Shuru
Apke Nagar Ki App…
தூத்துக்குடியில் ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில் ஆலயத்தில் பங்குனி மாதம் முன்னிட்டு நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து தூத்துக்குடி அடுத்த மட்டகடையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு சந்தனமாரியம்மன் ஆலயத்தில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் முதல் வாரத்தையையெட்டி மஹாலட்சுமி பூஜை எனும் திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். இதனை தொடர்ந்து இந்த ஆண்டு பங்குனி மாதம் முதலில் நடைபெற்ற 501 திருவிளக்கு பூஜையில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து 1000ற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு, குத்துவிளக்கை அம்மனாக பாவித்து சிறப்பு பூஜை, அர்ச்சனை செய்து அருள்மிகு சந்தனமாரியம்மனை வழிபட்டனர்.
மா.கணேஷ்
தூத்துக்குடியில் ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில் ஆலயத்தில் பங்குனி மாதம் முன்னிட்டு நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து தூத்துக்குடி அடுத்த மட்டகடையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு சந்தனமாரியம்மன் ஆலயத்தில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் முதல் வாரத்தையையெட்டி மஹாலட்சுமி பூஜை எனும் திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். இதனை தொடர்ந்து இந்த ஆண்டு பங்குனி மாதம் முதலில் நடைபெற்ற 501 திருவிளக்கு பூஜையில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து 1000ற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு, குத்துவிளக்கை அம்மனாக பாவித்து சிறப்பு பூஜை, அர்ச்சனை செய்து அருள்மிகு சந்தனமாரியம்மனை வழிபட்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- *தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள் சாமி அவர்களின் தலைமையில்... ஓட்டப்பிடாரம் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிகளுக்கு நேர்காணலின் போது.... அருகே வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பெத்துராஜ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜான் பிரிட்டோ அவர்கள்* தேசிய பணியில் A.X. ஜேம்ஸ் லாரன்ஸ் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை மாவட்ட தலைவர் மற்றும் ஓட்டப்பிடாரம் மத்திய வட்டார தலைவர்8
- Post by மா.கணேஷ்1
- நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் சமீபத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது இதன் காரணமாக மேற்கு ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டது இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கடும் அவதிப்பட்டு வருவதால் அப்பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்1
- தென்காசி நடுப்பேட்டை பள்ளிவாசல் அருகே விசிக சார்பில் ரமலானை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு பித்ரா அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது நிகழ்ச்சியை விசிக தென்காசி மண்டல செயலாளர் இசக்கி பாண்டியன் தலைமை வகித்து துவக்கி வைத்தார்1
- விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி செவல்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக நடைபெற்றது. பிரதோஷத்தை முன்னிட்டு சிவபெருமான் மற்றும் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதன்படி பால், தயிர், திருமஞ்சனம், விபூதி, சந்தனம், மஞ்சள், இளநீர், தேன், திருநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிவபெருமான் மற்றும் நந்தி பெருமான் வண்ண மலர்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த வழிபாட்டில் கோவில் அர்ச்சகர் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடத்தினார். இந்த பிரதோஷ வழிபாட்டில் செவல்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்து பக்தி பரவசத்தில் வழிபட்டனர். வழிபாடு நிறைவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.1
- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூரில் அமைக்கப்பட உள்ள மதுபானக் கூடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட பாஜக தலைவர் பாண்டித்துரை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பேக்கரி என்ற பெயரில் அனுமதி பெற்று ரகசியமாக மதுபானக் கூடம் அமைக்கும் முயற்சி நடக்கிறது என குற்றம் சாட்டினார். கோவில், ரயில்வே கேட் மற்றும் நெடுஞ்சாலை அருகே இது அமைவதால் பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது1
- மதுரை தெற்கு வாசல் என் எம் ஆர் பாலம் ஜெயவிலாஸ் ஷெட் அருகே இன்று (மார்ச்.16) மாலை வார்டு 86 பகுதியான கீரைத்துறை சுற்று வட்டாரங்களை சேர்ந்த பெண்கள் தங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் வருவதில்லை என்று கூறி காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த காவல் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் போராட்டக்காரர்கள் பேசி தண்ணீர் முறையாக வருவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.1
- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி நாதக வேட்பாளர் பால்ராஜ் பீடி சுற்றும் பெண்களிடம் தேர்தல் பரப்புரை செய்தார்1