Shuru
Apke Nagar Ki App…
நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு நாகப்பட்டினம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அதிமுக வேட்பாளர் தங்க. கதிரவன் இன்று மனு தாக்கல் செய்ய வந்தார். அதே நேரத்தில் தவெக வேட்பாளர் சுகுமாறனும் தனது ஆதரவாளருடன் வந்த போது இரண்டு கட்சி தொண்டர் கோஷம் போட ஆரம்பித்தனர். இதனால் இருதரப்பினரும் மோதி கொள்ளும் வகையில் பதட்டம் நிலவியதால் பாதுகாப்பு போலீசார் இருதரப்பினரையும் அப்புறப்படுத்தினார்கள்
Babu P
நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு நாகப்பட்டினம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அதிமுக வேட்பாளர் தங்க. கதிரவன் இன்று மனு தாக்கல் செய்ய வந்தார். அதே நேரத்தில் தவெக வேட்பாளர் சுகுமாறனும் தனது ஆதரவாளருடன் வந்த போது இரண்டு கட்சி தொண்டர் கோஷம் போட ஆரம்பித்தனர். இதனால் இருதரப்பினரும் மோதி கொள்ளும் வகையில் பதட்டம் நிலவியதால் பாதுகாப்பு போலீசார் இருதரப்பினரையும் அப்புறப்படுத்தினார்கள்
More news from தமிழ்நாடு and nearby areas
- நாகப்பட்டினம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அதிமுக வேட்பாளர் தங்க. கதிரவன் இன்று மனு தாக்கல் செய்ய வந்தார். அதே நேரத்தில் தவெக வேட்பாளர் சுகுமாறனும் தனது ஆதரவாளருடன் வந்த போது இரண்டு கட்சி தொண்டர் கோஷம் போட ஆரம்பித்தனர். இதனால் இருதரப்பினரும் மோதி கொள்ளும் வகையில் பதட்டம் நிலவியதால் பாதுகாப்பு போலீசார் இருதரப்பினரையும் அப்புறப்படுத்தினார்கள்1
- நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் செந்தில்பாண்டியன் போட்டியிடுகிறார். திருவாரூர் மாவட்டம் தாழைக்குடி கிராமத்தை சேர்ந்த அவர் ஏற்கனவே கடந்த 2014 ம் ஆண்டு நாகை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சியில் இருந்து தவெகவில் இணைந்த நிலையில் தற்போது கீழ்வேளூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தம்மன் ஆலயத்தில் வழிபாடு செய்துவிட்டு தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மாலை அணிவித்தும், சால்வை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து தொண்டர்களுடன் சேர்ந்து கீழ்வேளூர் கடைத்தெருவில் உள்ள வணிக வளாகம், பேருந்து நிலையம், டீக்கடை, ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொது மக்களிடம் விசில் சிண்ணத்திற்கு வாக்குகளை சேகரித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் நான் வெற்றி பெற்றால் முதல் வேலையாக 1 ஏக்கர் நிலம் கைகயகப்படுத்தி கீழ்வேளூரில் பேருந்து நிலையம் அமைப்பேன் எனவும், கீழ்வேளூர் ரயில்வே மேம்பாலத்தை கட்டுவதற்கான முயற்சியை எடுப்பேன் எனவும் இளைஞர் மற்றும் பெண்களுக்கான வேலை வழங்குவதற்காக திருப்பூரில் உள்ள பின்னாலடை நிறுவனங்களை அழைத்து வந்து கீழ்வேளூரில் தொழில் தொடங்க வைப்பேன் என்று தெரிவித்த அவர் கீழவெண்மணியில் வர்க்க போராட்டத்தில் உயிர்நீத்த குடும்பங்களை அடையாளம் கண்டு விஜயை அழைத்து வந்து அவர்களுக்கு வீடு கட்டித்தரவும் , தவெக ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவோம் என தெரிவித்தார்.1
- Post by ஆ.கார்த்திக் PFHR1
- Post by Sri ram1
- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா சக்கராப்பள்ளியில் திருக்கருகாவூர் கற்பரச்சாம்பிகை கோவிலின் இணை கோவிலும், திருநாவுக்கரசர் மற்றும் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலமான தேவநாயகி அம்பாள் சமேத சக்கரவாகேஸ்வரர் ஆலயத்தின் சப்தஸ்தான விழா கொடியேற்றத்துடன் தொடங்கி, தினந்தோறும் இரவு பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏழூர் பல்லக்கு புறப்பாடு அதிகாலை நடைபெற்றது. அய்யம்பேட்டை செளராஷ்டிரா சபைக்கு சொந்தமான கண்ணாடி பல்லக்கில் தேவநாயகி அம்பாள் சமேத சக்கரவாகேஸ்வரர் சுவாமி எழுந்தருள கோவிலில் இருந்து ஏழூர் பல்லக்கு புறப்பட்டது. அப்போது கோவில் வளாகத்தில் கூடியிருந்த சுமார் 10-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்தில் சாமி தரிசனமும்,கோபுர தரிசனமும் செய்தனர்.2
- முத்தாட்சி பிள்ளையார் ஆலயம் பகுதியில் பரிவார தெய்வமாக வீற்றிருக்கும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி அவர்களுக்கு பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம், புவனகிரியில் அமைந்துள்ள முத்தாட்சி பிள்ளையார் ஆலயம் பகுதியில் பரிவார தெய்வமாக வீற்றிருக்கும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி அவர்களுக்கு பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் மிக விமர்சையாக நடைபெற்றது.திருக்கல்யாணம் கணபதி பூஜையுடன் தொடங்கி, திருமண சீர்வரிசை தாம்பூலத் தட்டுகள் வைத்து பூஜிக்கப்பட்டது. பின்னர் காப்பு கட்டுதல், யாக வேள்வி, மற்றும் திருமண சடங்குகள் நடைபெற்றன. தொடர்ந்து கன்னிகாதானம் நிகழ்ந்து, சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையை திருமாங்கல்யம் அணிவித்து மணமுடித்தார். இந்நிகழ்வின் இறுதியில் மகா தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.1
- 🎉 அண்ணா – பிறந்தநாள் வாழ்த்து 🎉 என் வாழ்க்கை கதையின் ஹீரோ நீ தான் அண்ணா, என் பின்னால் நின்று காப்பாற்றும் வீரன் நீ தான்! யாரும் இல்லாத நேரத்தில் கூட, என்னை விட்டுப் போகாத நம்பிக்கை நீ தான்! உன் கோபத்திலும் அன்பு இருக்குது, உன் சத்தத்திலும் கவலை இருக்குது, நான் விழுந்தால் தூக்கி நிறுத்தும், என் வாழ்வின் சக்தி நீ தான் அண்ணா! என் வெற்றிக்கு பின்னால் இருக்கும் காரணம் நீ, என் துணிச்சலுக்கு காரணமான தைரியம் நீ, என் வாழ்நாளில் மறக்க முடியாத, என் பெருமை நீ தான் அண்ணா! இன்னும் பல உயரங்கள் நீ அடையணும், இன்னும் பல வெற்றிகள் உன்னை தேடணும், எப்போதும் சிரித்த முகத்தோடு நீ இருக்கணும், 🔥 எப்போதும் mass...என் அண்ணன் தான் boss! 🔥 🎂 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா! 🎂1
- நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் கட்சியின் மாவட்ட செயலாளர் சுகுமாறன் இன்று 4ந்தேதி சனிக்கிழமை நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் மாவட்ட கட்சி அலுவலகத்தில் இருந்து பப்ளிக் ஆபிஸ் சாலையில் ஊர்வலமாக சென்று நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்1