Shuru
Apke Nagar Ki App…
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி வெற்றி வேட்பாளர் சீதா செல்ல பாண்டியன் அவர்களை ஆதரித்து 46வது வார்டு பகுதியில் பிரம்மாண்ட வாக்கு சேமிப்பு செய்தார் வட்டச் செயலாளர் பி ஜே புல்டன் ஜெசின்
தமிழ்நாடுஅரசியல்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி வெற்றி வேட்பாளர் சீதா செல்ல பாண்டியன் அவர்களை ஆதரித்து 46வது வார்டு பகுதியில் பிரம்மாண்ட வாக்கு சேமிப்பு செய்தார் வட்டச் செயலாளர் பி ஜே புல்டன் ஜெசின்
More news from தமிழ்நாடு and nearby areas
- சுரண்டையில் தென்காசி சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் ராஜபிரகாஷ் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று விசில் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்1
- நாகர்கோவிலில் வேப்பமூடு சந்திப்பில் இருந்து வடசேரி எம்.ஜி.ஆர் சிலை வரை நடந்த ரோடு ஷோவில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் வாக்கு சேகரித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு, பத்மநாபபுரம், குளச்சர், நாகர்கோவில் ஆகிய 4 தொகுதிகளில் பாஜகவும், கன்னியாகுமரியில் அதிமுகவும், கிள்ளியூரில் தமாகாவும் போட்டியிடுகிறது.நாகர்கோவில் தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏ-வான காந்தி, மீண்டும் போட்டியிடவுள்ள நிலையில், பிரதமரின் ரோடு ஷோ முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.1
- மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் இன்று (15.04.2026) புதன்கிழமை பிரதோசத்தை முன்னிட்டு மாலையில் ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கு மூலவர் பிரதோஷ நாயகர் நாயகி சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி திருக்கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பிரதோஷ பூஜை நிறைவு பெற்றது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.1
- தேர்தல் காலகட்டத்தில் தொகுதி வரையறையை அவசரமாக கொண்டு வந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கும் நோக்கோடு செயல்படும் மத்திய அரசை கண்டித்து திமுக வினர் தங்களது இல்லங்களில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து தேனி மாவட்டம் பெரியகுளம் திமுக கட்சி அலுவலகத்தில் நகர செயலாளர் முகமது இலியாஸ் தலைமையில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஒன்றிணைந்து மத்திய அரசு பாராளுமன்ற வரையறையை திருத்த மசோதாவை கண்டித்து கையில் கருப்பு கொடி ஏந்தி மசோதா நகலை எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர் மேலும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தம் மசோதா சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் தொடர்ந்து தமிழகத்திற்கு வஞ்சிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர் இந்த நகல் எரிப்பு போராட்டத்தில் நாங்கள் ஒண்ணும் அதிமுக அடிமை இல்லை நாங்கள் திமுக எதற்கும் அஞ்ச மாட்டோம் மத்திய அரசு போக்கை கண்டித்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து கண்டன கோஷங்களை எழுப்பினர் இதில் சிறப்பா அழைப்பாளர் திமுக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிஷாந்த், திமுக இணைச்செயலாளர் சேதுராமன்,மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார்,மாவட்ட பிரதிநிதி ராஜபாண்டி,நகர பிரமுகர் சேதுராமன், VTS ராஜவேலு, மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்1
- மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். திண்டுக்கல் மாவட்டம் திமுக மாவட்ட கட்சி அலுவலகம் முன்பு ஆத்தூர் தொகுதி வேட்பாளர் ஐ பெரியசாமி மற்றும் திண்டுக்கல் தொகுதி வேட்பாளர் ஐ பி செந்தில்குமார் முன்னிலையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவினை எதிர்த்து கருப்புக் கொடி ஏந்தி மசோதாவின் நகலை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக அமைச்சர் எஸ். ரகுபதி போட்டியிடுகின்றார். இதனை அடுத்து திருமயம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சார பணி மேற்கொண்டு வரும் அவர், இன்று பொன்னமராவதி அருகே திருமயம் அருகே உள்ள குறிச்சிபட்டி பகுதியில் தமிழக அரசின் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார்.1
- வாசுதேவநல்லூர் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்1
- தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமுல்படுத்தப்படுகிறது. இந்த தடைக்காலம் இன்று அதிகாலை 12 மணி முதல் அமுலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக சின்னமூட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 350-க்கும் அதிகமான விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. மீன் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு இந்த தடை விதிக்கப்படுகிறது.1
- மதுரை திருப்பரங்குன்றம் கிராமத்தினர் சார்பில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று (ஏப்.14)பாரம்பரியமாக நடந்து வரும் மலைக்கு பின்புறமுள்ள கோயில் நிலத்தில் நான்கு ஏர் பூட்டி உழும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிராமத்தினர் மற்றும் விவசாயிகள் நேற்று காலை குழந்தைகளுடன் புத்தாடைகள் அணிந்து, புதிய தார் குச்சி நுனியில் ஆணி அடித்து அதில் பூ சுற்றி, கோயிலில் சுவாமி தரிசனம் முடித்து மலையைச் சுற்றி வந்து 4 ஏர்களில் காளைகள் பூட்டி தென்பரங்குன்றத்தில் கோயில் நிலங்களை உழுதனர்.1