Shuru
Apke Nagar Ki App…
இரவு இன்னிசை...............இரவு வணக்கம்.................
NAMADHU ARASU(Krishna M Com)
இரவு இன்னிசை...............இரவு வணக்கம்.................
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by NAMADHU ARASU(Krishna M Com)1
- சென்னை இராயபுரம் தொகுதியில் பழைய வண்ணாரப்பேட்டை மற்றும் காசிமேடு பகுதியில் அதிமுக நிர்வாகிகள் உடல் நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு காரணத்தால் இருவர் உயிரிழந்தனர். இதனை அறிந்த அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று நேரில் அஞ்சலி செலுத்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். அருகில் மாவட்ட பகுதி வட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.1
- Post by Selvi3
- கிருஷ்ணகிரி பழையபேட்டை மகாராஜா கடை ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ அன்னை அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஐந்தாம் கால யாக வேள்வி மங்கள இசையுடன்மகா பூர்ண ஹதி கடம் புறப்பாடு, பால்குடம், திருவீதி உலா அங்காள பரமேஸ்வரி அம்மன் அபிஷேகம் மற்றும் அலங்கார ஆராதனை மங்கல இசை ஒலிக்க வேதபாராயணங்கள் நடைபெற்றது .மேலும் அன்னதானமும் நடைபெற்றது1
- தருமபுரி அடுத்த அதியமான்கோட்டையில் வள்ளல் அதியமான் பிறந்த நாள் விழா தகடூரை ஆட்சிபுரிந்த மன்னர் வள்ளல் அதியமான் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், நடப்பு ஆண்டுஅதியமான் பிறந்த நாள் விழா தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ள அதியமான் கோட்டத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் பங்கேற்று வள்ளல் அதியமான் மற்றும் அவ்வையார் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அதியமான் வரலாறு தொடர்பான தகவல்களுடன் அதியமான் கோட்டத்தில் நிறுவப்பட்டுள்ள பதாகைகளை பார்வையிட்டார். மேலும் வள்ளல் அதியமானின் புகழ் இளைய தலைமுறையினரும் அறியும் வைகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பொதுமக்களும் அதியமான் மற்றும் அவ்வையார் உருவச் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.1
- பாபநாசத்தில் தஞ்சை மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பாபநாசம், 108 சிவாலயம், வங்காரம்பேட்டை, திருப்பாலைத்துறை, கபிஸ்தலம், ஆகிய இடங்களில் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் சுகுமாரன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் சௌந்தரராஜன் முன்னிலை வகித்தார். ஏஐடியுசி மாநில செயலாளர் தில்லைவனம் கலந்து கொண்டு மே தின கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். விழாவில் மாவட்டத் துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன், கிளை நிர்வாகிகள் கலியமூர்த்தி, நவராஜ், புகழேந்தி, ராஜேந்திரன், மகாலிங்கம், பாஸ்கர் ,முருகானந்தம், பாலகுரு, சீனிவாசன், மணி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.1
- எட்டுக்குடி ஸ்ரீ முருகன் சித்ரா பௌர்ணமி பெருவிழா 56 மணி நேர இடைவிடாத பாலாபிஷேகம்: பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பால்காவடிகள், ரதக்காவடிகளுடன் குவிந்த பக்தர்கள் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள முருகனின் ஆதிபடைவீடாக போற்றப்படும் எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி பெருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய இந்த 11 நாள் பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக, 56 மணி நேர இடைவிடாத பாலாபிஷேகம் நடைபெற்று வருவது பக்தர்களின் ஆன்மிக உற்சாகத்தை அதிகரித்துள்ளது. தேரோட்டத்தைத் தொடர்ந்து தொடங்கிய பாலாபிஷேகம், பௌர்ணமி தினமான இன்று இடைவிடாமல் நடந்து வருகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் மூன்று மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, புஷ்பக்காவடி உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.இந்த பெருவிழாவின் மற்றொரு சிறப்பாக, ரதக் காவடி எடுத்து வரும் பக்தர்களின் பக்தி வெளிப்பாடு அனைவரையும் ஈர்த்து வருகிறது. குறிப்பாக, வலிவலம் கீழத்தெரு ஸ்ரீ முருகன் அடிமை குழுவினரின் எட்டாவது ஆண்டு ரதக் காவடி ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது.வலிவலம் ஸ்ரீ வெள்ளை விநாயகர் கோவிலில் இருந்து தொடங்கிய இந்த ரதக் காவடி ஊர்வலம், கொளப்பாடு, பையூர், திருக்குவளை உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்று, எட்டுக்குடி முருகன் கோவிலை சென்றடைந்தது. வழியெங்கும் பக்தர்கள் மலர் தூவி வரவேற்று பக்தி உணர்வை வெளிப்படுத்தினர்.இந்த ரதக் காவடியை சுமந்த இளைஞர்கள், தாளம் மற்றும் பக்திப் பாடல்களுக்கு ஏற்ப உற்சாகமாக நடனமாடி சென்றது திருவிழாவிற்கு தனி சிறப்பை சேர்த்தது. இந்நிலையில், வரும் மே 2ஆம் தேதி இரவு 11 மணி வரை கோவில் நடை சாத்தப்படாமல், 56 மணி நேர இடைவிடாத பாலாபிஷேகம் தொடர்ந்து நடைபெறவுள்ளது.1
- வேப்பனப்பள்ளி அருகே உள்ள V. மாதேப்பள்ளி கூட் ரோட்டில் அமைந்துள்ள தொழிலாளர் சங்கத்தின் தலைமைஅலுவலகத்தில்தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது இந்த தொழிலாளர் தினத்தைதொழிலாளர் சங்கமாநிலத் தலைவர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றதுஇந்த நிகழ்ச்சியில் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டதுமேலும் நிகழ்ச்சியில் தொழிலாளர்,பள்ளிமாணவமாணவிகள்ஆகியவர்கள் கலந்து கொண்டன.1