logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வெண்ணந்தூர் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் இன்று ஜனவரி 8 வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பொங்கல் பரிசு பொருளான சர்க்கரை, கரும்பு, பச்சரிசி, வேட்டி சேலை மற்றும் ரொக்கப் பணம் ரூபாய் 3000 வழங்கப்பட்டு வருகின்றன குடும்ப அட்டைதாரர்கள் மகிழ்ச்சியுடன் பொங்கல் பரிசை வாங்கி வருகிறார்கள்

2 days ago
user_கணேஷ் G
கணேஷ் G
Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
2 days ago
648070d4-90e0-401e-a371-4f2f31fb9ced
bbfd8b15-1078-4182-aec7-18886c15e41b
d9ad21b6-b9f7-4a3c-998a-57e40ae46ed7
a34ac37a-f6a4-43a8-87c9-62298c52cd02

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வெண்ணந்தூர் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் இன்று ஜனவரி 8 வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பொங்கல் பரிசு பொருளான சர்க்கரை, கரும்பு, பச்சரிசி, வேட்டி சேலை மற்றும் ரொக்கப் பணம் ரூபாய் 3000 வழங்கப்பட்டு வருகின்றன குடும்ப அட்டைதாரர்கள் மகிழ்ச்சியுடன் பொங்கல் பரிசை வாங்கி வருகிறார்கள்

More news from தமிழ்நாடு and nearby areas
  • நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கே எஸ் ஆர் கல்வி நிறுவனங்களில் தமிழர் மரபு சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் இயக்குனர் ராஜம்மாள் நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். திரைப்பட நடிகர்கள் பிக் பாஸ் புகழ் ஆரி, அதுல்யா ரவி, பிளாக் ஷீப் யூட்யூப் சேனல் விக்னேஷ், நாட்டுப்புற கலை பாடல் பாடகர் அந்தோணி தாசன் கலைக்குழு உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். சுமார் 10,000 மேற்பட்ட மாணவ மாணவிகள் தமிழர் மரபு சமத்துவ பொங்கல் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியினை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கே எஸ் ஆர் கல்வி நிறுவன அதிகாரிகள் முதல்வர்கள் ஆசிரியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்
    1
    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கே எஸ் ஆர் கல்வி நிறுவனங்களில் தமிழர் மரபு சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் இயக்குனர் ராஜம்மாள் நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். திரைப்பட நடிகர்கள் பிக் பாஸ் புகழ் ஆரி, அதுல்யா ரவி, பிளாக் ஷீப் யூட்யூப் சேனல் விக்னேஷ், நாட்டுப்புற கலை பாடல் பாடகர் அந்தோணி தாசன் கலைக்குழு உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். சுமார் 10,000 மேற்பட்ட மாணவ மாணவிகள் தமிழர் மரபு சமத்துவ பொங்கல் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியினை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கே எஸ் ஆர் கல்வி நிறுவன அதிகாரிகள் முதல்வர்கள் ஆசிரியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்
    user_Balaji studio
    Balaji studio
    Video Creator திருச்செங்கோடு, நாமக்கல், தமிழ்நாடு•
    12 hrs ago
  • தைப்பொங்கல் பண்டிகை முன்னிட்டு சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் வார சந்தையில் 8 கோடி ரூபாய்க்கு ஆடு விற்பனை. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரம் பேரூராட்சி சார்பாக வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இவ்வாறு சந்தையில் சேலம்,நாமக்கல்,தர்மபுரி சுற்றுவட்டார மாவட்டங்களிலேயே பெரிய ஆட்டுச் சந்தை கூடுகிறது சேலம்,நாமக்கல்,ஈரோடு,கரூர்,தர்மபுரி,கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும் எடப்பாடி,கொங்கணாபுரம்,சின்னப்பம்பட்டி,சங்ககிரி,ஆட்டையாம்பட்டி உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் வளர்க்க ஆடுகளைக் கொண்டுவந்து விற்பனை செய்தும் வளர்ப்பதற்காக ஆடுகளை வாங்கி செல்கின்றனர். கொங்கணாபுரம் வாரச் சந்தைக்கு சுமார் 20000 ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.20000 ஆடுகள் கொண்டு வந்திருந்த நிலையில் 18000 ஆடுகள் இன்று விற்பனையானது.சராசரியாக சந்தையில் 10 கிலோ எடையுள்ள செம்மறி ஆடு, வெள்ளாடு ரூபாய் 6,800 முதல் 8,000 வரையும், 20 கிலோ எடை உள்ள செம்மறி ஆடு, வெள்ளாட்டு கிடாய்கள் ரூபாய் 12,600 முதல் 16,500 வரை விலைபோனது . அதேபோல 30 கிலோ எடையுள்ள செம்மறி ஆடு, வெள்ளாட்டு கிடாய் ரூபாய் 18 ஆயிரம் முதல் ரூபாய் 26 ஆயிரம் வரை விற்பனையானது. இன்று மட்டும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கொங்கணாபுரம் வாரச்சந்தையில் சுமார் 8 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது.இதனால் ஆடு வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்...
    1
    தைப்பொங்கல் பண்டிகை முன்னிட்டு சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் வார சந்தையில் 8 கோடி ரூபாய்க்கு ஆடு விற்பனை.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரம் பேரூராட்சி சார்பாக வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இவ்வாறு சந்தையில் சேலம்,நாமக்கல்,தர்மபுரி சுற்றுவட்டார மாவட்டங்களிலேயே பெரிய ஆட்டுச் சந்தை கூடுகிறது சேலம்,நாமக்கல்,ஈரோடு,கரூர்,தர்மபுரி,கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும் எடப்பாடி,கொங்கணாபுரம்,சின்னப்பம்பட்டி,சங்ககிரி,ஆட்டையாம்பட்டி உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் வளர்க்க ஆடுகளைக் கொண்டுவந்து விற்பனை செய்தும் வளர்ப்பதற்காக ஆடுகளை வாங்கி செல்கின்றனர்.
கொங்கணாபுரம் வாரச் சந்தைக்கு சுமார் 20000 ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.20000 ஆடுகள் கொண்டு வந்திருந்த நிலையில் 18000 ஆடுகள் இன்று விற்பனையானது.சராசரியாக சந்தையில் 10 கிலோ எடையுள்ள செம்மறி ஆடு, வெள்ளாடு ரூபாய் 6,800 முதல் 8,000 வரையும், 20 கிலோ எடை உள்ள செம்மறி ஆடு, வெள்ளாட்டு கிடாய்கள் ரூபாய் 12,600 முதல் 16,500 வரை விலைபோனது . அதேபோல 30 கிலோ எடையுள்ள செம்மறி ஆடு, வெள்ளாட்டு கிடாய் ரூபாய் 18 ஆயிரம் முதல் ரூபாய் 26 ஆயிரம் வரை விற்பனையானது.
இன்று மட்டும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கொங்கணாபுரம் வாரச்சந்தையில் சுமார் 8 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது.இதனால் ஆடு வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்...
    user_Srianand
    Srianand
    Journalist எடப்பாடி, சேலம், தமிழ்நாடு•
    16 hrs ago
  • ஆத்தூர் உழவர் சந்தையில் விவசாயிகள் உள்ளிறுப்பு போராட்டம்.
    7
    ஆத்தூர் உழவர் சந்தையில் விவசாயிகள் உள்ளிறுப்பு போராட்டம்.
    user_REPORTER RAHMAN
    REPORTER RAHMAN
    Journalist Attur, Salem•
    19 hrs ago
  • கரூர் மாவட்டம் குளித்தறையில் ஏபிஎஸ் ஜவுளிக்கடை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு விலை இல்லா வேட்டி சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இந்நிகழ்வில் குளித்தலை நகரில் உள்ள நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு குளித்தலை ஏபிஎஸ் ஜவுளி நிறுவனம் உரிமையாளர் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அவர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறி இலவச வேட்டி சேலை வழங்கினார்
    2
    கரூர் மாவட்டம் குளித்தறையில் ஏபிஎஸ் ஜவுளிக்கடை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு விலை இல்லா வேட்டி சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இந்நிகழ்வில் குளித்தலை நகரில் உள்ள நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு குளித்தலை ஏபிஎஸ் ஜவுளி நிறுவனம் உரிமையாளர் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அவர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறி இலவச வேட்டி சேலை வழங்கினார்
    user_கருணாநிதி
    கருணாநிதி
    Reporter Kulithalai, Karur•
    5 hrs ago
  • ஜனநாயகன் படம் வெளியிடாதது பாஜகவுக்கு நஷ்டம், திமுகவுக்குத்தான் லாபம்-விஜய் தரப்பினர் யாரும் பேசாமல் இருப்பதால், காணவில்லை அறிவிப்புத்தான் கொடுக்க வேண்டும் என மொரப்பூரில் பாஜக நிர்வாகி நடிகை கஸ்தூரி பேட்டி.
    1
    ஜனநாயகன் படம் வெளியிடாதது பாஜகவுக்கு நஷ்டம், திமுகவுக்குத்தான் லாபம்-விஜய் தரப்பினர் யாரும் பேசாமல் இருப்பதால், காணவில்லை அறிவிப்புத்தான் கொடுக்க வேண்டும் என மொரப்பூரில் பாஜக நிர்வாகி நடிகை கஸ்தூரி பேட்டி.
    user_Periyasamy
    Periyasamy
    Journalist Dharmapuri, Tamil Nadu•
    6 hrs ago
  • ஜனநாயகன் படம் வெளியிடாதது பாஜகவுக்கு நஷ்டம், திமுகவுக்குத்தான் லாபம்-விஜய் தரப்பினர் யாரும் பேசாமல் இருப்பதால், காணவில்லை அறிவிப்புத்தான் கொடுக்க வேண்டும் என மொரப்பூரில் பாஜக நிர்வாகி நடிகை கஸ்தூரி பேட்டி. தருமபுரி மாவட்டம் அரூர் பாஜக சார்பில் மோடி பொங்கல் மொரப்பூரில் நடைபெற்றது. இந்த பொங்கல் விழாவில் பாஜகவின் கலை கலாச்சார பிரிவு மாநில செயலாளர் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டார். இந்த பொங்கல் விழாவிற்கு வந்த நடிகை கஸ்தூரியை பாஜகவினர் மாட்டு வண்டியில் அழைத்து வந்தனர். மேலும் பொங்கல் விழாவில் நடைபெற்ற வள்ளி கும்மி ஆட்டத்தில் நடிகை கஸ்தூரி குழுவினரோடு இணைந்து கும்மி ஆடினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகை கஸ்தூரி, தணிக்கை குழு எந்த படத்திற்கு கட்டீப்பாடுகள் விதிக்கவில்லை. காங்கிரஸ், திமுகவினருக்கு நான் சொல்ல நினைக்கிறேன். அறநிலையத் துறையில் அரசு குறிக்கீடு, கோயில் நிர்வாகத்தில் அரசு குறுக்கீடு என தமிழ்நாட்டில் இருக்கிறதனால், மத்திய அரசும் எல்லாத் துறையிலும் தலையிடும் என்று நினைக்க வேண்டாம். மத்திய அரசில் எல்லாமே நியாயமான முறையில் நடக்கிறது. தணிக்கை துறை ஐஏஎஸ் அதிகாரி பாலமுரளி தலைமையில் நடைபெறுகிறது. அவர் ரிவைஸிங் கமிட்டிக்கு அனுப்பி இருப்பதில் யாரும் தலையிட முடியாது. திமுகவை பொறுத்தவரையில் எல்லா பிரச்சனைகளிலும் அவர்கள் நேரடியாக தலையிட மாட்டார்கள். என்னுடைய அனுபவத்தில் நான் சொல்கிறேன். ஒரு புகார் எங்கிருந்து வருகிறது என்று தெரியாது ஆனால் அதனை ஆழ்ந்து பின் தொடர்ந்தால் அதன் உண்மை தன்மையை புரிய வரும். எப்பொழுதும் திமுக வெளிப்படையாக அதில் செயல்படாது. ஜனநாயகன் படம் வெளியிடாதது, காலதாமதம் ஆவது, பாஜகவுக்கு தான் நஷ்டம். இதில் திமுகவுக்கு தான் லாபம். நீதிமன்றம் செல்வது, லிஸ்டிலே இல்லாத ஒன்று. விஜய் தரப்பினர் நீதிமன்றத்திற்கு செல்வதில் ஆராய்ந்து சென்றிருக்க வேண்டும். இதனை சென்சாரிலேயே முடித்திருந்தால், இன்று திரைப்படம் வெளியிடப்பட்டிருக்கும். நான் இதனை நினைத்து வருத்தப்படுகிறேன். ஆதங்கப்படுகிறேன். நான் விஜய்யின் ரசிகையாக வெளிநாட்டிலிருந்து எல்லா படங்களையும் முதல் நாளை பார்த்திருக்கிறேன். காவலன் படத்திற்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டபோது, அவரை பாதிக்கப்பட்டவராக சிம்பதியோடு பார்த்தோம். ஆனால் இப்போது அவர் கம்முனு (அமைதியாக) இருக்கிறார். இவரை பாதிக்கப்பட்டவராக பார்ப்பதா? இல்லை செயலிழந்தவராக பார்ப்பதா? பெராலிக்ஸ் (முடக்கு வாதம்) வந்தவர் போல இருக்கிறார். யார் இறந்தாலும் பேசுவதில்லை. 41 பேர் இறந்த பிறகு நான்கு நாள் கழித்து யோசித்து பேசுகிறார். அவர் படத்துக்கு ஒரு பிரச்சனை வந்தாலும், பேசாமல் இருக்கிறார். அங்கே டெல்லி போய் விதவிதமாக பேசியவர்கள், கூட்டத்தில் பேசியவர்கள் எல்லாம், எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. சென்சார் நீதிமன்றமானால் கூட, எதாவது தெரியனுமில்ல. காணவில்லை அறிவிப்பு தான் போடனும். இப்ப எனக்கே ஒரு சந்தேகம் வருகிறது. உங்க பிரச்சனைக்கு நீங்க சும்மா இருக்கீங்க, நாளைக்கு எந்த பிரச்சினைக்கு என்ன பண்ணுவீங்க. உங்களுக்காக, உங்க பிரச்சனைக்காக பாஜக அதிமுக தலைவர்கள் பேசுகிறார்கள். நீங்க அப்ப கூட பேசவில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தலை மென் வைத்து புதிய திட்டங்களை அறிவித்து வருகிறார். கடந்த ஒரு மாதமாக தமிழ்நாட்டில் போராட்டமாகவே இருக்கிறது. அரசு ஆசிரியர்கள், செவிலியர்கள் என எல்லோரும் போராடி வருகின்றனர். செவிலியர்களுக்கு ஒரு சப்பை கட்டு செய்து, 500 ஆர்டர் மட்டும் கொடுத்துள்ளனர். இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. ஜாக்டோ ஜியோ ஆறாம் தேதி போராட்டத்தை சரி கட்டி உள்ளார்கள். ஆனால் பழைய பென்சன் திட்டத்தை கொடுக்கவில்லை. இது எப்ப திரும்பும் வெடிக்க போவது என்று தெரியவில்லை. தற்போது ஜனவரி மாதம் பிறந்ததிலிருந்து பத்து லட்சம் மடிக்கணினி, மகளிர் உதவி தொகை என பல திட்டங்களை கொடுத்து வருகிறார் முதலமைச்சர். 404 வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக சொல்கிறார்கள். 99 வாக்குறுதிகள் நிறைவேற்றியதாக ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். அங்கே கணக்கில் வீக் என நினைக்கிறேன். ஏனென்றால் நான் 504 வாக்குறுதியில் 99 சதவீதம் என்றால், ஏறத்தாழ 499 வாக்குறுதிகள். இது நூறு வாக்குறுதிகளை கூட நிறைவேற்றி இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. 404 வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை என்பதை தான், நிறைவேற்றியதாக மாற்றி சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன். நானும் தேடித்தேடி பார்க்கிறேன் என கஸ்தூரி தெரிவித்தார்.
    1
    ஜனநாயகன் படம் வெளியிடாதது பாஜகவுக்கு நஷ்டம், திமுகவுக்குத்தான் லாபம்-விஜய் தரப்பினர் யாரும் பேசாமல் இருப்பதால், காணவில்லை அறிவிப்புத்தான் கொடுக்க வேண்டும் என மொரப்பூரில் பாஜக நிர்வாகி நடிகை கஸ்தூரி பேட்டி.
தருமபுரி மாவட்டம் அரூர் பாஜக சார்பில் மோடி பொங்கல் மொரப்பூரில் நடைபெற்றது. இந்த பொங்கல் விழாவில் பாஜகவின் கலை கலாச்சார பிரிவு மாநில செயலாளர் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டார்.  இந்த பொங்கல் விழாவிற்கு வந்த நடிகை கஸ்தூரியை பாஜகவினர் மாட்டு வண்டியில் அழைத்து வந்தனர். மேலும் பொங்கல் விழாவில் நடைபெற்ற வள்ளி கும்மி ஆட்டத்தில் நடிகை கஸ்தூரி குழுவினரோடு இணைந்து கும்மி ஆடினார். 
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகை கஸ்தூரி, 
தணிக்கை குழு எந்த படத்திற்கு கட்டீப்பாடுகள் விதிக்கவில்லை.
காங்கிரஸ், திமுகவினருக்கு நான் சொல்ல நினைக்கிறேன்.
அறநிலையத் துறையில் அரசு குறிக்கீடு, கோயில் நிர்வாகத்தில் அரசு குறுக்கீடு என தமிழ்நாட்டில் இருக்கிறதனால், மத்திய அரசும் எல்லாத் துறையிலும் தலையிடும் என்று நினைக்க வேண்டாம். மத்திய அரசில் எல்லாமே நியாயமான முறையில் நடக்கிறது. 
தணிக்கை துறை ஐஏஎஸ் அதிகாரி பாலமுரளி தலைமையில் நடைபெறுகிறது. அவர் ரிவைஸிங் கமிட்டிக்கு அனுப்பி இருப்பதில் யாரும் தலையிட முடியாது. 
திமுகவை பொறுத்தவரையில் எல்லா பிரச்சனைகளிலும் அவர்கள் நேரடியாக தலையிட மாட்டார்கள். என்னுடைய அனுபவத்தில் நான் சொல்கிறேன். ஒரு புகார் எங்கிருந்து வருகிறது என்று தெரியாது ஆனால் அதனை ஆழ்ந்து பின் தொடர்ந்தால் அதன் உண்மை தன்மையை புரிய வரும். எப்பொழுதும் திமுக வெளிப்படையாக அதில் செயல்படாது.  ஜனநாயகன் படம் வெளியிடாதது, காலதாமதம் ஆவது, பாஜகவுக்கு தான் நஷ்டம். இதில் திமுகவுக்கு தான் லாபம். நீதிமன்றம் செல்வது, லிஸ்டிலே இல்லாத ஒன்று.  விஜய் தரப்பினர் நீதிமன்றத்திற்கு செல்வதில் ஆராய்ந்து சென்றிருக்க வேண்டும். இதனை சென்சாரிலேயே முடித்திருந்தால்,  இன்று திரைப்படம் வெளியிடப்பட்டிருக்கும்.  நான் இதனை நினைத்து வருத்தப்படுகிறேன். ஆதங்கப்படுகிறேன். நான் விஜய்யின் ரசிகையாக வெளிநாட்டிலிருந்து எல்லா படங்களையும் முதல் நாளை பார்த்திருக்கிறேன். காவலன் படத்திற்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டபோது, அவரை பாதிக்கப்பட்டவராக சிம்பதியோடு பார்த்தோம். ஆனால் இப்போது அவர் கம்முனு (அமைதியாக) இருக்கிறார். இவரை பாதிக்கப்பட்டவராக பார்ப்பதா? இல்லை செயலிழந்தவராக பார்ப்பதா? பெராலிக்ஸ் (முடக்கு வாதம்) வந்தவர் போல இருக்கிறார். யார் இறந்தாலும் பேசுவதில்லை. 41 பேர் இறந்த பிறகு நான்கு நாள் கழித்து யோசித்து பேசுகிறார். அவர் படத்துக்கு ஒரு பிரச்சனை வந்தாலும், பேசாமல் இருக்கிறார். அங்கே டெல்லி போய் விதவிதமாக பேசியவர்கள், கூட்டத்தில் பேசியவர்கள் எல்லாம், எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. சென்சார் நீதிமன்றமானால் கூட, எதாவது தெரியனுமில்ல.  காணவில்லை அறிவிப்பு தான் போடனும். இப்ப எனக்கே ஒரு சந்தேகம் வருகிறது. உங்க பிரச்சனைக்கு நீங்க சும்மா இருக்கீங்க, நாளைக்கு எந்த பிரச்சினைக்கு என்ன பண்ணுவீங்க. உங்களுக்காக, உங்க பிரச்சனைக்காக பாஜக அதிமுக தலைவர்கள் பேசுகிறார்கள். நீங்க அப்ப கூட பேசவில்லை.
முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தலை மென் வைத்து புதிய திட்டங்களை அறிவித்து வருகிறார். கடந்த ஒரு மாதமாக தமிழ்நாட்டில் போராட்டமாகவே இருக்கிறது. அரசு ஆசிரியர்கள், செவிலியர்கள் என எல்லோரும் போராடி வருகின்றனர். செவிலியர்களுக்கு ஒரு சப்பை கட்டு செய்து, 500 ஆர்டர் மட்டும் கொடுத்துள்ளனர். இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. ஜாக்டோ ஜியோ ஆறாம் தேதி போராட்டத்தை சரி கட்டி உள்ளார்கள். ஆனால் பழைய பென்சன் திட்டத்தை கொடுக்கவில்லை. இது எப்ப திரும்பும் வெடிக்க போவது என்று தெரியவில்லை. தற்போது ஜனவரி மாதம் பிறந்ததிலிருந்து பத்து லட்சம் மடிக்கணினி, மகளிர் உதவி தொகை என பல திட்டங்களை கொடுத்து வருகிறார் முதலமைச்சர்.
404 வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக சொல்கிறார்கள். 99 வாக்குறுதிகள் நிறைவேற்றியதாக ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். அங்கே கணக்கில் வீக் என நினைக்கிறேன். 
ஏனென்றால் நான் 504 வாக்குறுதியில் 99 சதவீதம் என்றால், ஏறத்தாழ 499 வாக்குறுதிகள். இது நூறு வாக்குறுதிகளை கூட நிறைவேற்றி இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. 404 வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை என்பதை தான், நிறைவேற்றியதாக மாற்றி சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன். நானும் தேடித்தேடி பார்க்கிறேன் என கஸ்தூரி தெரிவித்தார்.
    user_G Krishnan
    G Krishnan
    Journalist Dharmapuri, Tamil Nadu•
    7 hrs ago
  • ஒகேனக்கல் ஆற்றில் நீர் வரத்து சரிவு தர்மபுரி மவட்டம் பென்னாகரம் கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பொழியும் பருவமழையின் அளவைப் பொறுத்து நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக காணப்படுகிறது. இந்நிலையில், நேற்று 1200 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று (ஜன.10) சனிக்கிழமை காலை நிலவரப்படி வினாடிக்கு 700 கனஅடியாக குறைந்துள்ளது, என மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    1
    ஒகேனக்கல் ஆற்றில் நீர் வரத்து சரிவு
தர்மபுரி மவட்டம் பென்னாகரம் கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பொழியும் பருவமழையின் அளவைப் பொறுத்து நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக காணப்படுகிறது. இந்நிலையில், நேற்று 1200 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று (ஜன.10) சனிக்கிழமை காலை 
நிலவரப்படி வினாடிக்கு 700 கனஅடியாக குறைந்துள்ளது, என மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    user_Raja
    Raja
    செய்தியாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • தமிழ்நாடு கியோகுஷின் சின்னு'ஸ் கராத்தே அசோசியேசன் & வேர்ல்டு சோ கியோகுஷின் கராத்தே சார்பாக தமிழ்நாட்டில் முதன்முறையாக மாநில அளவிலான லோ-கிக் கராத்தே கராத்தே போட்டி சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. சேலம், ஈரோடு, நாமக்கல் ,தர்மபுரி ,கிருஷ்ணகிரி , சென்னை, கோயம்புத்தூர் ,வேலூர், திருச்சி ஆகிய மாவட்டத்திலிருந்து 100 மேற்பட்ட கராத்தே வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தினர். மேலும் மாநில அளவில் நடைபெற்ற லோ-கிக் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற கராத்தே வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது. இதில் தலைமை பயிற்சியாளர் சின்னுசாமி, யுனிவர்சல் பள்ளியின் தாளாளர் சீனிவாசன்,அ.தி.மு.க. நகர செயலாளர் முருகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி செல்வக்குமரன், மருத்துவர்கள் கோகுலகிருஷ்ணன், ஸ்ரீபாலாஜி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.
    1
    தமிழ்நாடு கியோகுஷின் சின்னு'ஸ் கராத்தே அசோசியேசன் & வேர்ல்டு சோ கியோகுஷின் கராத்தே சார்பாக தமிழ்நாட்டில் முதன்முறையாக மாநில அளவிலான லோ-கிக் கராத்தே கராத்தே போட்டி சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.
சேலம், ஈரோடு, நாமக்கல் ,தர்மபுரி ,கிருஷ்ணகிரி ,
சென்னை, கோயம்புத்தூர் ,வேலூர், திருச்சி ஆகிய மாவட்டத்திலிருந்து 100 மேற்பட்ட கராத்தே வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.
மேலும் மாநில அளவில் நடைபெற்ற லோ-கிக் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற கராத்தே வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது.
இதில் தலைமை பயிற்சியாளர் சின்னுசாமி, யுனிவர்சல் பள்ளியின் தாளாளர் சீனிவாசன்,அ.தி.மு.க. நகர செயலாளர் முருகன்,  தமிழக வாழ்வுரிமைக் கட்சி செல்வக்குமரன், மருத்துவர்கள் கோகுலகிருஷ்ணன், ஸ்ரீபாலாஜி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.
    user_Srianand
    Srianand
    Journalist எடப்பாடி, சேலம், தமிழ்நாடு•
    17 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.