Shuru
Apke Nagar Ki App…
உலக புகழ் பெற்ற வேளாங்கன்னி பேராலயத்திற்க்கு நாள்தோறும் ஆயிரகணக்கானோர் வருகை தருகின்றனர். இந்த நிலையில் மாதா குளம் மெயின்ரோடு பகுதியில் டாஸ்மார்க் கடை உள்ளது. இந்த டாஸ்மார்க் கடை பள்ளி மற்றும் மருத்துவமனைக்கு மிக அருகான்மையிலும் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ளது இந்த நிலையில் டாஸ்மார்க் கடையை அப்புறப்படுத்த கோரி தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் முற்றுகை போராட்டம் நடை பெற்றது. மாதா குளம் அருகில் உள்ள டார்க் மார்க் முன்பு மாவட்ட செயலாளர் சுகுமார் தலைமையில் சுமார் 150 பேர் முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடனும் போலீஸ் சாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Chakravarthy
உலக புகழ் பெற்ற வேளாங்கன்னி பேராலயத்திற்க்கு நாள்தோறும் ஆயிரகணக்கானோர் வருகை தருகின்றனர். இந்த நிலையில் மாதா குளம் மெயின்ரோடு பகுதியில் டாஸ்மார்க் கடை உள்ளது. இந்த டாஸ்மார்க் கடை பள்ளி மற்றும் மருத்துவமனைக்கு மிக அருகான்மையிலும் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ளது இந்த நிலையில் டாஸ்மார்க் கடையை அப்புறப்படுத்த கோரி தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் முற்றுகை போராட்டம் நடை பெற்றது. மாதா குளம் அருகில் உள்ள டார்க் மார்க் முன்பு மாவட்ட செயலாளர் சுகுமார் தலைமையில் சுமார் 150 பேர் முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடனும் போலீஸ் சாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
More news from தமிழ்நாடு and nearby areas
- வேளாங்கண்ணியில் பள்ளி, மருத்துவமனை அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி தவெக முற்றுகை போராட்டம்: பேரிகார்டுயை அகற்றி உள்ளே நுழைய முயன்றவர்களை தடுத்து நிறுத்திய போலீசாருடன் வாக்குவாதம் நாகை மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்திற்கு செல்லும் பிரதான சாலையான மாதா குளம் மெயின் ரோடு பகுதியில் தனியார் பள்ளி மற்றும் மருத்துவமனைக்கு அருகில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த சாலையில் வழியாக பேராலயத்திற்கு வருகை தரும் நிலையில், இந்த இடத்தில் உள்ள டாஸ்மாக் கடை பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறப்படுகிறது.இதனை அப்புறப்படுத்த கோரி தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. கட்சி மாவட்ட செயலாளர் சுகுமார் தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடை முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பினர்.போராட்டக்காரர்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்றதை தொடர்ந்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பேரிகேடு அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது சிலர் பேரிகேடுகளை அகற்றி கடை முன் செல்ல முயன்று தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.டிஎஸ்பி ராமச்சந்திரமூர்த்தி தலைமையிலான போலீசார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, இது தொடர்பாக உரிய பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்பதன் பெயரில் போராட்டக்காரர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.1
- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா வையச்சேரி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன், ஸ்ரீமாயாண்டி அய்யனார், ஸ்ரீகருப்பண்ணசுவாமி, ஸ்ரீவீரனார்சுவாமி, ஸ்ரீமுனீஸ்வரசுவாமி, ஸ்ரீசப்தமாதா ஆகிய ஆலயங்களின் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் நடைபெற்று, முடிவுற்ற நிலையில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து கணபதி ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பூர்வாங்க பூஜைகள் உள்பட நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.. தொடர்ந்து மேள, தாளங்களுடன் வேத மந்திரங்கள் முழங்க, கடம்புறப்பட்டு கோயில்களின் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்று, மூலவர்களுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கிராமவாசிகள் நாட்டாண்மை மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை வையச்சேரி கிராமவாசிகள், நாட்டாண்மைகள்,உபயதாரர்ள்குலதெய்வ வழிபாட்டாளர்கள் விழாகுழுவினர்கள் செய்திருந்தனர்.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி மணப்பாறை தெற்கு ஒன்றியத்தில், அதிமுக சார்பில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா மற்றும் மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் அன்னதானமும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரவு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் பொது கூட்டம் நடைபெற்றது.1
- நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையத்தில் விவசாயம் சங்கத்தினர் சார்பாக திருமணிமுத்தாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டி மூன்று நாட்களாக தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் அவர்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த வாக்குறுதி அளித்துள்ளன என்று மூத்த தலைவர் நேரில் சென்று நேற்று மார்ச் 9 ம் தேதி மாலை 5 மணி அளவில் பேச்சுவார்த்தை நடத்ததில் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன1
- சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் விசாரணை கைதி ஆகாஷ் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்தி வரும் சாலை மறியல் போராட்டம் 24 மணி நேரத்தைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. இதனால் மதுரை–இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களுடன் அதிகாரிகள் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதும் உடன்பாடு எட்டப்படவில்லை. நள்ளிரவில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், அதிகாலையில் மானாமதுரை எம்.எல்.ஏ தமிழரசி ரவிக்குமார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதற்கிடையில் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவசர மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போராட்டம் தொடர்ந்து நடைபெறுவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.1
- மதுரை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஆகாஷ் என்ற பட்டியலின இளைஞர் காவல் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இது குறித்து புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிவகங்கை மாவட்ட காவல்துறை ஆகாஷ் என்ற இளைஞரை கொலை செய்துவிட்டது. இந்த மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் ஒரே சாதியினராக இருந்து கொண்டு, சாதி சங்கங்களைப் போல செயல்படுகின்றனர். ஏற்கனவே மடப்புரம் கோவில் காவலாளி காவல்துறையினரால் கொல்லப்பட்ட சுவடு மறைவதற்குள் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆகாஷ் என்ற இளைஞரின் காலை உடைத்தது காவல்துறைதான். ஆனால், அவர் பாலத்தில் இருந்து குதிக்க முயன்றதாக காவல்துறை பொய் சொல்கிறது என அவர் குற்றம் சாட்டினார்.1
- உலக புகழ் பெற்ற வேளாங்கன்னி பேராலயத்திற்க்கு நாள்தோறும் ஆயிரகணக்கானோர் வருகை தருகின்றனர். இந்த நிலையில் மாதா குளம் மெயின்ரோடு பகுதியில் டாஸ்மார்க் கடை உள்ளது. இந்த டாஸ்மார்க் கடை பள்ளி மற்றும் மருத்துவமனைக்கு மிக அருகான்மையிலும் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ளது இந்த நிலையில் டாஸ்மார்க் கடையை அப்புறப்படுத்த கோரி தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் முற்றுகை போராட்டம் நடை பெற்றது. மாதா குளம் அருகில் உள்ள டார்க் மார்க் முன்பு மாவட்ட செயலாளர் சுகுமார் தலைமையில் சுமார் 150 பேர் முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடனும் போலீஸ் சாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.1
- தஞ்சாவூர் மாவட்டம். பாபநாசம் தாலுக்கா, அய்யம்பேட்டை இந்தியன் சிட்டி ஸ்கூல் வளாகத்தில் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் மற்றும் அய்யம்பேட்டை நகர அரிமா சங்கம் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக சங்க மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் கருணாநிதி அனைவரையும் வரவேற்று பேசினார் சங்க மாநில தலைவர் முகமதுஇப்ராஹிம் சமூக நல்லிணக்க உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில்,உலக அமைதி மற்றும் ஒற்றுமைக்காக சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டது. பாபநாசம் வட்டாச்சியர் சந்தனவேல் மற்றும் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தினர்கள், அய்யம்பேட்டை அரிமா சங்கத்தினர்கள், விவசாயிகள், ஜமாஅத்தார்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியின் நிர்வாகிகள், இமாம்கள் உட்பட பலர் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.1
- மானாமதுரை அருகே இளைஞர் ஆகாஷ் மரணத்துக்கு நீதி கோரி தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் தேசிய நெடுஞ்சாலையில் நடத்தும் சாலை மறியல் போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. நூற்றுக்கணக்கானோர் சாலையில் அமர்ந்து முழக்கமிட்டதால் மதுரை–ராமேஸ்வரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய கோரி வலியுறுத்தப்பட்ட நிலையில், அப்பகுதியில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.1