Shuru
Apke Nagar Ki App…
சிதம்பரத்தில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் கடலூர் மாவட்டம் சிதம்பரம் ரயில் பயணிகள் சங்கம் மற்றும் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது ஜன சதாப்தி ரயிலை சிதம்பரத்தில் நீட்டிக்க வலியுறுத்தி கோரிக்கை வைத்தனர் அதனை செயல்படுத்தவில்லை எனும் ரயில் மறியல் போராட்டம் என அறிவித்தனர் அதற்காக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது பின்பு ரயில்வே துறை அதிகாரியுடன் ஆலோசனை நடைபெற்று வரும் 25ஆம் தேதி வரை கால அவகாசம் கூறியுள்ளனர் இதில் அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் தங்களது கருத்துக்களை கூறியுள்ளனர்
Chidambaram Repoter
சிதம்பரத்தில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் கடலூர் மாவட்டம் சிதம்பரம் ரயில் பயணிகள் சங்கம் மற்றும் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது ஜன சதாப்தி ரயிலை சிதம்பரத்தில் நீட்டிக்க வலியுறுத்தி கோரிக்கை வைத்தனர் அதனை செயல்படுத்தவில்லை எனும் ரயில் மறியல் போராட்டம் என அறிவித்தனர் அதற்காக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது பின்பு ரயில்வே துறை அதிகாரியுடன் ஆலோசனை நடைபெற்று வரும் 25ஆம் தேதி வரை கால அவகாசம் கூறியுள்ளனர் இதில் அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் தங்களது கருத்துக்களை கூறியுள்ளனர்
More news from தமிழ்நாடு and nearby areas
- சிதம்பரத்தில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் கடலூர் மாவட்டம் சிதம்பரம் ரயில் பயணிகள் சங்கம் மற்றும் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது ஜன சதாப்தி ரயிலை சிதம்பரத்தில் நீட்டிக்க வலியுறுத்தி கோரிக்கை வைத்தனர் அதனை செயல்படுத்தவில்லை எனும் ரயில் மறியல் போராட்டம் என அறிவித்தனர் அதற்காக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது பின்பு ரயில்வே துறை அதிகாரியுடன் ஆலோசனை நடைபெற்று வரும் 25ஆம் தேதி வரை கால அவகாசம் கூறியுள்ளனர் இதில் அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் தங்களது கருத்துக்களை கூறியுள்ளனர்1
- சேத்தியாத்தோப்பில் என்எல்சி தண்ணீர் மூலம் விநாயகர் சிலைகளை கரைக்க போலீசாரின் சிறப்பு ஏற்பாடு சேத்தியாத்தோப்பில் என்எல்சி தண்ணீர் மூலம் விநாயகர் சிலைகளை கரைக்க போலீசாரின் சிறப்பு ஏற்பாடு கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள சேத்தியாத்தோப்பு பகுதியில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 40 சிலைகள் இப்பகுதியை சுற்றி பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. கடும் கோடை வெப்பத்தால் இப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் மற்றும் எப்போதும் ஆழமாக இருக்கும் குமார உடைப்பு வாய்க்கால் பள்ளம் ஆகியவை கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முற்றிலுமாக வறண்டுவிட்டன. இதனால் சிலைகளை கரைப்பதில் பக்தர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், பக்தர்கள் நீர்நிலைகளைத் தேடி அலைவதைத் தவிர்க்கவும், போக்குவரத்து நெரிசல் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கவும் சேத்தியாத்தோப்பு காவல்துறையினர் மாற்று ஏற்பாட்டை செய்தனர். அதன்படி நெய்வேலி என்எல்சி நிர்வாகத்திடம் பேசி, சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரில் இருந்து சுமார் 1.5 லட்சம் லிட்டர் தண்ணீரை 6-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் கொண்டு வந்து குமார உடைப்பு பள்ளத்தில் செயற்கையாக நிரப்பினர். நீர்நிலைகள் வறண்ட நிலையில், காவல்துறையினரின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் மூலம் அப்பகுதியில் விநாயகர் சிலைகள் பாதுகாப்பாகக் கரைக்கப்பட உள்ளன.1
- “கடலூரில் இளநீர் குடித்தால் கேன்சரா?” 😳 சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி பேசிய கருத்து வைரல்! கடலூர் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் மற்றும் நீர்நிலைகள் தொடர்பாக சௌமியா அன்புமணி சட்டப்பேரவையில் முன்வைத்த கருத்துகள் கவனம் பெற்றுள்ளன. “இளநீர் குடித்தால் கூட பாதிப்பு ஏற்படும் சூழல்” என அவர் பேசியதாக கூறப்படும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் குறித்து உங்கள் கருத்து என்ன? 👇1
- கும்பகோணத்தில் கொட்டி தீர்த்த கனமழை - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி கும்பகோணத்தில் இன்று மதியம் 12 மணிக்கு மேல் வானம் கருப்பு மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. தொடர்ந்து ஒரு மணி அளவில் குளிர்ந்த காற்று வீசியதுடன் மழை பெய்யத் தொடங்கி, கன மழையாக கடந்த ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்து வருகிறது. குளிர்ந்த காற்றும் இடியுடன் கூடிய மழை தொடர்ந்து பெய்து வருவதால் கும்பகோணம் பூமி குளிர்ந்து விட்டது. இந்த மழையால் பெரிதும் பொருட்களை விற்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இந்த கன மழை மூலம் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.1
- ஏரியை காணவில்லை மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சி.ஏரியை மீட்க அதிரடி உத்தரவு பொதுமக்கள் மகிழ்ச்சி அரியலூர் - ஏரியை காணவில்லை மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சி. : முற்றிலும் ஆக்கிரமிப்பில் இருந்த ஏரியை மீட்க அலுவலர்களுக்கு உடனடியாக உத்தரவு. அரியலூர் மாவட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக செந்துறை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சன்னாசிநல்லூர் கிராமத்தில் 125 நாள் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்ய சென்றபோது, அங்கிருந்த 'செரலான் ஏரி' முழுதும் ஆக்கிரமிப்பில் இருப்பதை கண்ட ஆட்சியர் ந.மிருணாளினி கடும் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக வருவாய்த்துறையினர், வட்டார வளர்ச்சி அலுவலர், சர்வேயர் ஆகியோரை அழைத்து செரலான் ஏரியின் மொத்த பரப்பளவு எவ்வளவு? என்கின்ற விவரத்தை ஆட்சியர் ந.மிருணாளினி கேட்டு கோப்புகளை பார்வையிட்டார். சுமார் 7.30 ஏக்கர் பரப்பளவு உள்ள செரலான் ஏரி, சுமார் 6 ஏக்கர் அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலரிடம் இந்த ஆக்கிரமிப்பை எப்படி அனுமதித்தீர்கள்? இதுவரை ஏன் அகற்றாமல் உள்ளீர்கள்? என கேள்வி எழுப்பிய ஆட்சியர், உடனடியாக ஏரி ஆக்கிரமிப்பை மீட்க உத்தரவிட்டார். அப்போது ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் பயிர் சாகுபடி செய்திருப்பதாக அரசு அலுவலர்கள் தெரிவித்தனர். தரிசாக உள்ள இடங்களை உடனடியாக மீட்கவும், பயிர் செய்த இடங்களை சாகுபடி முடிந்தவுடன் மீட்க ஆட்சியர் ந.மிருணாளினி உத்தரவிட்டு புறப்பட்டு சென்றார். ஆய்வுக்கு சென்ற இடத்தில் ஏரியை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்த ஆட்சியர், உடனடியாக ஏரியை மீட்டு நீராதாணத்தை காக்க உத்தரவிட்டது செந்துறை சுற்றுவட்டார பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.1
- செம்போடை ஸ்ரீ புற்றிடம்கொண்டார் ஆலய மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது செம்போடை ஸ்ரீ புற்றிடம்கொண்டார் ஆலய மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், செம்போடை தெற்கு கடைத்தெருவில் அமைந்துள்ள அருள்மிகு அல்லியம்பூங்கோதை சமேத ஸ்ரீ புற்றிடம்கொண்டார் ஆலய புனராவர்த்தன ஜீர்ணோத்தாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இப்பெருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை (15-09-2026) மாலை மங்கள வாத்தியத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், மஹா கணபதி ஹோமம், லக்ஷ்மி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், வாஸ்துசாந்தி, பிரவேசபலி, அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம் மற்றும் கடாகர்ஷணத்தைத் தொடர்ந்து முதற்கால யாகபூஜை நடைபெற்றது. இரவில் விமானகலசம், யந்திரம் மற்றும் மூலவர் மூர்த்தி ஸ்தாபனம் செய்யப்பட்டு, வேதபாராயணம் மற்றும் திருமுறை பாராயணத்துடன் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து புதன்கிழமை (16-09-2026) காலை 7.05 மணிக்கு மேல் சூர்யகும்ப பூஜை, கோ பூஜை, மண்டபார்ச்சனை, வேதிகார்ச்சனை, இரண்டாம்கால யாகபூஜை, நாடிசந்தானம், ஸ்பார்சாகுதி மற்றும் பூர்ணாகுதி ஆகியவை நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்குள் மிதுன லக்னத்தில் யாத்ராதானம் செய்யப்பட்டு கடங்கள் புறப்பாடாகி, அருள்மிகு அல்லியம்பூங்கோதை சமேத ஸ்ரீ புற்றிடம்கொண்டார் விமான கலசத்திற்கு புனிதநீரூற்றி மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூலவர் மஹா கும்பாபிஷேகமும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. இவ்விழாவில் திரளான பக்தகோடிகள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து அருள் பெற்றனர். வருகை தந்த பக்தர்கள் அனைவருக்கும் விபூதி பிரசாதம் மற்றும் அருசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. இவ் விழாவினை கோவில் நிர்வாக குழுவினரால் சிறப்பான முறையில் நடைபெற்றது.1
- கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ கட்சியினர் ஆர்பாட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோவில் மனை, புறம்போக்கு இடங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.. நாகை மாவட்டம் கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக, கோவில் மனை மற்றும் பல்வேறு புறம்போக்கு இடங்களில் பல ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன சிபிஐ முன்னாள் மாநில குழு உறுப்பினர் செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கோவில் மனை, ஆற்றுப் புறம்போக்கு, சாலைப் புறம்போக்கு, குளம் புறம்போக்கு உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும். விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு ரூ.10 லட்சம் மதிப்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு மீண்டும் மகாத்மா காந்தியின் பெயரை முழுமையாகப் பயன்படுத்துவதுடன், தினக்கூலியை ரூ.700-ஆக உயர்த்தி, ஆண்டுக்கு 200 நாள்கள் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதில் விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் காந்தி, ஒன்றிய துணைச் செயலாளர் சங்கர், விவசாய சங்கம் ஒன்றிய செயலாளர் ஹாஜா அலாவுதீன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- கஞ்சனூர் வரதராஜ பெருமாள் திருக்கோயில் கலசத்தில் இடி விழுந்து கலசம் சேதமடைந்து விழுந்ததால் பரபரப்பு. தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, கஞ்சனூர் பகுதியில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான வரதராஜ பெருமாள் திருக்கோயில் உள்ளது. திருக்கோயில் கடந்த 2006 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு தொடர்ந்து ஒரு கால பூஜைகள் நடந்து வருகிறது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திருக்கோயில். சுமார் 20 ஆண்டுகளாக திருப்பணி செய்யப்படாமல் இருப்பதாகவும் தினசரி பூஜைகள் நடந்து வந்தாலும் விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இன்று திடீரென்று கடுமையான இடி இடித்ததில் மின்னல் வெளிச்சத்தோடு கோயிலின் மூலவ விமானத்தை இடி தாக்கியது. இதனால் கோயிலின் விமான கலசம் முழுமையாக சேதம் அடைந்து கீழே விழுந்தது. மேலும் இடி விமானத்தை தாக்கியதால் கோயிலில் மின்சார விளக்குகள் மற்றும் மெயின் மின்சார சாதன பொருட்களில் மின் கசிவு ஏற்பட்டு கோயிலின் மூலவ சன்னதியில் முழுவதுமாக புகை மூட்டம் ஏற்பட்டது. இதனை அறிந்து வந்த பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் கலசத்தை எடுத்து கோயிலில் உள்ளே வைத்தனர். இது குறித்து இந்த சமய அறநிலையத் துறை மற்றும் திருப்பனந்தாள் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளாக திருப்பணி செய்யப்படாமல் இருக்கும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கஞ்சனூர் வரதராஜ பெருமாள் திருக்கோயில் இடி விழுந்து விமானம் இடிந்த நிகழ்வு பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.1