Shuru
Apke Nagar Ki App…
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
Vinayagam Vinayagam
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
More news from Tamil Nadu and nearby areas
- கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சென்ராயசாமி பெருமாள் கோயிலில் இன்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது, இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்த கோடிகள் குழந்தைகளுடன் குடும்பமாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.1
- லாரி மீது டிராவல்ஸ் வாகனம் மோதி விபத்து திருப்பத்தூரை சேர்ந்த 34 பக்தர்கள் டிராவல்ஸ் வாகனத்தில் பழனி கோயிலுக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தனர். இன்று வியாழக்கிழமை அதிகாலை பாப்பிரெட்டிப்பட்டி அலமேலுபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையில் நின்றிருந்த ஈச்சர் லாரியின் மீது டிராவல்ஸ் வாகனம் மோதியது. இதில் 7 பேர் காயமடைந்தனர். கோபிநாதம்பட்டி காவல் ஆய்வாளர் லட்சுமி தலைமையில் காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்1
- தர்மபுரி நகரம் குமாரசாமிபேட்டை அருள்மிகு ஸ்ரீ சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் 2026 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு வருட பிறப்பு முன்னிட்டு சிவசக்தி விநாயகருக்கு 12 வகையான பொருட்களைக் கொண்டு பால் தயிர் இளநீர் பன்னீர் பஞ்சாமிர்தம் தேன் விபூதி போன்ற பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது அதை தொடர்ந்து சிவசக்தி விநாயகருக்கு சிறப்பு பூஜை வழிபாடு செய்து புத்தாண்டை முன்னிட்டு வெள்ளிக்கவசம் அணிவித்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் கேரள மாநில பக்தர்கள் குழந்தைகள் புத்தாடை அணிவித்து கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர் கோவில் நிர்வாக குழு ராஜேந்திரன் தலைமையில் பக்தர்களுக்கு அனைவருக்கும் பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது1
- ஆலங்குடி: குரு தட்சணாமூர்த்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு ஆலங்குடி நகரில் அமைந்துள்ள 2-வ்து குருஸ்தலமாக அழைக்கப்படும் தர்மஸம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் கோயில் தனிச் சன்னதியில் வீற்றிருக்கும் குருபகவானுக்கு மார்கழி மாத வியாழனை முன்னிட்டு, இன்று சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை தரிசித்து சென்றனர்.1
- வேடசந்தூர்: மாரம்பாடி புனித பெரிய அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி வேடசந்தூர் அருகே உள்ள மாரம்பாடியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித பெரிய அந்தோனியார் ஆலயம் உள்ளது. 2026 ஆம் ஆண்டு பிறந்ததையொட்டி சிறப்பு திருப்பலி பூஜைகள் நடைபெற்றது. ஆலயத்தின் பங்கு தந்தை சுரேஷ்சகாயராஜ், துணைப் பங்கு தந்தை அமல்ராஜ் ஆகியோர் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு பூஜையில் மாரம்பாடி ஊர் மேனேஜர் மற்றும் நாட்டாமை, மணியக்காரர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.1
- திண்டுக்கல் ரயில் நிலையம் முன்பு பயணிகளை ஏற்ற வந்த அரசு பேருந்து பழுதாகி நின்றதால் *பொதுமக்கள் அரசு பேருந்தை தள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்1
- வல்லகோட்டை பிரசித்தி பெற்ற சுப்ரமணியசுவாமி கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு, அதிகாலை 3 மணி அளவில் சன்னதி திறக்கபட்டு கோபூஜை நடந்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் 2 மணிநேரம் காத்திருந்து முருகனை தரிசித்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.1
- ஒகேனக்கலில் குவிந்த பயணிகள் கூட்டம் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான ஒகேனக்கல் காவிரி ஆறு, நேற்று ஜனவரி 01 ஆங்கில புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு குவிந்தனர். இதனால் பரிசல் பயணம் செல்லும் இடத்திலும், அருவிகளில் குளிக்கும் இடங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. தொடர்ந்து பாதுகாப்பு பணிக்காக காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்1
- கலைஞர் பூங்காவில் குவிந்த மக்கள் ஆங்கில புத்தாண்டு இன்று பிறந்ததை முன்னிட்டு இன்று விடுமுறை நாளன்று புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட கலைஞர் பூங்காவில் ஏராளமான சிறுவர்கள் மற்றும் பெற்றோர்கள் கூடி சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர். இன்று விடுமுறை பூங்காவில் உள்ள ஊஞ்சல் மற்றும் வெளி திரையரங்கம் மற்றும் விளையாட்டு திடல் மற்றும் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களில் பெற்றோர்கள், குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தனர்.1