Shuru
Apke Nagar Ki App…
ஒட்டன்சத்திரம் ரயில்வே நிலையம் அருகே இன்று தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் 256 ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
RAJA news
ஒட்டன்சத்திரம் ரயில்வே நிலையம் அருகே இன்று தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் 256 ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
More news from தமிழ்நாடு and nearby areas
- ஒட்டன்சத்திரம் ரயில்வே நிலையம் அருகே இன்று தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் 256 ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.1
- *திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை தவிர்க்கும் வகையில் வேகத்தடை அமைக்கும் பணி* திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலை கேரளா மாநிலத்தை இணைக்கும் முக்கிய சாலையாக விளங்கி வருகிறது. இதன் காரணமாக சாலையில் கூடுதல் வாகன போக்குவரத்து இருந்து வந்த போதிலும் இச்சாலை இது நாள் வரை இருவழிச் சாலையாக மட்டுமே உள்ளதாலும் அதி வேகமாக செல்லும் வாகனங்களினால் ஏற்படும் தொடர் விபத்தின் காரணமாக உயிர் பலி ஏற்பட்டு வந்த நிலையில் அதிவேகமாகச் செல்லும் வாகனங்களின் வேகத்தை குறைப்பதுடன், விபத்தையும், விபத்தினால் ஏற்படும் உயிர்பலிகளையும் தவிர்க்கும் வகையிலும் திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினரின் ஆலோசனையின் பேரில் நெடுஞ்சாலை துறையினர் சார்பாக திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சேடப்பட்டி பிரிவு, சாலைப்புதூர், மற்றும் அய்யம்பாளையம் பிரிவு ஆகிய பகுதிகளில் வேகத்தடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது.1
- அய்யலூரில் மாவீரன் வீரபாண்டியக் கட்டபொம்மன் பிறந்தநாள் விழா இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் வேடசந்தூர் தாலுகா அய்யலூரில் மாவீரன் வீரபாண்டியக் கட்டபொம்மன் பிறந்தநாள் விழா சுக்காம்பட்டி ஜமீன்தார் நந்தகுமார் பாண்டியர் அவர்கள் தலைமையில் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய இராஜ கம்பள சமுதாய பொதுமக்கள்..... இந்நிகழ்ச்சியில் அய்யலூர் தக்காளிக் கடை சுப்பாநாயக்கர்.... கொம்பேறிபட்டி ரெங்கமலை..... மணியக்காரன்பட்டி சின்னத்தம்பி நாயக்கர் நடத்துனர் பொம்மிநாயக்கர் அப்பிநாயக்கன்பட்டி ஆண்டிவேல்சாமி.... மாமரத்துப்பாண்டி பாண்டி எத்தலப்ப நாயக்கனூர் ராமசாமி சின்னச்சாமி சுப்பையா..... ஒண்டிபொம்மன்பட்டி உரக்கடை வடிவேல்.... பஞ்சந்தாங்கி முத்துவேல் மற்றும் பாக்கியராஜ் சுப்பிரமணி அய்யலுகிருஷ்ணா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்1
- சிபிஐ எம்எல் கட்சி பழனியில் இன்றுமாலை 6 மணி அளவில் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் மாநிலச் செயலாளர் மரியாதைக்குரிய தோழர் பழ ஆசை தம்பி அவர்கள் அரசியல் விளக்க உரையாற்றியபோது.1
- தேனி அருகே சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 267 வது பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை தேனி அருகே சாடையால்பட்டியில் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலை அமைந்துள்ளது. மேலும் வீரபாண்டிய கட்டபொம்மனின் 267 வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய திருவருவ சிலைக்கு அக்கிராமத்தின் சார்பாக முளைப்பாரி எடுத்தும், தேவராட்டங்கள் ஆடியும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .தொடர்ந்து தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் , திமுக , அதிமுக , மதிமுக , பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகளும் , பல்வேறு சமுதாய தலைவர்களும் வீரபாண்டிய கட்டபொம்மனின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்,இந்த விழாவுக்கு வருகை புரிந்த அனைவரையும் கிராமத்தின் சார்பில் தேவராட்டம் சிலம்பாட்டம் உட்பட பல்வேறு கிராமிய கலைகள் மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை சந்திரன், தங்கவேல் ,துரைராஜ் மணிகண்டன் தங்கராஜ் ,சந்திரசேகரன், ஆண்டவர், பொம்மை சாமி, பாண்டியராஜன் லட்சுமணன் , உப்புக் கோட்டை சுருளி மணி மற்றும் கிராம மக்கள் சார்பாக விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.1
- புதுக்கோட்டையில் ஹெலிகாப்டர் ஒத்திகை தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் நிறைவு விழா பள்ளத்தி வயல் பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற உள்ளது. இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்க உள்ளார். இந்நிலையில் அதற்கான ஹெலிகாப்டர் ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது. இதில் மேடை அருகே ஹெலிகாப்டர் இறங்குவதற்கு தளம் அமைத்திருந்தனர். திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் வந்து மேடை அருகே நிறுத்தப்பட்டது.1
- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். நேற்று இரவு பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மலைக்கோவிலை சுற்றி கிரிவலம் வந்தனர். மலையை சுற்றிலும் பக்தர்களுக்கு அன்னதானம் ஏற்பாடும் செய்யப்பட்டு இருந்தது1
- திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மக்கள் ஒற்றுமை குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கி வந்தார். இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்டம் மக்கள் ஜாதி மத வேறுபாடு இன்றி பழகி வருவதாக பேட்டியளித்தார்.1