ட, பொய் புள்ளி விபரங்களால் ஒரு புனைவை கட்டிய திமுகவை வீட்டிற்க்கு அனுப்ப கூடிய ஒரு தேர்தல், இந்த தேர்தல் மக்களுக்கான தேர்தல், இதுதான் உண்மையான விடியல் என்று காட்ட போகிற தேர்தல் இதனை நாங்கள் கொண்டாடுகிறோம், தமிழகமே கொண்டாடுகிறது, தமிழகத்தில் உள்ள அத்தனை தொகுதிகளும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும், தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்று எங்கள் கூட்டணி கட்சியினர் சட்டமன்றத்திற்க்கு செல்வார்கள், எடப்பாடியார் முதலமைச்சர் ஆவார் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பாமக மாவட்ட அமைப்பு செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட அமைப்பு தலைவர் முருகன், சிறப்பு மாவட்ட செயலாளர் சின்னசாமி, நகர செயலாளர் வெங்கடேஷ்ராஜி, நகர தலைவர் பாண்டியன், மாநில இளைஞரணி துணைத் தலைவர் கார்த்திகேயன், நிர்வாகிகள் கவுரப்பன், சங்கர, செந்தில், நகர அமைப்பு தலைவர் முருகன், மற்றும் வணங்காமுடி, கதிரவன், சரவணன், ஜெய்கணேஷ்,அஜித்குமார், செல்வம், தகடுர்தமிழன், முரளி, பூக்கடை ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.1
- பாமக சார்பில் பசுமை தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் குன்னம் சட்டமன்ற தொகுதியில் இன்று மகளிர் உரிமை மீட்பு பயணம் மேற்கொண்டார் செளமியா அன்புமணி செல்லும் இடமெல்லாம் பெண்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சிறப்பான வரவேற்பு அளித்தனர் #PMK #sowmiyaanbumani #AnbumaniRamadoss #ForAllWomenAndGirls #மகளிர்உரிமைமீட்புப்பயணம் #சிங்கப்பெண்ணேஎழுந்துவா1