Shuru
Apke Nagar Ki App…
Available for Sale Locality : திருமுல்லைவாயில் சென்னை 62 Area (dimensions) : 1000 Property Type : Residential Plot CMDA approved
Jeyasakthi enterprises
Available for Sale Locality : திருமுல்லைவாயில் சென்னை 62 Area (dimensions) : 1000 Property Type : Residential Plot CMDA approved
More news from தமிழ்நாடு and nearby areas
- காஞ்சிபுரம் மாநகராட்சியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள கங்கை கொண்டான் மண்டபம் அருகில் அமைந்துள்ள பெரியாரின் 148வது பிறந்த நாள் விழா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் தலைமையில் பகுத்தறிவு பகலவன் பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கழக கொள்கை பரப்பு செயலாளர் எழிலரசன் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமார் மற்றும் பகுதி செயலாளர்கள் ஒன்றிய நகர மகளிர் அணி நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்1
- திருப்பத்தூரில் RDS நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ரூ30 லட்சம் மதிப்பீட்டில் மின்கல வாகனங்கள் வழங்கும் விழா! திருப்பத்தூரில் RDS நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ரூ30 லட்சம் மதிப்பீட்டில் மின்கல வாகனங்கள் வழங்கும் விழா! திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், RDS நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ், திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை நகராட்சிகளுக்கு ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் 15 மின்கல வாகனங்களை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.இரஞ்சித்குமார் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.திருப்பதி மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலையில், சம்பந்தப்பட்ட நகராட்சிகளுக்கு வழங்கி, கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சௌ.தமிழரசி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பாபு, RDS நிறுவன தலைவர் சரவணன், நகராட்சி ஆணையாளர்கள் சாந்தி திருப்பத்தூர் இளையராணி ஜோலார்பேட்டை தமிழக வெற்றிக்கழக திருப்பத்தூர் மாவட்ட மேற்கு ஒன்றிய செயலாளர் முனிசாமி மாவட்ட கொள்கை பரப்பு அமைப்பாளர் TV.ஜெகன் மற்றும் தமிழக கட்சி கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.4
- தார் சாலை மோசம்: பள்ளிக்குச் செல்ல வேண்டிய மாணவர்கள் கையில் மண்வெட்டி! போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதால் மாணவர்களே சாலையை சீரமைக்கும் அவல நிலை கிருஷ்ணகிரி மாவட்டம், தளி வட்டாரத்தில், பள்ளிக்குச் செல்லும் தார் சாலை மோசமான நிலையில் இருப்பதால், பள்ளி பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சாலையில் ஏற்பட்டுள்ள சேதம் மற்றும் மண், கற்கள் நிறைந்த பகுதிகளால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்ட நிலையில், பள்ளிக்குச் செல்லும் மாணவர்களே சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. பள்ளிப் புத்தகங்களை கையில் ஏந்தி கல்வி கற்க வேண்டிய மாணவர்களின் கைகளில் மண்வெட்டி ஏந்தும் நிலை ஏற்பட்டிருப்பது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் கல்வி மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சாலையின் நிலையை உடனடியாக ஆய்வு செய்து, அவசரகால அடிப்படையில் சாலையை சீரமைத்து, பள்ளி வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்துக்கு தடையில்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திரு. தினேஷ்குமார், I.A.S. அவர்களின் கவனத்திற்கு: மாணவர்கள் சாலை சீரமைக்கும் நிலை மீண்டும் ஏற்படாத வகையில், சம்பந்தப்பட்ட துறையினர் மூலம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். “பள்ளிப் புத்தகம் கையில் இருக்க வேண்டிய நேரத்தில்… மண்வெட்டி ஏன்?”1
- சிதம்பரத்தில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் கடலூர் மாவட்டம் சிதம்பரம் ரயில் பயணிகள் சங்கம் மற்றும் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது ஜன சதாப்தி ரயிலை சிதம்பரத்தில் நீட்டிக்க வலியுறுத்தி கோரிக்கை வைத்தனர் அதனை செயல்படுத்தவில்லை எனும் ரயில் மறியல் போராட்டம் என அறிவித்தனர் அதற்காக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது பின்பு ரயில்வே துறை அதிகாரியுடன் ஆலோசனை நடைபெற்று வரும் 25ஆம் தேதி வரை கால அவகாசம் கூறியுள்ளனர் இதில் அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் தங்களது கருத்துக்களை கூறியுள்ளனர்1
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் சாகுபடி செய்து உள்ள சாமந்தி பூவில் வாடல் நோயால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஆயுத பூஜையை முன்னிட்டு ராயக்கோட்டை ,ஆலப்பட்டி,பூவத்தி, பேரிகை, சூளகிரி, தாளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் சாமந்திப்பூ , செண்டுமல்லி உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்களை சாகுபடி செய்வது வழக்கம், கடந்த ஆண்டை போல் வருகின்ற ஆயுத பூஜை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக விவசாயிகள் சாமந்திப்பூ மற்றும் செண்டுமல்லி மலர்களை அதிக அளவில் சாகுபடிசெய்துள்ளனர், தற்போது விவசாயிகள் சாகுபடி செய்து உள்ள சாமந்தி பூவில் மொட்டுகள் வரும் தருவாயில் பரவலாக வாடல் நோய் தாக்கி செடிகள் அப்படியே கருகி வருவதால்விவசாயிகள் மத்தியில் பெரும் மீதியை ஏற்படுத்தி உள்ளது,1
- காஞ்சிபுரம் மாநகராட்சியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் மாநகராட்சியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பகுத்தறிவு பகலவன் பெரியாரின் 148 ஆவது பிறந்தநாள் விழா கங்கை கொண்டான் மண்டபம் அருகில் அமைந்துள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் தென்னரசு கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் நிகழ்ச்சியில் இனிப்புகள் வழங்கினர்.2
- புதிய சட்டமன்றம் தேவை: தர்மபுரியில் சௌமியா அன்புமணி எம் எல் ஏ பேட்டி! புதிய சட்டமன்றம் தேவை: தர்மபுரியில் சௌமியா அன்புமணி எம் எல் ஏ பேட்டி! தருமபுரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மணி தலைமை வகித்தார் ஆட்சியர் சரவணன் முன்னிலை வகித்தார் நிகழ்ச்சியில் தர்மபுரி சட்டப்பேரவை உறுப்பினர் சௌமியா அன்புமணி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மரகதம் வெற்றிவேல், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சௌமியா அன்புமணி தர்மபுரி மாவட்டத்தில் அதிகப்படியாக குடிநீர் பிரச்சனை சாலை சாக்கடை கால்வாய் தூர் வராப்படாமல் உள்ளது இதனை உடனடியாக சீரமைக்க கோரி பேசினேன். சாக்கடை கால்வாய் களை உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் அதே போல சனத்குமார் நதியில் பாதாள சாக்கடை கழிவுகளை சுத்தம் செய்து கலக்க வேண்டும் என தெரிவித்துள்ளேன். அதற்கும் ஆவன செய்வதாக கலெக்டர் தெரிவித்துள்ளார் தொப்பூர் உயர்மட்ட மேம்பாலம் சாலை பணி இரண்டு வருடத்திற்குள் பணிகள் நிறைவடைந்து விடும். மொரப்பூர் தர்மபுரி ரயில் திட்டத்தில் நிலங்கள் கையகப்படுத்தும் பணி என்பது சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார் ஜனவரி மாதத்திற்குள் பணிகள் நிறைவடைந்து ரயில்வே வசம் ஒப்படைக்கப்படும் இரண்டு மூன்று ஆண்டுகளில் ரயில் பாதை அமைக்கப்பட்டு திட்டம் நிறைவடையும் என்றார். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் சுத்தம் செய்து தண்ணீர் வழங்க வேண்டும் ஆழ்துளை கிணறுகள் சீரமைக்கப்பட்டு தண்ணீர் வழங்க கோரிக்கை விடுத்துள்ளேன். அதேபோல பல துறைகளில் காலிப் பணியிடங்கள் உள்ளது காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளேன். மின் தட்டுப்பாடு நிலவுகிறது காலை ஆறு மணியிலிருந்து பத்து மணி வரை தடையின்றி மின்சாரம் வழங்க எம்பி மணி பேசி உள்ளார். மேலும் தமிழகத்தில் புதிய சட்டசபை அவசிய தேவை. சட்டசபை நிர்வாக அலுவலர்கள் எல்லாம் ஒரே இடத்தில் இருந்தால் பணிகள் விரைந்து செயல்படுத்த வசதியாக இருக்கும் என்றார். இந்நிகழ்ச்சியில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.1
- கிருஷ்ணகிரியில் மத்திய மாவட்ட தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா கிருஷ்ணகிரியில் மத்திய மாவட்ட தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அவரின் திருவுருவப்படத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் சுரேஷ் மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.1