கோவையில் எழுத்தாளர் கிருபாஷினி ஜெயக்குமார் எழுதிய 'மை பிரெஞ்சு கிராமர்' புத்தக வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. கோவை காந்திபுரம் பகுதியில் நடந்த இந்நிகழ்வில், மூத்த வழக்கறிஞர் மதிவாணன் புத்தகத்தை வெளியிட, எழுத்தாளர் கிருபாஷினி ஜெயக்குமார் அதனை பெற்றுக்கொண்டார். இது கிருபாஷினியின் நான்காவது புத்தகம் என்பது குறிப்பிடத்தக்கது. கோவையைச் சேர்ந்தவரான கிருபாஷினி ஜெயக்குமார், கிருபா ஸ்கூல் ஆஃப் லாங்குவேஜஸ் பயிற்சி மையத்தின் நிறுவனர் ஆவார். 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் புலமை கொண்டுள்ள இவர், ஒரு மொழி பயிற்றுநராகவும் செயல்பட்டு வருகிறார். இவர் இதற்கு முன்னதாக 'மை இங்கிலிஷ் கிராமர்', 'தி அன்டோல்ட் சீக்ரெட் ஆஃப் சக்சஸ்', 'மை இங்கிலிஷ் கிராமர்' ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கிருபாஷினி, தான் இதுவரை மொழி தொடர்பான மற்றும் ஊக்கமளிக்கும் புத்தகங்களை எழுதியுள்ளதாகத் தெரிவித்தார். ஐரோப்பிய மற்றும் ஆசிய மொழிகள் உட்பட அனைத்து மொழிகளிலும் புத்தகங்களை மொழிபெயர்த்து வெளியிடுவதே தனது எதிர்கால லட்சியம் என்று அவர் கூறினார். மேலும், தங்கள் பயிற்சி மையத்தின் மூலம் 20-க்கும் மேற்பட்ட மொழிகளைப் பொதுமக்களுக்குப் பயிற்றுவித்து வருவதாகவும், இரண்டு மொழிகளுக்கு மேல் கற்பது மூளையின் செயல்திறனை அதிகரிக்கும் என்பதையும், எந்த வயதினரும் பல மொழிகளைக் கற்றுக்கொள்ளலாம் என்பதையும் அவர் வலியுறுத்தினார். மொழி கற்றுக்கொள்ள விரும்புவோர் கிருபா ஸ்கூல் ஆஃப் லாங்குவேஜஸ் பயிற்சி மையத்தை அணுகலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கோவையில் எழுத்தாளர் கிருபாஷினி ஜெயக்குமார் எழுதிய 'மை பிரெஞ்சு கிராமர்' புத்தக வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. கோவை காந்திபுரம் பகுதியில் நடந்த இந்நிகழ்வில், மூத்த வழக்கறிஞர் மதிவாணன் புத்தகத்தை வெளியிட, எழுத்தாளர் கிருபாஷினி ஜெயக்குமார் அதனை பெற்றுக்கொண்டார். இது கிருபாஷினியின் நான்காவது புத்தகம் என்பது குறிப்பிடத்தக்கது. கோவையைச் சேர்ந்தவரான கிருபாஷினி ஜெயக்குமார், கிருபா ஸ்கூல் ஆஃப் லாங்குவேஜஸ் பயிற்சி மையத்தின் நிறுவனர் ஆவார். 20-க்கும் மேற்பட்ட மொழிகளில்
புலமை கொண்டுள்ள இவர், ஒரு மொழி பயிற்றுநராகவும் செயல்பட்டு வருகிறார். இவர் இதற்கு முன்னதாக 'மை இங்கிலிஷ் கிராமர்', 'தி அன்டோல்ட் சீக்ரெட் ஆஃப் சக்சஸ்', 'மை இங்கிலிஷ் கிராமர்' ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கிருபாஷினி, தான் இதுவரை மொழி தொடர்பான மற்றும் ஊக்கமளிக்கும் புத்தகங்களை எழுதியுள்ளதாகத் தெரிவித்தார். ஐரோப்பிய மற்றும் ஆசிய மொழிகள் உட்பட அனைத்து மொழிகளிலும் புத்தகங்களை மொழிபெயர்த்து வெளியிடுவதே
தனது எதிர்கால லட்சியம் என்று அவர் கூறினார். மேலும், தங்கள் பயிற்சி மையத்தின் மூலம் 20-க்கும் மேற்பட்ட மொழிகளைப் பொதுமக்களுக்குப் பயிற்றுவித்து வருவதாகவும், இரண்டு மொழிகளுக்கு மேல் கற்பது மூளையின் செயல்திறனை அதிகரிக்கும் என்பதையும், எந்த வயதினரும் பல மொழிகளைக் கற்றுக்கொள்ளலாம் என்பதையும் அவர் வலியுறுத்தினார். மொழி கற்றுக்கொள்ள விரும்புவோர் கிருபா ஸ்கூல் ஆஃப் லாங்குவேஜஸ் பயிற்சி மையத்தை அணுகலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
- சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அருகே கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை ஒற்றை காட்டு யானை வழிமறித்து, தும்பிக்கையால் கரும்புகளை பறித்து ருசித்த சம்பவம் வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை திடீரென சாலையில் வந்து நின்றதால், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர். லாரியை வழிமறித்த அந்த யானை அதில் இருந்த கரும்புகளை எடுத்துச் சாப்பிட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் விரைந்து வந்து காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். யானை வனப்பகுதிக்குள் சென்றதை தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து சீரானது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சிறுத்தை, புலி, கரடி, யானை போன்ற வனவிலங்குகள் அதிகளவில் வசித்து வரும் சூழலில், பகல் நேரத்தில் சாலையில் காட்டு யானைகள் நடமாடி வருவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் கசவணம்பட்டியில் உள்ள அருள்மிகு முத்தாலம்மன் கோவில் திருவிழா உற்சவம் நடைபெறுகிறது.1
- தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள ஊத்துக்காடு கிராமத்தில், நகராட்சி குப்பை வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன. கம்பம் நகராட்சி, தனியார் தோட்டத்தில் உள்ள பயன்பாடற்ற கிணற்றில் குப்பைகளை கொட்ட முயன்றதை எதிர்த்து, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குப்பைகள் கொட்டப்பட்டால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன் துர்நாற்றம் ஏற்படும் எனக் கூறி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் உத்தமபாளையம் காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இனிமேல் நகராட்சிக்கான குப்பைகள் கொட்டப்படாது, பாதிப்பு ஏற்படாது என உறுதியளிக்கப்பட்ட பின்னரே குப்பைகளை கொட்ட அனுமதிக்கப்படும் என பொதுமக்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, நகராட்சி வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.1
- போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வை வலியுறுத்தி, தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியில் அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. கடமலைக்குண்டு கிராமத்தில் தொடங்கி தங்கம்மாள்புரம் கிராமம் வரை சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிற்கு இந்த மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. அதிகாலை நேரத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 14 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் என 200-க்கும் மேற்பட்டோர் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டு இலக்கை நோக்கி ஓடினர். போட்டியில் கலந்துகொண்ட வீரர் மற்றும் வீராங்கனைகளுக்குத் தேவையான குடிநீர் வசதி, மருத்துவ முதலுதவி வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. போட்டியின் இறுதியில் வெற்றி பெற்று முதல் 5 இடங்களைப் பிடித்த நபர்களுக்கு ரொக்கப் பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.1
- சேலத்தில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக மது பிரியர் ஒருவர் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மதுபானங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகக் கூறி அவர் தெரிவித்துள்ள இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1
- ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தாளவாடி அடுத்துள்ள ஜீரகள்ளி வனச்சரகத்தின் அருளவாடி கிராமத்திற்குள் இன்று பகல் நேரத்தில் காட்டு யானைகள் புகுந்து உலா வந்ததால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்தனர். பகல் நேரத்திலேயே கிராமத்தின் அருகே காட்டு யானைகள் சுற்றித் திரிவதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து பாதுகாப்பான இடங்களுக்கு விரைந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. காட்டு யானைகள் தொடர்ந்து கிராமப் பகுதியை ஒட்டியே உலா வருவதால் தங்கள் உயிர் மற்றும் உடைமைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் கிராம மக்கள் உள்ளனர். எனவே, வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, யானைகளை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- திருப்பூர் மாநகராட்சி 32-வது வார்டுக்கு உட்பட்ட சூர்யா லேஅவுட் பகுதியிலிருந்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக 30-க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று வந்துள்ளது. அப்போது வளைவில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக அந்த சரக்கு வேன் கவிழ்ந்ததில், அதில் பயணித்த 8 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.1