Shuru
Apke Nagar Ki App…
கரூர் மாவட்டம், வெள்ளி யணையில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இரவு நேரங்களில் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மின்வெட்டு தொடர்பாக மின்வாரியத்தில் பலமுறை புகார் அளித்தும், முறையாக பதில் அளிக்கப்படுவதில்லை என கூறப்படுகிறது. இதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மின்வெட்டு பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Karur Wood's Tv
கரூர் மாவட்டம், வெள்ளி யணையில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இரவு நேரங்களில் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மின்வெட்டு தொடர்பாக மின்வாரியத்தில் பலமுறை புகார் அளித்தும், முறையாக பதில் அளிக்கப்படுவதில்லை என கூறப்படுகிறது. இதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மின்வெட்டு பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி அவதூறு பரப்பி பணம் பறிக்க முயற்சி: கரூர் தொழிலதிபர் ஆட்சியர், எஸ்.பி.யிடம் புகார் தனது புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதுடன், பணம் பறிக்க நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கரூரைச் சேர்ந்த தொழிலதிபர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் ரியல் எஸ்டேட் மற்றும் திருப்பூரில் கார்மென்ட்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், கரீமா என்ற பெண் சமூக வலைதளத்திற்கு அளித்த பேட்டியில், சாகுல் ஹமீது தன்னை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாகவும், பின்னர் தகாத வார்த்தைகளால் பேசி வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும் குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த 7-ஆம் தேதி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சாகுல் ஹமீது தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கரீமா புகார் அளித்துள்ளார். அப்போது ஊடகங்களிடம் பேசிய அவர், சாகுல் ஹமீதின் புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி அவதூறு பரப்பியதாகவும் சாகுல் ஹமீது தனது புகாரில் தெரிவித்துள்ளார். அரவக்குறிச்சியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரின் தூண்டுதலின் பேரிலேயே தன் மீது வீண் பழி சுமத்தப்படுவதாகவும், தன்னிடம் இருந்து பணத்தை பறிக்கும் நோக்கில் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், மேலும், சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட தகவல்களால் தானும் தனது குடும்பத்தினரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், தங்களது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, தனது புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி அவதூறு பரப்பியதாக கூறப்படும் கரீமா மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்படுபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் சாகுல் ஹமீது புகார் மனு அளித்துள்ளார்.2
- கரூர் மாவட்டம், வெள்ளி யணையில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இரவு நேரங்களில் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மின்வெட்டு தொடர்பாக மின்வாரியத்தில் பலமுறை புகார் அளித்தும், முறையாக பதில் அளிக்கப்படுவதில்லை என கூறப்படுகிறது. இதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மின்வெட்டு பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- *பாலவிடுதியில் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் சாலை மறியல் | BREAKING NEWS | IHRPC NEWS* கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், பாலவிடுதி கிராமத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் தற்போது திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மின்வெட்டு தொடர்பாக மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை தகவல் கேட்டும் உரிய விளக்கம் கிடைக்கவில்லை எனக் கூறி, பொதுமக்கள் சாலையில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது சாலை மறியல் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பாலவிடுதி பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. மின்வெட்டு பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகும்…1
- காட்டுப்புத்தூர் இன்று நடைபெற்ற வார சந்தையில் குவிந்த பொதுமக்கள் திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் மோகனூர் சாலையில் இன்று நடைபெற்ற வெள்ளிக்கிழமை வார சந்தையில் காய்கனிகள் வாங்குவதற்கு பொதுமக்கள் குவிந்தனர்.கத்தரிக்காய் தக்காளி வெங்காயம் முட்டைகோஸ் உருளைக்கிழங்கு காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகள் வாங்குவதற்கு காட்டுப்புத்தூர் சீலை பிள்ளையார் புத்தூர் ஸ்ரீ ராம சமுத்திரம் சின்ன பள்ளிபாளையம் பெரிய பள்ளிபாளையம் பிடாரமங்கலம் உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட கிராம மக்கள் காய்கனிகள் வாங்குவதற்கு குவிந்துள்ளனர்1
- லிட்டர் இமானுவேல் 69 ஆவது குருபூஜை விழா திமுக திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்எல்ஏ மலர் தூவி மரியாதை. விக்டர் இம்மானுவேல் 69 ஆவது குருபூஜை தினத்தை முன்னிட்டு விக்டர் இம்மானுவேல் திருவுருவப்படத்திற்கு திமுகதிருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னால் எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் மலர் தூவி மரியாதை செலுத்தினார் உடன் நகரச் செயலாளர் சிவக்குமார், மாவட்டத் துணைச் செயலாளர் மயில்வாகனன், உன் முன்னாள் ஒன்றிய செயலாளர் சோழன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவன் நடராஜன், சித்தூர் மணிவேல் நகராட்சி கவுன்சிலர்கள் சுபஸ்ரீ பாலகுமார், முகேஷ், தொண்டரணி அமைப்பாளர் ரியல் எஸ்டேட் கார்த்திக், கிளைச் செயலாளர் முருகன், புதுப்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் சரவணன், பட்டாசு செந்தில், மகளிர் அணி சாந்தி உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.1
- Post by Prasanth1
- திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சாலையில் உணவு மற்றும் உணவுகள் துறை அமைச்சர் வெங்கட்ரமணன் பழைய வத்தலகுண்டு சாலையில் அமைந்துள்ள உணவு மற்றும் வணிக கழக கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டது உணவுப் பொருட்களின் தரத்தை குறித்து ஆய்வு செய்தார்1
- தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு நாள்:மலர் தூவி மரியாதை கரூர் மாவட்ட அதிமுக சார்பில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு தினத்தை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். கரூர் பழனியப்பா தெரு பகுதியில் உள்ள கரூர் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு தினத்தை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சர்மான சின்னசாமி மற்றும் அதிமுக கழக மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் அதிமுக கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.1