Shuru
Apke Nagar Ki App…
வெள்ளலுர்: அருகில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொடியேற்றம் நிகழ்ச்சி மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் வெள்ளலூர் நாட்டைச் சேர்ந்த கட்டைச்சோலைப்பட்டி கிராமத்தில் அமைந்துள் அருள்மிகு ஸ்ரீ பாமா ருக்மணி சமேத கோபாலகிருஷ்ணர் ஆலையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சியானது சிறப்பான முறையில் நடை பெற்றது இதில் ஏராலமான சிறு வகள் முதல் பெரியவர்கள் வரை காப்புக்கட்டி சென்றனர்
Melur n❤️ws
வெள்ளலுர்: அருகில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொடியேற்றம் நிகழ்ச்சி மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் வெள்ளலூர் நாட்டைச் சேர்ந்த கட்டைச்சோலைப்பட்டி கிராமத்தில் அமைந்துள் அருள்மிகு ஸ்ரீ பாமா ருக்மணி சமேத கோபாலகிருஷ்ணர் ஆலையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சியானது சிறப்பான முறையில் நடை பெற்றது இதில் ஏராலமான சிறு வகள் முதல் பெரியவர்கள் வரை காப்புக்கட்டி சென்றனர்
More news from தமிழ்நாடு and nearby areas
- வெள்ளலுர்: அருகில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொடியேற்றம் நிகழ்ச்சி மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் வெள்ளலூர் நாட்டைச் சேர்ந்த கட்டைச்சோலைப்பட்டி கிராமத்தில் அமைந்துள் அருள்மிகு ஸ்ரீ பாமா ருக்மணி சமேத கோபாலகிருஷ்ணர் ஆலையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சியானது சிறப்பான முறையில் நடை பெற்றது இதில் ஏராலமான சிறு வகள் முதல் பெரியவர்கள் வரை காப்புக்கட்டி சென்றனர்1
- சிங்கம்புணரி மங்கள விநாயகர் மங்கள விநாயகர் திருக்கோயிலில் இன்று காலை ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்திருக்கோயிலில் இன்று காலை ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் அருள்தரும் ஸ்ரீ மங்கள விநாயகர் திருக்கோயிலில் இன்று காலை ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. நேற்று இரவு முதற்கால யாகபூஜை நிறைவுபெற்றது. இன்று காலை இரண்டாம் கால யாகபூஜைகளுக்குப் பின் புனித தீர்த்த குடங்கள் கோவிலை வலம் வந்து விமானத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். சர்வ சாதகம் அருணகிரி சிவாச்சாரியார் தலைமையில் ஏழு சிவாச்சாரியார்கள் சிறப்பு யாக வேள்விகளை நடத்தினர். நிறைவாக பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.1
- பி. சி. ஆர் மற்றும் எஸ்சி /எஸ்டி சட்டங்களில் பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்படுவதை தடுக்க மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள எஸ் .டி மஹாலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பி. சி. ஆர் மற்றும் எஸ்சி /எஸ்டி சட்டங்களில் பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்படுவதை தடுக்க மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள எஸ் .டி மஹாலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் சமூகங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு பி. சி .ஆர் மற்றும் எஸ்சி /எஸ்டி சட்டங்களின் நடைமுறை தொடர்பான தங்களது கருத்துக்களையும் கோரிக்கைகளையும் முன்வைத்தனர் தமிழ் வேள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர்SS. சரவணச்செல்வம்MA ஆறுநாட்டு வேளாளர் முன்னேற்ற சங்க தலைவர் பேசியதாவது இது எந்த சமுதாயத்திற்கும் எதிரான கூட்டம் அல்ல என தெரிவித்தார்1
- மூன்று நாட்களாக உபயோகத்தில் இல்லாத குடிநீர் பொதுமக்கள் அவதி. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வைகை வடகரை கிராமத்தில் மூன்று நாட்களுக்கு மேலாக பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய குடிநீர் மோட்டார் பழுதாகி உள்ளது இதனால் மூன்றாவது நாட்களாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர் சம்பந்தப்பட்ட நிர்வாகம் அதனை சரி செய்வதன் விரைந்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.1
- வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள எல்.இ.டி. விளக்குகளால் இரவில் விபத்துகள் ஏற்படும் அபாயம். வாகனத் தணிக்கை மேற்கொண்டு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய பொதுமக்கள் கோரிக்கை. சிவகங்கை மாவட்டத்தில் இரவு நேரங்களில் சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு, விதிமுறைகளை மீறி பொருத்தப்பட்டுள்ள அதிக ஒளி வீசும் எல்.இ.டி. முகப்பு விளக்குகள் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக சில இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள அதிக சக்தி கொண்ட எல்.இ.டி. விளக்குகளின் ஒளி, எதிரே வரும் வாகன ஓட்டிகளின் கண்களில் நேரடியாக பாய்வதால் சில விநாடிகள் சாலையை தெளிவாக பார்க்க முடியாத நிலை உருவாகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தடுமாறுவதோடு, விபத்து அபாயமும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இரவு பயணங்களின் போது இந்த பிரச்சினை அதிகமாக காணப்படுவதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். விதிமுறைகளை மீறி மாற்றியமைக்கப்பட்ட முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீது வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் காவல்துறையினர் இணைந்து சிறப்பு வாகனத் தணிக்கை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனுமதிக்கப்பட்ட தரநிலைகளுக்கு உட்பட்ட விளக்குகள் மட்டுமே வாகனங்களில் பயன்படுத்தப்படுவதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது!1
- ஆன்லைன் முதலீட்டு மோசடி தொடர்பாக விழிப்புணர்வு மற்றும் அறிவுறுத்தல் அறிவிப்பு மதுரை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 'FQL Trading Wallet' என்ற ஆன்லைன் செயலி மூலம் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் (USDT) முதலீடு செய்தால் 45 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என்றும், தினசரி அதிக லாபம் ஈட்டலாம் என்றும் ஆசைவார்த்தைகள் கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் பெறப்பட்டுள்ளன. நிதி மோசடி தொடர்பாக மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இதுவரை நிதி மோசடி வழக்கில் தொடர்புடைய 12 எதிரிகள் கைது செய்யப்பட்டு, அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு, அவர்களது பாஸ்போர்ட் முடக்குவதற்கும் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், நிதி மோசடியில் பாதிக்கப்பட்டு பணத்தை இழந்த பொதுமக்களுக்கு, அவர்கள் இழந்த பணத்தை மீட்டு தருவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புகார் அளிக்கும் வசதி இச்செயலியின் மூலம் பணத்தை இழந்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள், புகார் அளிப்பதற்காக மதுரைக்கு நேரில் வர் வேண்டிய அவசியமில்லை. பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட அருகிலுள்ள காவல் நிலையத்திலோ அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்திலோ நேரடியாக புகார் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.1
- திண்டுக்கல்லை அடுத்துள்ள அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழா ஐப்பசி மாதம் நடைபெறுவது வழக்கம். ஆனால் திருவிழா நடத்துவதற்காக பல்லியிடம் சகுணம் கேட்பது வழக்கம். அதற்காக ஊர் பொதுமக்கள் கோவில் வளாகத்தின் வலது புற பெண் பூதம் முன் அமர்ந்து பல்லியிடம் சகுணம் கேட்பர். இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சகுணம் கிடைக்காததால் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மாலை இரண்டாவது முறையாக பல்லியிடம் சகுணம் கேட்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்தனர்1
- PCR மற்றும் SC/ST சட்டங்களில் பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்படுவதைத் தடுக்க ஆலோசனைக் கூட்டம் PCR மற்றும் SC/ST சட்டங்களில் பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்படுவதைத் தடுக்க ஆலோசனைக் கூட்டம் மதுரை, ஆகஸ்ட் 28: பி.சி., எம்.பி.சி., டி.என்.டி. பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில், PCR மற்றும் SC/ST சட்டங்களின் கீழ் பொய்யாக வழக்குகள் பதிவு செய்யப்படுவதைத் தடுக்கக் கோரி, இன்று மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள எஸ்.டி. மஹாலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தை பி.சி., எம்.பி.சி., டி.என்.டி. பாதுகாப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஓவை தியாகராஜன் ஒருங்கிணைத்தார். முக்குலத்தோர் நல பாதுகாப்புப் பேரவையின் பொதுச் செயலாளர் நந்தகுமார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் சமூகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு, PCR மற்றும் SC/ST சட்டங்களின் நடைமுறை தொடர்பான தங்களது கருத்துகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 1. தமிழகத்தில் PCR மற்றும் SC/ST சட்டங்களின் கீழ் உண்மைத்தன்மை இல்லாமல் அல்லது பொய்யாக வழக்குகள் பதிவு செய்யப்படுவதை இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. 2. இந்தச் சட்டங்களால் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மக்கள் பாதிக்கப்படாத வகையில், அவர்களுக்கான உரிய சட்டப் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 3. உச்ச நீதிமன்றத்தின் தொடர்புடைய தீர்ப்புகளின் சட்டக் கோட்பாடுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 4. பி.சி., எம்.பி.சி., டி.என்.டி. பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது. 5. PCR மற்றும் SC/ST சட்டங்கள் தொடர்பான வழக்குகளில் சட்டரீதியான வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக, கூட்டமைப்பின் சார்பில் தனி சட்ட ஆலோசகர் குழு அமைக்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது. 6. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மக்களின் குறைகளை ஆய்வு செய்து, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தனி ஆய்வுக் குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் அனைத்து தரப்பினருக்கும் உரிய பாதுகாப்பும் நீதியும் கிடைக்க தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூட்டமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தின் நிறைவில் மக்கள் தொடர்பாளர் போஸ் நன்றி கூறினார். — பி.சி., எம்.பி.சி., டி.என்.டி. பாதுகாப்பு கூட்டமைப்பு, தமிழ்நாடு1