ஹஜ் பயணிகளுக்கு உதவும் வகையில் விமான நிலையத்துக்கு அருகாமையில் ஹஜ் இல்லம் - தமிழக முதல்வருக்கு நன்றி- ஹஜ் கமிட்டி முன்னாள் உறுப்பினர் கலீபா சாஹிப் "ஒவ்வொரு இஸ்லாமியரின் புனித கடமைகளில் ஹஜ் பயணமும் ஒன்று. புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமிய மக்களுக்கு உதவும் வகையில், தமிழ்நாடு அரசு ஹஜ் இல்லம் திறக்கப்பட இருக்கிறது" என முன்னாள் ஹஜ் கமிட்டி உறுப்பினரும், நாகூர் தர்கா ஆலோசனைக் குழு தலைவருமான சையத் முகம்மது கலீபா சாஹிப் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். "சென்னை பன்னாட்டு விமான நிலையம் அருகில் டிச.16-ம் தேதி இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள ஆண்டுதோறும் சென்னை வரும் இஸ்லாமியர்கள் பயணம் புறப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாகச் சென்னை வந்து தங்கி சென்னை விமான நிலையம் வழியாக ஹஜ் பயணம் செல்வதற்கு வசதியாக விமான நிலையத்துக்கு அருகில் தமிழ்நாடு அரசு ஹஜ் இல்லம் கட்டப்படும் என 2.3.2025 அன்று மாண்புமிகு முதல்வர் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பின்படி சென்னை பன்னாட்டு விமான நிலையம் அருகில் நங்கநல்லூரில் ஒரு ஏக்கர் அரசு நிலப்பரப்பில் 39 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஹஜ் புனித பயணிகள் தங்குவதற்கு ஏற்ப தமிழ்நாடு அரசு ஹஜ் இல்லம் கட்ட அடிக்கல் நாட்டி,தனது வாக்குறுதிபடி நிறைவேற்றி தந்துள்ளார்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள். இதனை ஒவ்வொரு இஸ்லாமியர்களும் மனமார வரவேற்கின்றனர், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கடந்த வருடம் என்னை தமிழ்நாடு அரசு ஹஜ் கமிட்டி உறுப்பினராக நியமித்து பணியாற்றும் வாய்ப்பினை தந்தார்கள், அப்பொழுது நான் இந்த கோரிக்கையை நேரடியாகவே வலியுறுத்தினேன் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு இந்த அரிய நேரத்தில் தமிழகத்தின் உள்ள அனைத்து இஸ்லாமிய மக்கள் சார்பாக எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்" என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஹஜ் பயணிகளுக்கு உதவும் வகையில் விமான நிலையத்துக்கு அருகாமையில் ஹஜ் இல்லம் - தமிழக முதல்வருக்கு நன்றி- ஹஜ் கமிட்டி முன்னாள் உறுப்பினர் கலீபா சாஹிப் "ஒவ்வொரு இஸ்லாமியரின் புனித கடமைகளில் ஹஜ் பயணமும் ஒன்று. புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமிய மக்களுக்கு உதவும் வகையில், தமிழ்நாடு அரசு ஹஜ் இல்லம் திறக்கப்பட இருக்கிறது" என முன்னாள் ஹஜ் கமிட்டி உறுப்பினரும், நாகூர் தர்கா ஆலோசனைக் குழு தலைவருமான சையத் முகம்மது கலீபா சாஹிப் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். "சென்னை பன்னாட்டு விமான நிலையம் அருகில் டிச.16-ம் தேதி இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள ஆண்டுதோறும் சென்னை வரும் இஸ்லாமியர்கள் பயணம் புறப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாகச் சென்னை வந்து தங்கி சென்னை விமான நிலையம் வழியாக ஹஜ் பயணம் செல்வதற்கு வசதியாக விமான நிலையத்துக்கு அருகில்
தமிழ்நாடு அரசு ஹஜ் இல்லம் கட்டப்படும் என 2.3.2025 அன்று மாண்புமிகு முதல்வர் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பின்படி சென்னை பன்னாட்டு விமான நிலையம் அருகில் நங்கநல்லூரில் ஒரு ஏக்கர் அரசு நிலப்பரப்பில் 39 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஹஜ் புனித பயணிகள் தங்குவதற்கு ஏற்ப தமிழ்நாடு அரசு ஹஜ் இல்லம் கட்ட அடிக்கல் நாட்டி,தனது வாக்குறுதிபடி நிறைவேற்றி தந்துள்ளார்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள். இதனை ஒவ்வொரு இஸ்லாமியர்களும் மனமார வரவேற்கின்றனர், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கடந்த வருடம் என்னை தமிழ்நாடு அரசு ஹஜ் கமிட்டி உறுப்பினராக நியமித்து பணியாற்றும் வாய்ப்பினை தந்தார்கள், அப்பொழுது நான் இந்த கோரிக்கையை நேரடியாகவே வலியுறுத்தினேன் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு இந்த அரிய நேரத்தில் தமிழகத்தின் உள்ள அனைத்து இஸ்லாமிய மக்கள் சார்பாக எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்" என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளரும் 45வது வார்டு மாமன்ற உறுப்பினர் எஸ்.சாந்திசேதுராமன் அவர்களின் ஏற்பாட்டில் ,10 லட்ச ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினார். _______ முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழா தமிழகம் எங்கும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. காஞ்சிபுரம் 45வது வார்டு மாமன்ற உறுப்பினர் எஸ்.சாந்திசேதுராமன் , தகவல் தொழில்நுட்ப பிரிவு சதிஷ் குமார் ஆகியோர் ஏற்பாட்டில் , காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 45வது வார்டு வேளிங்கபட்டரை பகுதியில், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படத்துக்கு, மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்கள் கலந்து கொண்டு, மலர்கள் தூவி வணங்கி பிறந்தநாள் விழா கொண்டாடினார். அதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளரும் 45வது வார்டு மாமன்ற உறுப்பினர் எஸ்.சாந்திசேதுராமன் அவர்களின் ஏற்பாட்டில் ,10 லட்ச ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினார். _______ முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழா தமிழகம் எங்கும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. காஞ்சிபுரம் 45வது வார்டு மாமன்ற உறுப்பினர் எஸ்.சாந்திசேதுராமன் , தகவல் தொழில்நுட்ப பிரிவு சதிஷ் குமார் ஆகியோர் ஏற்பாட்டில் , காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 45வது வார்டு வேளிங்கபட்டரை பகுதியில், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படத்துக்கு, மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்கள் கலந்து கொண்டு, மலர்கள் தூவி வணங்கி பிறந்தநாள் விழா கொண்டாடினார். அதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள தையல் இயந்திரங்கள், சலவைப் பெட்டிகள் ,சைக்கிள்கள் ,வேஷ்டி சேலைகள் விளையாட்டு உபகரணங்கள் சிக்கன் பிரியாணி உள்ளிட்ட அன்னதானங்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன் , மைதிலி திருநாவுக்கரசு உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- Post by Govindappa Govindappa1
- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பொற்கொடி செல்வராஜ் முன்முயற்சியில் ஐய்யம்பேட்டை ஊராட்சியில் உள்ள பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கி ஐய்யம்பேட்டை ஊராட்சிக்கு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய இரண்டு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்ட காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பரிந்துரையின் பேரில் இன்று திமுக மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் தலைமையில் பூமி பூஜை செய்தார் அதனைத் தொடர்ந்து வாரணவாசி கிராமத்தில் அங்கன்வாடி மையம் ஊத்துக்காடு கிராமத்தில் ஆரம்ப சுகாதார துணை நிலையம் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சியில் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஆர் கே தேவேந்திரன் வாலாஜாபாத் பேரூர் கழக செயலாளர் பாண்டியன் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பொற்கொடி செல்வராஜ், ஒன்றிய செயலாளர் சேகர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சஞ்சய்காந்தி , வாரணவாசி ஊராட்சி மன்ற தலைவர் பிரேமா மோகனசுந்தரம் , ஊத்துக்காடு சாவித்திரி மணிகண்டன் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய பேரூர் கழக கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி அருகே உள்ள செந்தாரப்பள்ளியில் அமைந்துள்ள ஆக்ஃபோர்டு பப்ளிக்பள்ளியின்அறிவுதிறன் திருவிழா மற்றும் ஆண்டு விழா நேற்று நடைப்பெற்றது. பள்ளியின் நிறுவனர் மகேந்திரன் தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவிற்கு பள்ளியின் இயக்குனர் திருமதி கவிதா ராணி மகேந்திரன், பள்ளியின் முதல்வர் அருட்ச் சகோதரி ஜெசிந்தா முத்தையா மற்றும் பள்ளி நிர்வாகிகளான முனிகிருஷ்ணன், சேகர், ஜாக்கப்ஜார்ஜ், கராத்தே மாஸ்டர் மாரியப்பன், வெங்கடசாமி ,தீர்த்தகிரிஆகியோர் முன்னிலை வகித்தனர்.1
- ஓலப்பட்டி கூட்ரோடு அருகே த.வெ.க சார்பில் 51 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு. மாவட்ட செயலாளர் முரளி விஜய் சீர்வரிசை வழங்கினார். மத்தூர் தெற்கு ஒன்றியம் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு 51 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி மத்தூர் தெற்கு ஒன்றியம் த.வெ.க சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு ஓலப்பட்டி கூட்ரோடு அருகே உள்ள தனியார் காம்ப்ளக்ஸில் 51 கர்ப்பிணி பெண்களுக்கு தாய் வீட்டு சீதனமாக சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளர் முரளி விஜய் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கி த.வெ.கவின் தேர்தல் வாக்குறுதிகளை பெண்களுக்கான வாக்குறுதிகள் என தெரிவித்து சிறப்புரையாற்றினார். முன்னதாக அம்பேத்கர், பெரியார், காமராஜர் உள்ளிட்ட மறைந்த தலைவர்கள் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட இணை செயலாளர் தாமோதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் திருமூர்த்தி வரவேற்புரை ஆற்றினார். மத்தூர் தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பரத் விஜய் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் மணிகண்டன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சத்யராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுகுமார், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஜெகன் உள்ளிட்ட த.வெ.க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு வளகாப்பு செய்து அர்ச்சனை தூவி வாழ்த்தினர்.1
- மொரப்பூர் ரயில் நிலையத்தில் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று சொந்த ஊர் வந்த இளைஞருக்கு உறவினர்கள், கிராம மக்கள் மேல தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு. கடந்த சில நாட்களுக்கு முன்பு யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில், நான் முதல்வன் திட்டத்தில் படித்த தமிழகத்தைச் சார்ந்த 56 இளைஞர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கட்டரசம்பட்டி கிராமத்தை சேர்ந்த அருண்குமார், என்ற இளைஞர் தேர்ச்சி பெற்று, இந்திய அளவில் 585 ஆவது ரேங்க் பெற்றுள்ளார். இந்த நிலையில் யூபிஎஸ்சி தேர்ச்சி பெற்ற பிறகு, இன்று சென்னையிலிருந்து ரயில் மூலமாக சொந்த ஊருக்கு வந்தார். அப்பொழுது கட்டரசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று கிராமத்திற்கு பெருமை சேர்த்த இளைஞருக்கு, மொரப்பூர் ரயில் நிலையத்தில் மாலை அணிவித்து, மேல தாளங்கள் முழங்க மயிலாட்டம், மாடாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். இளைஞரின் தாயார் ஆர்த்தி எடுத்து வரவேற்றார். மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இளைஞர்களுக்கு மொரப்பு பகுதியைச் சார்ந்வர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். தேர்வில் வெற்றி பெற்றதை குறித்து அருண்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியது, நான் கடைக்கோடி கிராமத்தில் பிறந்து அரசு பள்ளியில் படித்து கடந்த எட்டு வருடங்களாக யூபிஎஸ்சி தேர்வுக்காக படித்து, மூன்று முறை நேர்காணலுக்கு சென்று அதில் சரியான மதிப்பெண் கிடைக்கவில்லை. இந்த முறை தமிழ்நாட்டில் முக்கிய திட்டமான நான் முதல்வன் திட்டம், ஆல் இந்தியா சிவில் சர்வீஸ் கோச்சிங் சென்டர் இணைந்து நடத்தியதால் நான் வெற்றி பெற முடிந்தது என்று கூறினார். மேலும், நான் இந்த தேர்வுக்காக 8 வருடங்களாக படித்தேன். தற்போது இருக்கின்ற மாணவர்களுக்கு இவ்வளவு காலம் தேவைப்படாது. அவர்கள் குறுகிய காலத்திலேயே இது போன்ற தேர்வில் வெற்றி பெற முடியும். அதற்கான அனைத்து வசதிகளும் தமிழக அரசு அவர்களுக்கு ஏற்படுத்தி தந்துள்ளது என்றும் கூறினார்1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- 2026ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் அதிமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் நல்லாட்சி அமைய உள்ளதை தொடர்ந்து, கழக ஆட்சியின் சாதனைகளை விளக்கி, பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டி காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் ஊராட்சியில், மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் , அவர்கள் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கினர். ___________ அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த தமிழகத்தை அமளிக்காடாக மாற்றி பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தி வரும் திமுக ஆட்சியை விரட்டும் வகையில், தமிழகமெங்கும் வாக்காளப் பெருமக்களை நேரில் சந்தித்து விடியா திமுக ஆட்சியின் அவலங்களை விளக்கியும், கழக ஆட்சியின் சாதனை திட்டங்களை விளக்கும் வகையிலும், கழக ஆட்சி மீண்டும் மலர்ந்திடும் வகையிலும் தமிழகமெங்கும் பொது மக்களை நேரில் சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கி திண்ணை பிரச்சாரம் நடை பெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான மணிமங்கலம் வேணுகோபால் அவர்கள் ஏற்பாட்டில், குன்றத்தூர் ஒன்றிய கழக செயலாளரும் ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மதனந்தபுரம் கே.பழனி அவர்கள் தலைமையில், காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் ஊராட்சியில் கடைவீதி பகுதியில், 2026ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெற, பொதுமக்களிடம் கழக ஆட்சியின் சாதனைகளை விளக்கி, மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் ,பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் விவசாய பிரிவு ஒன்றிய செயலாளர் எச்.டி.சிவராஜ் உட்பட ஏராளமான கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.1
- Post by Govindappa Govindappa1