சேலத்தில் திமுக தொழிற்சங்க பேரவையின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மத்திய மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினார். இதில் தொழிலாளர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு போக்குவரத்துக் கழகங்களை தனியார் மயமாக்க கூடாது, தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பலன்கள் மற்றும் நிலுவையில் உள்ள துணிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்பது மீட்டர் கோரிக்கைகளை வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்டோர் உடன் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரன் ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு கலந்து கொண்டார்.
சேலத்தில் திமுக தொழிற்சங்க பேரவையின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மத்திய மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினார். இதில் தொழிலாளர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு போக்குவரத்துக் கழகங்களை தனியார் மயமாக்க கூடாது, தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பலன்கள் மற்றும் நிலுவையில் உள்ள துணிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்பது மீட்டர் கோரிக்கைகளை வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்டோர் உடன் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரன் ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு கலந்து கொண்டார்.
- திமுகவிற்கு அரசியல் நாகரிகத்தை கற்றுக் கொடுத்த திருமாவளவன் விடுதலைச் சிறுத்தைகளை சிதறடிக்க சதி என திமுக மீது குற்றச்சாட்டு1
- உலக தற்கொலை தின தடுப்பு விழிப்புணர்வு பேரணி: மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைதார் தருமபுரியில் உலக தற்கொலை தின தடுப்பு விழிப்புணர்வு பேரணி: மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைதார் தருமபரி அரசு மருத்துவ கல்லூரி சார்பில் உலக தற்கொலை தின தடுப்பு விழிப்புணர்வு பேரணியை தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு.வே சரவணன் கொடி அசைத்து துவக்கிவைத்தார் மருத்துவ கல்லூரி மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே துவங்கிய இப்பேரணி செந்தில் நகர், பாரதிபுரம், இலக்கியம்பட்டி வழியாக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி வரை சென்று நிறைவுபெற்றது ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவிகள் விழிப்புணர்வு பதாதைகளை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர் பேரணியின் நடுவே தனியார் கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன இந்நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி முதல்வர் மனோகரன் தலைமை மருத்துவ அதிகாரி நாகவேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர் முடிவில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது1
- மேல் வாழப்பாடி நடுநிலைப் பள்ளியில் தற்கொலை தடுப்பு உறுதிமொழி! கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை, மேல் வாழப்பாடி நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அரும்பொருள் பவுண்டேஷனில் பணிபுரியும் ஆல்வின் மாணவ, மாணவியர்களுக்கு தற்கொலை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன், தற்கொலை தடுப்பு உறுதிமொழியையும் மாணவர்களிடம் ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சி பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி. எழிலரசி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, தற்கொலை தடுப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். மாணவர்களின் மனநலம் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி பயனுள்ளதாக அமைந்தது.1
- தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு தினம் – திமுக சார்பில் மரியாதை கரூர் மாவட்ட திமுக சார்பில், தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. கரூர் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவுருவப் படத்திற்கு திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். தியாகி இமானுவேல் சேகரனாரின் தியாகத்தையும், சமூக நீதிக்கான அவரது பங்களிப்பையும் நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ என ஏராளமான கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.1
- காட்டுப்புத்தூர் இன்று நடைபெற்ற வார சந்தையில் குவிந்த பொதுமக்கள் திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் மோகனூர் சாலையில் இன்று நடைபெற்ற வெள்ளிக்கிழமை வார சந்தையில் காய்கனிகள் வாங்குவதற்கு பொதுமக்கள் குவிந்தனர்.கத்தரிக்காய் தக்காளி வெங்காயம் முட்டைகோஸ் உருளைக்கிழங்கு காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகள் வாங்குவதற்கு காட்டுப்புத்தூர் சீலை பிள்ளையார் புத்தூர் ஸ்ரீ ராம சமுத்திரம் சின்ன பள்ளிபாளையம் பெரிய பள்ளிபாளையம் பிடாரமங்கலம் உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட கிராம மக்கள் காய்கனிகள் வாங்குவதற்கு குவிந்துள்ளனர்1
- சேலத்தில் அமைச்சர் பார்த்திபன் தலைமையில் தவெகவினர் மகிழ்ச்சி கொண்டாட்டம்!.... தமிழக வெற்றி கழகத்திற்கு மாநில அரசியல் கட்சிகளுக்கான அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வழங்கியதை தொடர்ந்து, சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே அக்கட்சியின் சேலம் மத்திய மாவட்ட செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான திரு விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். தங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது தங்கள் கட்சிக்கு மட்டுமல்ல தங்கள் தலைவருக்குமே மிகப்பெரிய பெருமை, இன்றைய நாள் தான் தங்களுக்கு தீபாவளி என்று அக்கட்சியினர் தெரிவித்தனர்.1
- டாஸ்மாக் கடைக்குள் போலீஸ் என கூறி பாட்டிலை எடுத்த நபரும் ஊழியரும் கட்டி புரண்டு சண்டை போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.... சேலம் டாஸ்மாக் கடைக்குள் போலீஸ் என கூறி பாட்டிலை எடுத்த நபரும் ஊழியரும் கட்டி புரண்டு சண்டை போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.... சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் சாலையில், முள்ளுவாடி கேட் பகுதியில் எலைட் பாருடன் கூடிய டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்குள் மதியம் 3:30 மணிக்கு புகுந்த மர்ம நபர், தான் போலீஸ் எனக்கூறி பாட்டிலை எடுத்தார். அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கடை ஊழியர் பாட்டிலை அவரிடம் இருந்து கடுமையாக போராடி கட்டி புரண்டு பாட்டில் புடுங்கிக் கொண்டார். தொடர்ந்து போலீஸ் என கூறிக்கொண்டு உள்ளே வந்த மர்ம நபர் யாருக்கோ போன் செய்து கடை ஊழியரிடம் கொடுத்தார். ஆனால் முதலில் வாங்க மறுத்த கடை ஊழியர் பின்னர் வாங்கி பேசியதோடு, அந்த மர்ம நபரிடம் போலீஸனை கூறிக்கொண்டு அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் சென்று விடுவீர்களா? என பல்வேறு கேள்விகளை எழுப்பி பின்னர் பாட்டிலைக் கொடுத்து அனுப்பினார். சீருடை அல்லாமல் கடைக்குள் புகுந்து பாட்டிலை எடுத்ததோடு கடை ஊழியரிடம் சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே கடைக்குள் சீருடை அல்லாமல் புகுந்த மர்ம நபர் உண்மையிலே போலீஸ்காரர் தானா அவர் ஏன் கடைக்குள் புகுந்தார் என்பது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என போதை ஆசாமிகள் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் தற்போது சீருடை அல்லாமல் கணக்கில் புகுந்து பாட்டிலை எடுத்த வீடியோ சேலத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்1
- தருமபுரியில் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு பேரணி 150-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்பு1
- நம்பியூர் அருகே செல் போன் கோபுரத்தில் ஏ றி தற்கொலை மிரட்டல் விடுத்த முதியவர் விழுந்ததால் படுகாயம் அடைந்தார். நம்பியூர் அருகே உள்ள கோசணம் கடசெல்லிபாளையத் தை சேர்ந்தவர் அண்ணுசாமி (வயது 60). சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் போதையில் இருந்த அவர், அங்குள்ள ஒருசெல்போன் கோபுரத்தில் ஏறி சிறிது நேரத்தில் டவர் உச்சிக்கு சென்று விட்டார். அதைப்பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள், அதிர்ச்சி அடைந்து அவரை கீழே இறங்கி வருமாறு சத்தமிட்டனர். ஆனால் அவர் இறங்கவில்லை, உடனே நம்பியூர் போலீசார் மற்றும் தீயணைப்புநிலையத்திற்கு தகவல் கொடுத்ததாக தெரிகிறது.அதன்பேரில் சிறிது நேரத்தில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் அண்ணுசாமியை கீழே இறங்கி வருமாறு கூறினர். ஆனால் அவர், இறங்கி வரமாட்டேன், கீழே குதிக்க போகிறேன் என்று தற் கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதைய டுத்து தீயணைப்பு வீரர்கள், அண்ணுசாமியிடம் நைசாக பேசிக்கொண்டே செல்போன் கோபுரத்தில் ஏறி அவரை கீழே கொண்டு வர முயன்றனர். ஆனால், அண்ணுசாமி தவறி கீழே விழுந்து விட்டார்.இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனே போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.2