Shuru
Apke Nagar Ki App…
நாகை: வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வரவேண்டிய விஜய் வரவில்லை பரபரப்பு: நாகை: உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் வருவதாக தகவல் வெளிவந்ததன் பேரில் ரசிகர்கள் மற்றும் கட்சியின் தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக பேராலயத்திற்கு விரைந்து வந்து இரவு முழுவதும் காத்துக் கிடந்து முதல் பூஜையில் விஜய் வழிபடுவார் என தகவலை சமூக வலைதளங்களில் பரப்ப கூட்டங்களை கட்டுக்கடங்காமல் கூட்டங்கள் அலைமோதி விஜய் டிவி கே விஜய் டிவி கே என்று கோஷமிட்டு கூச்சலிட்டனர். ஒரு வழியாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வரவில்லை என்று தெரிந்தும் கூட்டம் விலகிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
Chakravarthy
நாகை: வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வரவேண்டிய விஜய் வரவில்லை பரபரப்பு: நாகை: உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் வருவதாக தகவல் வெளிவந்ததன் பேரில் ரசிகர்கள் மற்றும் கட்சியின் தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக பேராலயத்திற்கு விரைந்து வந்து இரவு முழுவதும் காத்துக் கிடந்து முதல் பூஜையில் விஜய் வழிபடுவார் என தகவலை சமூக வலைதளங்களில் பரப்ப கூட்டங்களை கட்டுக்கடங்காமல் கூட்டங்கள் அலைமோதி விஜய் டிவி கே விஜய் டிவி கே என்று கோஷமிட்டு கூச்சலிட்டனர். ஒரு வழியாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வரவில்லை என்று தெரிந்தும் கூட்டம் விலகிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
More news from தமிழ்நாடு and nearby areas
- தஞ்சாவூர் மாவட்டம் பசுபதிகோவில் ஊராட்சியில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்து ஏற்பாட்டில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தலை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளருமான ரெத்தினசாமி ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் அதனைத் தொடர்ந்து தர்பூசணி நீர்மோர் பானக்கம் மற்றும் பல வகைகளை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் கோபிநாதன் பொதுக்குழு உறுப்பினர் மோகன் திருவையாறு ஒன்றிய செயலாளர் இளங்கோவன் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணைச் செயலாளர் சதீஷ் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.1
- திருவெறும்பூர் அருகே உள்ள தெற்கு காட்டூர் அழகு முத்து மாரியம்மன் கோவில் 42ம் ஆண்டு திருவிழா நேற்று விமர்சையாக நடந்தது முன்னைக சித்திரை மாதம் 11 ஆம் தேதி (24-04-2026) காப்பு கட்டுதல் நடந்தது அதன் தொடர்ச்சியாக பாப்பாக்குறிச்சி கிராமத்தில் உள்ள மதுரை வீரன் சுவாமி கோவிலிலில் இருந்து 'சக்தி வெள்ளிகரகம்' சங்கிலிகருப்பு புறப்பட்டு காவேரிநகர் அழகு சக்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து பூச்சொரிதல், அலகு காவடி, பால்குடம், தீர்த்த குடம் அம்பாள் அலங்காரத்துடன் அழகு முத்து மாரியம்மன் கோயில் வந்தடைந்தது அங்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு செய்தனர். 2 ம் தேதியான மாலை அன்னதானமும் இரவு 6.00 உற்சவ அம்பாள் குதிரை வாகனத்தில், 'சக்தி வெள்ளிகரகம் 'சங்கிலி கருப்பு வீதி உலா மற்றும் குட்டிக்குடித்தல் நிகழ்ச்சி நடைபெறும். இதில் பக்தர்கள் தங்களது இல்லத்திலும் கோயிலிலும் ஆடு, கோழி பழியிட்டு நேர்த்திக் கடன் செலுத்தலாம். 3ம் தேதி காலை மேல் மஞ்சள் நீராட்டு விழாவும் 8.00 மணிக்கு சங்கிலி கருப்புக்கு படையலிட்டு மாபெரும் அன்னதானம் நடைபெறும். இதில் காட்டூர் சுற்றுவட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்..1
- அன்னவாசல் சுற்று வட்டார பகுதிகளில் திடிரென பலத்த காற்றுடன் மழை பெய்தது பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் அன்னவாசல், இலுப்பூர், முக்கண்ணாமலைப்பட்டி, வயலோகம், பரம்பூர், சித்தன்னவாசல், குடுமியான்மலை, மெய்வழிச்சாலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக சித்திரை வெயில் வாட்டி வதைத்து வந்தது இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மிகவும் சிரமடைந்தனர் இந்தநிலையில் நேற்று மாலை அன்னவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது இதனைத் தொடர்ந்து திடிரென பலத்த காற்றுடன் மழை பெய்தது ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மழையால் குளிர்ச்சியான சூழல் உருவாகியது இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் இந்த தொடர் காற்று மழையால் முக்கண்ணாமலைப்பட்டி சக்கரன்குளம் சாலையில் இருந்த மரம் ஒன்று சாலையில் விழுந்தது இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சிரமம் அடைந்தனர் இதேபோன்று அன்னவாசல் இலுப்பூர் சாலையோரங்களில் இருந்த மரக்கிளைகள் உடைந்து சாலைகளில் விழுந்தது இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர் பலத்த காற்று வீசியதால் அன்னவாசல் சுற்று வட்டார பகுதியில் மின் தடை ஏற்பட்டது இந்த மழையால் முக்கண்ணாமலைப்பட்டி வாரசந்தையில் தண்ணீர் புகுந்தது தொடர்ந்து மழை பெய்ததால் பொதுமக்கள் கூட்டம் இல்லாததால் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது இதனால் வியபாரிகள் சிரமம் அடைந்தனர்3
- கல்வராயன் மலையில் – கனமழையால் வீடு சேதம், அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினர் உயிர் தப்பினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை வட்டத்திற்குட்பட்ட இன்னாடு ஊராட்சியில் அமைந்துள்ள நிலவூர் கிராமத்தில் இன்று காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த திடீர் காலநிலை மாற்றத்தால், மாணிக்கம் (S/o லட்சுமணன்) என்பவரின் சீட்டு வீட்டின் அருகில் இருந்த பனைமரம் பாதியில் முறிந்து வீட்டு மீது சரிந்தது. இந்த விபத்தில் வீட்டின் மேற்கூரை முற்றிலும் சேதமடைந்துள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில் வீட்டிற்குள் இருந்த குடும்பத்தினரைச் சேர்ந்த 6க்கும் மேற்பட்டோர் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான நிலை ஏற்பட்டது. சம்பவத்தைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக வந்து உதவி செய்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக பழைய மரங்கள் அருகில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.1
- திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கடந்த சில தினங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் மாலை நேரத்தில் கருமேகக்கூட்டங்கள் திரண்டு ரம்மியமான சூழல் நிலவில் நிலையில் திடீரென மின்னல் வெட்டி,இடியுடன், மழை பெய்ய ஆரம்பித்தது ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் கனமழையாக கொட்டித்தீர்த்தது. சுமார் சுமார் 1 ½ மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மழையால் சாலையின் பிரதான சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதே போல் மணப்பாறை பேருந்து நிலையம் முன்பு குளம் போல் தேங்கிய மழைநீரால் வாகனங்கள் ஊர்ந்து சென்றது. சாலையோர கடைகளுக்கு முன்பும் மழைநீர் சூழ்ந்து கொண்டது. கனமழை கொட்டித் தீர்த்தால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் சுற்றியுள்ள பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயிலாக இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை முதல் புழுக்கமாகவும் அதனைத் தொடர்ந்து மாலை 3:45 மணி வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் 5:25 மணிமுதல் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கி காணப்பட்டது.1
- மணப்பாறை அருகே வீட்டிற்கு மின்சாரம் வரவில்லை என்று, மின்சார வாரிய அனுமதி பெறாமல் தானாக மின் மாற்றியில் பீஸ் போட ஏறியவர் மின்மாற்றியில் மின்சாரம் தாக்கி பலி. திருச்சி மாவட்டம். மணப்பாறையை அடுத்த பூலாம்பட்டியை சேர்ந்தவர் இன்னாசி (50) இவரது மனைவி சகாயமேரி என்பவருடன் திருமணம் ஆகி சுமார் 25 ஆம் ஆண்டு நிலையில் இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். பிள்ளைகள் இருவருக்கும் திருமணம் ஆகி அவர் தனித்தனியே குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், இறந்து போன இன்னாசி N பூலாம்பட்டி மனைவியுடன் தனியாக வசித்துக் வசித்து வருகிறார். இவர் கொத்தனார் வேலை செய்து கொண்டிருந்தார். இன்று தனது வீட்டில் மின்சாரம் வரவில்லை என்று, தனது வீட்டிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள N.பூலாம்பட்டி SS no:1 -மின்மாற்றியில் பீஸ் போடுவதற்காக ஏறியவர் மின்சாரம் தாக்கி மின்மாற்றியின் மேலேயே உயிரிழந்துள்ளார். இதைப் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர் . இறந்தவரின் உடல் உடல் கூராய்வு ஆய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பப்பட்டன.1
- கடந்த 10 ஆண்டுகளாக பாக்கு, மிளகு, காபி போன்ற பயிர்களை அதிக அளவில் பயிரிட்டு வந்த கல்வராயன் மலை விவசாயிகள், தற்போது கடும் வெயிலின் தாக்கத்தால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். கடந்த ஆண்டு நடவு செய்யப்பட்ட பாக்கு மற்றும் காபி செடிகள் கருகி சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.1
- திருச்சி மாவட்டம் மருங்காபுரியை அடுத்த தொட்டியப்பட்டியில் பாம்பாளம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் விளக்கு பூஜை நடைபெற்றன. இதில் இப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாம்பாளம்மன் அருளை பெற்று சென்றனர்.1