கும்பகோணம் மூர்த்தி செட்டி தெருவில் அமைந்துள்ள ஆரிய வைசியர்களுக்கு சொந்தமான ஸ்ரீ வாசவ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் தேவஸ்தானத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதற்கான முக்கிய ஏற்பாடுகளை தேவஸ்தான அறங்காவலர்கள் செய்திருந்தனர். கும்பாபிஷேக விழா கடந்த 21ஆம் தேதி தேவதா அனுக்ஞை, கணபதி பூஜை, எஜமானன் சங்கல்பம், கோ பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை, ரக்ஷாபந்தனம், காப்பு கட்டுதல், வாஸ்து சாந்தி ஆகிய நிகழ்வுகளுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, 22 ஆம் தேதி முதல் கால வேள்வி பூஜை, மூல மந்திர ஜபம், அக்னி ஸ்தாபனம், இரண்டாம் கால வேள்வி பூஜை, சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடைபெற்றன. பின்னர், 23ஆம் தேதி மூன்றாம் கால வேள்வி பூஜை, விசேஷ சந்தி, பிம்பஸ்தாபனம், நான்காம் கால வேள்வி பூஜை, புண்யாஹவாசனம், கலா ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை போன்ற சடங்குகள் நடத்தப்பட்டன. முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகத்தையொட்டி, இன்று காலை ஐந்தாம் கால வேள்வி பூஜை, தேவதா ரக்ஷாபந்தனம், மகாபூர்ணாஹுதி, தீபாராதனை மற்றும் கடம் புறப்பாடு நிகழ்வுகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, மிதுன லக்னத்தில் மகா கும்பாபிஷேகம், ராஜகோபுரம் கும்பாபிஷேகம், பரிவார கும்பாபிஷேகம், மூலமூர்த்தி கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை ஆகியவை சிறப்பாக நடத்தப்பட்டன. கும்பாபிஷேகம் முடிந்த பிறகு, பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் நடைபெற்றதுடன், மகா அபிஷேகம், விசேஷ அலங்காரம், சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் மகா தீபாராதனையும் நடைபெற்றன.
கும்பகோணம் மூர்த்தி செட்டி தெருவில் அமைந்துள்ள ஆரிய வைசியர்களுக்கு சொந்தமான ஸ்ரீ வாசவ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் தேவஸ்தானத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதற்கான முக்கிய ஏற்பாடுகளை தேவஸ்தான அறங்காவலர்கள் செய்திருந்தனர். கும்பாபிஷேக விழா கடந்த 21ஆம் தேதி தேவதா அனுக்ஞை, கணபதி பூஜை, எஜமானன் சங்கல்பம், கோ பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை, ரக்ஷாபந்தனம், காப்பு கட்டுதல், வாஸ்து சாந்தி ஆகிய நிகழ்வுகளுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, 22 ஆம் தேதி முதல் கால வேள்வி பூஜை, மூல மந்திர ஜபம், அக்னி ஸ்தாபனம், இரண்டாம் கால வேள்வி பூஜை, சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடைபெற்றன.
பின்னர், 23ஆம் தேதி மூன்றாம் கால வேள்வி பூஜை, விசேஷ சந்தி, பிம்பஸ்தாபனம், நான்காம் கால வேள்வி பூஜை, புண்யாஹவாசனம், கலா ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை போன்ற சடங்குகள் நடத்தப்பட்டன. முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகத்தையொட்டி, இன்று காலை ஐந்தாம் கால வேள்வி பூஜை, தேவதா ரக்ஷாபந்தனம், மகாபூர்ணாஹுதி, தீபாராதனை மற்றும் கடம் புறப்பாடு நிகழ்வுகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, மிதுன லக்னத்தில் மகா கும்பாபிஷேகம், ராஜகோபுரம் கும்பாபிஷேகம், பரிவார கும்பாபிஷேகம், மூலமூர்த்தி கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை ஆகியவை சிறப்பாக நடத்தப்பட்டன. கும்பாபிஷேகம் முடிந்த பிறகு, பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் நடைபெற்றதுடன், மகா அபிஷேகம், விசேஷ அலங்காரம், சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் மகா தீபாராதனையும் நடைபெற்றன.
- கும்பகோணம் மூர்த்தி செட்டி தெருவில் அமைந்துள்ள ஆரிய வைசியர்களுக்கு சொந்தமான ஸ்ரீ வாசவ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் தேவஸ்தானத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதற்கான முக்கிய ஏற்பாடுகளை தேவஸ்தான அறங்காவலர்கள் செய்திருந்தனர். கும்பாபிஷேக விழா கடந்த 21ஆம் தேதி தேவதா அனுக்ஞை, கணபதி பூஜை, எஜமானன் சங்கல்பம், கோ பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை, ரக்ஷாபந்தனம், காப்பு கட்டுதல், வாஸ்து சாந்தி ஆகிய நிகழ்வுகளுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, 22 ஆம் தேதி முதல் கால வேள்வி பூஜை, மூல மந்திர ஜபம், அக்னி ஸ்தாபனம், இரண்டாம் கால வேள்வி பூஜை, சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடைபெற்றன. பின்னர், 23ஆம் தேதி மூன்றாம் கால வேள்வி பூஜை, விசேஷ சந்தி, பிம்பஸ்தாபனம், நான்காம் கால வேள்வி பூஜை, புண்யாஹவாசனம், கலா ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை போன்ற சடங்குகள் நடத்தப்பட்டன. முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகத்தையொட்டி, இன்று காலை ஐந்தாம் கால வேள்வி பூஜை, தேவதா ரக்ஷாபந்தனம், மகாபூர்ணாஹுதி, தீபாராதனை மற்றும் கடம் புறப்பாடு நிகழ்வுகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, மிதுன லக்னத்தில் மகா கும்பாபிஷேகம், ராஜகோபுரம் கும்பாபிஷேகம், பரிவார கும்பாபிஷேகம், மூலமூர்த்தி கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை ஆகியவை சிறப்பாக நடத்தப்பட்டன. கும்பாபிஷேகம் முடிந்த பிறகு, பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் நடைபெற்றதுடன், மகா அபிஷேகம், விசேஷ அலங்காரம், சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் மகா தீபாராதனையும் நடைபெற்றன.2
- கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அருகேயுள்ள குச்சூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காத்தாயி அம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று சீரும் சிறப்போடும் வெகு விமரிசையாக நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் இந்த புனித நிகழ்வு சிறப்பாக நடந்தேறியது.1
- நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் இராமச்சந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்த செஸ் சாம்பியன் சபரிநாதன், குக்கிராமத்தில் பிறந்து ஒழுகும் ஓலைக் குடிசையில் வளர்ந்து வருகிறார். கடுமையான வறுமையின் பிடியிலும் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான செஸ் போட்டிகளில் கலந்துகொண்டு சாதனைகள் படைத்து வரும் இவர், உலக செஸ் மேடைக்கு முன்னேற வேண்டும் என்ற கனவுடன் போராடி வருகிறார். சபரிநாதனின் தந்தை ஐயப்பன் தினசரி கூலித் தொழிலாளியாகவும், தாய் மேனகா குடும்பத்தை நடத்தப் போராடுபவராகவும் உள்ளனர். சாட்டியக்குடி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் சபரிநாதன், ஒன்றாம் வகுப்பு முதலே செஸ் விளையாட்டில் ஆர்வம் கொண்டு, தனது தம்பி சரணுடன் சேர்ந்து விளையாடத் தொடங்கினார். ஒன்பதாம் வகுப்பில் ராமநாதபுரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற இவர், அதன் பிறகு அரசு மற்றும் தனியார் நடத்திய பல்வேறு போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று பரிசுகளைக் குவித்துள்ளார். கடந்த ஆண்டு அசாம் மாநிலத்தில் நடைபெற்ற சர்வதேச சதுரங்கப் போட்டியில் 46வது இடத்தைப் பிடித்து தனது திறமையை உலக அரங்கில் நிரூபித்த சபரிநாதன், திருவாரூர், தஞ்சாவூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்த போட்டிகளிலும் பங்கேற்று ரேட்டிங் புள்ளிகளைப் பெற்றுள்ளார். இருபதுக்கும் மேற்பட்ட கோப்பைகளையும் ஐம்பதுக்கும் மேற்பட்ட பதக்கங்களையும் வென்று, இளம் வயதிலேயே "சதுரங்க நாயகன்" என அழைக்கப்படும் நிலையை அடைந்துள்ளார். எனினும், இந்த சாதனைகளின் பின்னணியில் ஒழுகும் கூரை வீடு, பொருளாதாரச் சிரமம் மற்றும் அடிப்படை வசதிகளே இல்லாத வாழ்க்கை எனப் பல கசப்பான உண்மைகள் உள்ளன. செஸ் பயிற்சிக்குத் தேவையான டைமர் மற்றும் லேப்டாப் போன்ற உபகரணங்களை வாங்க முடியாத நிலை உள்ளதோடு, தினசரி கூலி வேலைக்குச் செல்லும் தந்தையை சிரமப்படுத்த விரும்பாத சபரிநாதன், தனது மனக் கவலைகளை வெளிப்படுத்தாமல் அமைதியாக உள்ளார். "எனக்கு இன்னும் நிறைய போட்டிகளில் வெல்லணும்… நாட்டுக்கு பெயர் வாங்கணும்…" என்று ஆசைப்படும் இந்த திறமையான மாணவனுக்கு அரசு உதவி கிடைத்தால், அவர் இன்னும் பல உயரங்களை அடைய முடியும் என்பதில் சந்தேகமில்லை. வறுமையை வென்று உலக மேடையில் சாதனை படைக்கத் துடிக்கும் இத்தகைய திறமையாளர்களை அரசு கவனித்து, தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு ஊக்குவிக்கப்படும்போதுதான் தமிழகம் விளையாட்டுத் துறையில் மேலும் உயரங்களை அடையும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- இன்று செம்போடையில், தமிழக முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளி மாணவர்கள் கல்வி ஆண்டு முழுவதும் தனியார் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யும் வகையில் பயண அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தவெக மாவட்ட செயலாளர் சுகுமாறன் தலைமை தாங்கினார். அவர் மாணவர்களுக்கு பயண அட்டைகளை வழங்கியதுடன், சிறப்பு பேருந்தையும் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை தனியார் பேருந்து உரிமையாளர் குணபாலன் செய்திருந்தார். விஜயின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் மாணவர்களுக்கு இந்த இலவச பேருந்து பயண வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.1
- புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகாவிற்கு உட்பட்ட தினையாகுடி திருநெல்லிவயல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சமயபுரத்து முத்து மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கான மகா கும்பாபிஷேக விழா பக்தி பரவசத்துடன் சிறப்பாக நடைபெற்றது. கடந்த 21ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கிய இவ்விழா, தொடர்ந்து யாகசாலை பூஜைகள் மற்றும் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் களைகட்டியது. விழாவின் முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகம் இன்று காலை வேத விற்பன்னர்களின் மந்திர ஓசையுடன் நடத்தப்பட்டது. புனித கலசங்களில் பூஜிக்கப்பட்ட தீர்த்தம் ஆலய விமான கலசங்கள் மற்றும் பரிவார தெய்வங்களின் மீது ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் இனிதே நிறைவேறியது. இதனைத் தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இந்த மகா கும்பாபிஷேக விழாவில் தினையாகுடி, திருநெல்லிவயல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாகுடி காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.1
- புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள கண்ணனூர் ஊராட்சிக்குட்பட்ட முள்ளிக்கண்ணுமாயில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் அ. செல்வம் இன்று (24/06/2026) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குநர் ஜெயசுதா, திருமயம் வட்டார வளர்ச்சி அலுவலர்களான பேச்சியம்மாள், பிரான்சிஸ் மற்றும் பலர் உடனிருந்தனர்.1
- திருச்சி மாவட்டம் மருங்காபுரியை அடுத்த துவரங்குறிச்சியில் உள்ள சேது பள்ளி வளாகம் முன்பு, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒரு குரங்கு காயமடைந்தது. இதை அறிந்த Sky ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உடனடியாக அந்த குரங்கை மீட்டு பத்திரமாக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு காயமடைந்த குரங்கிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.2
- சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி ஒன்றியம் விராட்சிலை ஊராட்சி ஆண்டாள் ஊரணியில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் (ஓய்வு) அ.செல்வம், இன்று 24/06/2026 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஜெயசுதா உடனிருந்தார். சீமை கருவேல மரங்களை முழுவதுமாக அகற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்தே இந்த அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.1