அன்னவாசல் அரசுமேல்நிலைப் பள்ளியில் உள்ள வகுப்பறைக்குள் பாம்புகள் புகுந்ததால் பரபரப்பு அன்னவாசல் அரசுமேல்நிலைப் பள்ளியில் உள்ள வகுப்பறைக்குள் பாம்புகள் புகுந்தது தீயணைப்பு துறையினர் தீவிர தேடுதலுக்கு பின்னர் பாம்புகள் சிக்காததால் பரபரப்பு அன்னவாசல் அரசுமேல்நிலைப் பள்ளியில் 6-ம்வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ளது இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று காலை வழக்கம் போல் பள்ளி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வகுப்பறைக்குள் சென்ற ஆசிரியர் பாம்புகள் செல்வதை கண்டுள்ளார் பின்னர் அந்த பாம்புகள் வகுப்பறைக்குள் உள்ள ஆய்வக அறைக்குள் செல்வதை கண்டுள்ளார். இதனையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் இதுகுறித்து இலுப்பூர் தீயணைப்புதுறையினருக்கு தகவல் அளித்தார் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் ஒவ்வொரு இடத்தையும் சோதனை செய்தனர் இதில் பாம்புகள் எதுவும் சிக்கவில்லை. இந்த பள்ளியில் உள்ள வகுப்பறை கட்டடம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கட்டிடமாகும் இந்த கட்டிடத்தில் வகுப்பறை மற்றும் ஆய்வாகமும் செயல்பட்டு வருகிறது இந்த ஆய்வகத்தில் உள்ள கல் மேஜைகள் பழுதடைந்து மற்றும் ஆய்வுகள் செய்யும்போது வெளியாகும் கழிவுநீர்கள் செல்லும் வழி அமைப்புகள் முறையாக பராமரிக்காததால் இந்த அமைப்பு சேதப்பட்டு உள்ளது. இதன் வழியே பாம்புகள் வெளியேறிருக்கலாம் என தீயணைப்புதுறையினர் தெரிவித்தனர்
அன்னவாசல் அரசுமேல்நிலைப் பள்ளியில் உள்ள வகுப்பறைக்குள் பாம்புகள் புகுந்ததால் பரபரப்பு அன்னவாசல் அரசுமேல்நிலைப் பள்ளியில் உள்ள வகுப்பறைக்குள் பாம்புகள் புகுந்தது தீயணைப்பு துறையினர் தீவிர தேடுதலுக்கு பின்னர் பாம்புகள் சிக்காததால் பரபரப்பு அன்னவாசல் அரசுமேல்நிலைப் பள்ளியில் 6-ம்வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ளது இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று காலை வழக்கம் போல் பள்ளி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வகுப்பறைக்குள் சென்ற ஆசிரியர் பாம்புகள் செல்வதை கண்டுள்ளார் பின்னர் அந்த பாம்புகள் வகுப்பறைக்குள் உள்ள ஆய்வக அறைக்குள் செல்வதை கண்டுள்ளார். இதனையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் இதுகுறித்து இலுப்பூர் தீயணைப்புதுறையினருக்கு தகவல் அளித்தார் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் ஒவ்வொரு இடத்தையும் சோதனை செய்தனர் இதில் பாம்புகள் எதுவும் சிக்கவில்லை. இந்த பள்ளியில் உள்ள வகுப்பறை கட்டடம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கட்டிடமாகும் இந்த கட்டிடத்தில் வகுப்பறை மற்றும் ஆய்வாகமும் செயல்பட்டு வருகிறது இந்த ஆய்வகத்தில் உள்ள கல் மேஜைகள் பழுதடைந்து மற்றும் ஆய்வுகள் செய்யும்போது வெளியாகும் கழிவுநீர்கள் செல்லும் வழி அமைப்புகள் முறையாக பராமரிக்காததால் இந்த அமைப்பு சேதப்பட்டு உள்ளது. இதன் வழியே பாம்புகள் வெளியேறிருக்கலாம் என தீயணைப்புதுறையினர் தெரிவித்தனர்
- காட்டுப்புத்தூர் இன்று நடைபெற்ற வார சந்தையில் குவிந்த பொதுமக்கள் திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் மோகனூர் சாலையில் இன்று நடைபெற்ற வெள்ளிக்கிழமை வார சந்தையில் காய்கனிகள் வாங்குவதற்கு பொதுமக்கள் குவிந்தனர்.கத்தரிக்காய் தக்காளி வெங்காயம் முட்டைகோஸ் உருளைக்கிழங்கு காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகள் வாங்குவதற்கு காட்டுப்புத்தூர் சீலை பிள்ளையார் புத்தூர் ஸ்ரீ ராம சமுத்திரம் சின்ன பள்ளிபாளையம் பெரிய பள்ளிபாளையம் பிடாரமங்கலம் உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட கிராம மக்கள் காய்கனிகள் வாங்குவதற்கு குவிந்துள்ளனர்1
- புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி டிஇஎல்சி தொடக்கப்பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு டீ வாங்கிச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி பெற்றோர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் டிஇஎல்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் பயிலும் மாணவர்களை ஆசிரியர்கள் டீ வாங்குவதற்காக வெளியே அனுப்பும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் பள்ளி மாணவர்கள் டீ வாங்குவதற்காக கடைக்கு சென்று டீ வாங்கி வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மாணவர்கள் கல்வி கற்க வேண்டிய நேரத்தில் அவர்களை ஆசிரியர்களின் தனிப்பட்ட தேவைக்காக வெளியே அனுப்புவது சரியா? என பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வி நலனை கருத்தில் கொண்டு பள்ளி நிர்வாகம் இதுபோன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ குறித்து சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி டீ வாங்க அனுப்பிய ஆசிரியர்கள் மீது கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- லிட்டர் இமானுவேல் 69 ஆவது குருபூஜை விழா திமுக திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்எல்ஏ மலர் தூவி மரியாதை. விக்டர் இம்மானுவேல் 69 ஆவது குருபூஜை தினத்தை முன்னிட்டு விக்டர் இம்மானுவேல் திருவுருவப்படத்திற்கு திமுகதிருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னால் எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் மலர் தூவி மரியாதை செலுத்தினார் உடன் நகரச் செயலாளர் சிவக்குமார், மாவட்டத் துணைச் செயலாளர் மயில்வாகனன், உன் முன்னாள் ஒன்றிய செயலாளர் சோழன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவன் நடராஜன், சித்தூர் மணிவேல் நகராட்சி கவுன்சிலர்கள் சுபஸ்ரீ பாலகுமார், முகேஷ், தொண்டரணி அமைப்பாளர் ரியல் எஸ்டேட் கார்த்திக், கிளைச் செயலாளர் முருகன், புதுப்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் சரவணன், பட்டாசு செந்தில், மகளிர் அணி சாந்தி உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.1
- *பாலவிடுதியில் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் சாலை மறியல் | BREAKING NEWS | IHRPC NEWS* கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், பாலவிடுதி கிராமத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் தற்போது திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மின்வெட்டு தொடர்பாக மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை தகவல் கேட்டும் உரிய விளக்கம் கிடைக்கவில்லை எனக் கூறி, பொதுமக்கள் சாலையில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது சாலை மறியல் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பாலவிடுதி பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. மின்வெட்டு பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகும்…1
- புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி அவதூறு பரப்பி பணம் பறிக்க முயற்சி: கரூர் தொழிலதிபர் ஆட்சியர், எஸ்.பி.யிடம் புகார் தனது புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதுடன், பணம் பறிக்க நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கரூரைச் சேர்ந்த தொழிலதிபர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் ரியல் எஸ்டேட் மற்றும் திருப்பூரில் கார்மென்ட்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், கரீமா என்ற பெண் சமூக வலைதளத்திற்கு அளித்த பேட்டியில், சாகுல் ஹமீது தன்னை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாகவும், பின்னர் தகாத வார்த்தைகளால் பேசி வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும் குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த 7-ஆம் தேதி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சாகுல் ஹமீது தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கரீமா புகார் அளித்துள்ளார். அப்போது ஊடகங்களிடம் பேசிய அவர், சாகுல் ஹமீதின் புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி அவதூறு பரப்பியதாகவும் சாகுல் ஹமீது தனது புகாரில் தெரிவித்துள்ளார். அரவக்குறிச்சியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரின் தூண்டுதலின் பேரிலேயே தன் மீது வீண் பழி சுமத்தப்படுவதாகவும், தன்னிடம் இருந்து பணத்தை பறிக்கும் நோக்கில் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், மேலும், சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட தகவல்களால் தானும் தனது குடும்பத்தினரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், தங்களது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, தனது புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி அவதூறு பரப்பியதாக கூறப்படும் கரீமா மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்படுபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் சாகுல் ஹமீது புகார் மனு அளித்துள்ளார்.2
- திண்டுக்கல் அருகே உணவகத்தில் மோதல்: உண்மை தகவலை மறைத்து தவறான புகார் அளித்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு ரெட்டியார்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் உணவு பார்சல் வாங்கச் சென்ற வேலாம்பட்டியைச் சேர்ந்த நபர் தாக்கப்பட்டதாகவும், பின்னர் நடந்த சம்பவம் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குழந்தையுடன் உணவகத்திற்கு சென்ற அந்த நபர், 3 பார்சல் உணவு வாங்க முயன்றுள்ளார். அப்போது அவரிடம் இருந்த பணம் குறைவாக இருந்ததால், அங்கு பணியாற்றும் தனது உறவினரிடம் இரண்டு பார்சலுக்கான பணத்தை கொடுத்து, மீதமுள்ள தொகையை வீட்டிற்கு சென்று குழந்தைக்கு உணவு கொடுத்துவிட்டு மீண்டும் கொண்டு வந்து தருவதாக கூறியதாக கூறப்படுகின்றது. இதற்கு அங்கு பணியாற்றிய உறவினரான ஊழியர் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், உணவக உரிமையாளர்களில் ஒருவர் முழு பணத்தையும் செலுத்திவிட்டு பார்சலை வாங்கிச் செல்லுமாறு கூறியதாகவும், அதற்கு ஊழியர் "நான் பணத்தை கொடுத்து விடுகிறேன்" என்று தெரிவித்தும் உரிமையாளர் ஏற்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து, "இரண்டு பார்சல் மட்டும் போதும், ஒன்றை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டு அந்த நபர் கிளம்ப முயன்றபோது, மூன்று பார்சல்களுக்கு பணம் கொடுத்து விட்டு எடுத்துச் செல் மூன்று கட்டச் சொல்லிவிட்டு இரண்டை மட்டும் வாங்கிச் செல்வதா என்று கூறி தகராறு ஏற்பட்டதாகவும், பின்னர் அவரை சிலர் தாக்கியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.அங்கு நடந்த உரையாடல்களும் கல்லாவில் உள்ள கேமராவில் பதிவு ஆகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், சம்பவம் குறித்து தகவல் அறிந்து அப்பகுதி மக்கள் திரண்டு வந்து உணவகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அங்கு நடந்த உரையாடல்கள் வீடியோவாக பதிவாகியுள்ளதாகவும், ஆனால் அந்த பதிவுகளை மட்டும் நீக்கிவிட்டு, மது போதையில் வந்து தகராறு செய்ததாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, அதனை அடிப்படையாக கொண்டு சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக காவல்துறை ஒருதலைப் பட்சமாக செயல்படுவதாகவும் இரு தரப்பினரின் விளக்கங்களையும் பெற்று உரிய விசாரணை நடத்தாமல் தவறான தகவல்களை பரப்பாமல் . தீர விசாரித்து செய்தி வெளியிட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- கே குமார் செய்தியாளர் முசிறி முசிறி அருகே ஊரக்கரையில் 125 நாள் வேலை காத்திருப்பு போராட்டம் - அதிகாரிகள் யாரும் வராததால் அடுப்பு வைத்து கஞ்சி காய்ச்சி பொதுமக்கள் போராட்டம் திருச்சி மாவட்டம், முசிறி அருகே தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊரக்கரை ஊராட்சியில், 125 நாள் வேலை முழுமையாக வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விவசாய தொழிலாளர்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இன்று காலை 10 மணி முதல் நடைபெறும் போராட்டத்தை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாததுடன், பேச்சுவார்த்தைக்கும் வராததால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக அங்கேயே அடுப்பு வைத்து சமையல் செய்து கஞ்சி காய்ச்சி சாப்பிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர், முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாண்டியன், நிர்வாகிகள் வீரவிஜயன், சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகள் குறித்து பேசினர். கே குமார் செய்தியாளர் முசிறி கே குமார் செய்தியாளர் முசிறி முசிறி அருகே ஊரக்கரையில் 125 நாள் வேலை காத்திருப்பு போராட்டம் - அதிகாரிகள் யாரும் வராததால் அடுப்பு வைத்து கஞ்சி காய்ச்சி பொதுமக்கள் போராட்டம் திருச்சி மாவட்டம், முசிறி அருகே தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊரக்கரை ஊராட்சியில், 125 நாள் வேலை முழுமையாக வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விவசாய தொழிலாளர்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இன்று காலை 10 மணி முதல் நடைபெறும் போராட்டத்தை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாததுடன், பேச்சுவார்த்தைக்கும் வராததால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக அங்கேயே அடுப்பு வைத்து சமையல் செய்து கஞ்சி காய்ச்சி சாப்பிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர், முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாண்டியன், நிர்வாகிகள் வீரவிஜயன், சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகள் குறித்து பேசினர். மேலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மாவட்டம், முசிறி அருகே தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊரக்கரை ஊராட்சியில், 125 நாள் வேலை முழுமையாக வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விவசாய தொழிலாளர்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இன்று காலை 10 மணி முதல் நடைபெறும் போராட்டத்தை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாததுடன், பேச்சுவார்த்தைக்கும் வராததால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக அங்கேயே அடுப்பு வைத்து சமையல் செய்து கஞ்சி காய்ச்சி சாப்பிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர், முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாண்டியன், நிர்வாகிகள் வீரவிஜயன், சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகள் குறித்து பேசினர். மேலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.1
- புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் இமானுவேல் சேகரனாரின் 69-ஆம் ஆண்டு குருபூஜை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் இமானுவேல் சேகரனாரின் 69-ஆம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் அவரது திருவுருவப் படம் இடம்பெற்ற பதாகை அமைக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திரண்டு வந்து அவரது நினைவைப் போற்றினர். மேலும் இமானுவேல் சேகரனாரின் சமூகப் பங்களிப்பு தியாகம் மற்றும் சமுதாயத்திற்காக ஆற்றிய பணிகளை நினைவுகூரும் வகையில் மரியாதை செலுத்தப்பட்டது. குருபூஜையை முன்னிட்டு அப்பகுதியில் அமைதியான முறையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையொட்டி கறம்பக்குடி சீனிக்கடை முக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.1
- இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய் சொந்த காரணங்களுக்காக சென்றுள்ளாரா முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக சென்று உள்ளாரா என்ற விபரத்தினை அவர் தமிழகம் வந்த பின்னர் தெரிவிக்க வேண்டும். சிவகங்கையில் பாஜக தமிழக தலைவர் நைனார் நாகேந்திரன் பேட்டி சிவகங்கையில் பாஜக நிர்வாகி இல்ல நிகழ்வில் கலந்து கொள்ள வந்த தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தபோது, லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய் சொந்த காரணங்களுக்காக சென்றுள்ளாரா முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக சென்று உள்ளாரா என்ற விபரத்தினை அவர் தமிழகம் வந்த பின்னர் தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் மேலும் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.1