logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் இன்று (18.06.2026) 'மாணவர் குறைத்தீர்வு நாள் கூட்டம்' நடைபெற்றது. 12ஆம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர்களையும் 100% உயர்கல்வியில் சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டும், உயர்கல்வியில் சேருவதில் மாணவர்களுக்கு உள்ள குறைகளைக் களைவதற்காகவும் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கு.ரவிகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், முதன்மைக் கல்வி அலுவலர் இரா.புண்ணியகோட்டி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விஜயகுமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கண்ணன், உயர்கல்விச் சேர்க்கைக்கான கல்லூரிப் பொறுப்பாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

2 hrs ago
user_Flower
Flower
Fruit & Vegetable Wholesaler திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
2 hrs ago
bd18a4e6-bf7f-49c4-aaa0-8db69dabd34b

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் இன்று (18.06.2026) 'மாணவர் குறைத்தீர்வு நாள் கூட்டம்' நடைபெற்றது. 12ஆம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர்களையும் 100% உயர்கல்வியில் சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டும், உயர்கல்வியில் சேருவதில் மாணவர்களுக்கு உள்ள குறைகளைக் களைவதற்காகவும் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கு.ரவிகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், முதன்மைக் கல்வி அலுவலர் இரா.புண்ணியகோட்டி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விஜயகுமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கண்ணன், உயர்கல்விச் சேர்க்கைக்கான கல்லூரிப் பொறுப்பாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள அரச மர பிள்ளையார் கோயிலில் இன்று ஜூன் 18 காலை ஆனி மாதம் 4 ஆம் தேதி சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையாருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்தப் பூஜையில் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜைக்குப் பின்னர் பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.
    1
    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள அரச மர பிள்ளையார் கோயிலில் இன்று ஜூன் 18 காலை ஆனி மாதம் 4 ஆம் தேதி சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையாருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்தப் பூஜையில் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜைக்குப் பின்னர் பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.
    user_Yuvaraj Yuvaraj
    Yuvaraj Yuvaraj
    Photographer ஆம்பூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    11 hrs ago
  • சேலம் மாநகரில் அமைந்துள்ள ஒரு அரசுப்பள்ளியில் மாணவிகளுக்கு காவல்துறையின் 'சிங்கப் பெண்' சிறப்பு அதிரடிப்படையின் செயல்பாடுகள் குறித்து இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அவசர காலங்களில் காவல்துறையின் உதவி எண்கள் குறித்தும், தற்காப்புக் கலைகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், அவசரகால உதவிகளுக்கான 100 (காவல்துறை), 112 (அவசர உதவி) மற்றும் 1098 (குழந்தைகள் உதவி மையம்) ஆகிய தொலைபேசி எண்களின் பயன்பாடுகள் குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. ஏராளமான மாணவிகளும், பெண் காவல்துறை அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
    1
    சேலம் மாநகரில் அமைந்துள்ள ஒரு அரசுப்பள்ளியில் மாணவிகளுக்கு காவல்துறையின் 'சிங்கப் பெண்' சிறப்பு அதிரடிப்படையின் செயல்பாடுகள் குறித்து இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அவசர காலங்களில் காவல்துறையின் உதவி எண்கள் குறித்தும், தற்காப்புக் கலைகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், அவசரகால உதவிகளுக்கான 100 (காவல்துறை), 112 (அவசர உதவி) மற்றும் 1098 (குழந்தைகள் உதவி மையம்) ஆகிய தொலைபேசி எண்களின் பயன்பாடுகள் குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. ஏராளமான மாணவிகளும், பெண் காவல்துறை அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
    user_Salem_Updates
    Salem_Updates
    News Anchor கடயம்பட்டி, சேலம், தமிழ்நாடு•
    23 hrs ago
  • Post by Eresha Nayaka
    1
    Post by Eresha Nayaka
    user_Eresha Nayaka
    Eresha Nayaka
    அண்டிமடம், அரியலூர், தமிழ்நாடு•
    14 hrs ago
  • ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (RTO) லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இன்று திடீர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பெருந்துறை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் இடைத்தரகர்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுகளுக்கு லஞ்சம் பெறப்படுவதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்திருந்தது. இந்த தகவலின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சாந்தி தலைமையிலான ஏழுக்கும் மேற்பட்ட போலீசார் இன்று மதியம் பெருந்துறை அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். போலீசாரின் இந்த திடீர் வருகையால் அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற முதற்கட்ட சோதனையில், கணக்கில் வராத பெருமளவிலான ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. லஞ்ச ஒழிப்புத் துறையினர் அலுவலகத்தின் கதவுகளைப் பூட்டி, ஊழியர்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்காமல் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சோதனையின் முழுமையான முடிவில் மட்டுமே, கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத பணம் எவ்வளவு மற்றும் யார் யார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற முழு விவரமும் தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    1
    ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (RTO) லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இன்று திடீர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பெருந்துறை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் இடைத்தரகர்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுகளுக்கு லஞ்சம் பெறப்படுவதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்திருந்தது.

இந்த தகவலின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சாந்தி தலைமையிலான ஏழுக்கும் மேற்பட்ட போலீசார் இன்று மதியம் பெருந்துறை அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். போலீசாரின் இந்த திடீர் வருகையால் அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற முதற்கட்ட சோதனையில், கணக்கில் வராத பெருமளவிலான ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. லஞ்ச ஒழிப்புத் துறையினர் அலுவலகத்தின் கதவுகளைப் பூட்டி, ஊழியர்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்காமல் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சோதனையின் முழுமையான முடிவில் மட்டுமே, கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத பணம் எவ்வளவு மற்றும் யார் யார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற முழு விவரமும் தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    user_Dinesh
    Dinesh
    கோபிசெட்டிபாளையம், ஈரோடு, தமிழ்நாடு•
    1 hr ago
  • கரூர் மாவட்டம் குளித்தலை முத்து பூபாலசமுத்திரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நீலமேகப் பெருமாள் கோவிலின் உப சன்னதியான அருள்மிகு ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
    1
    கரூர் மாவட்டம் குளித்தலை முத்து பூபாலசமுத்திரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நீலமேகப் பெருமாள் கோவிலின் உப சன்னதியான அருள்மிகு ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
    user_கருணாநிதி
    கருணாநிதி
    Kulithalai, Karur•
    8 hrs ago
  • சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்தத் தொடர் மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
    1
    சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்தத் தொடர் மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
    user_SKYN MEDIA LIVE...
    SKYN MEDIA LIVE...
    Local News Reporter கிண்டி, சென்னை, தமிழ்நாடு•
    5 hrs ago
  • திருப்பத்தூர் மாவட்டம் எலவம்பட்டி பகுதியில் இயங்கி வரும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தொடர்ந்து லஞ்சம் பெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ராஜி தலைமையிலான குழுவினர், ஆய்வாளர் கௌரி மற்றும் உதவி ஆய்வாளர் கணேசன் ஆகியோர் அடங்கிய குழுவினர், இன்று நண்பகல் 12 மணி முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அலுவலகத்தின் கதவுகளை உள்ளே பூட்டிக்கொண்டு இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்த திடீர் சோதனையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    1
    திருப்பத்தூர் மாவட்டம் எலவம்பட்டி பகுதியில் இயங்கி வரும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தொடர்ந்து லஞ்சம் பெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ராஜி தலைமையிலான குழுவினர், ஆய்வாளர் கௌரி மற்றும் உதவி ஆய்வாளர் கணேசன் ஆகியோர் அடங்கிய குழுவினர், இன்று நண்பகல் 12 மணி முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அலுவலகத்தின் கதவுகளை உள்ளே பூட்டிக்கொண்டு இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்த திடீர் சோதனையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    user_ARVINDAN TV VNG
    ARVINDAN TV VNG
    Reporter Ambur, Tirupathur•
    7 hrs ago
  • நேற்று இரவு, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட திம்பம் மலைப்பாதையில் ஒரு தடுப்புச்சுவர் மீது சிறுத்தை ஒன்று படுத்திருந்தது. இதைக் கண்ட வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் படமெடுத்தார். நீண்ட நேரம் அங்கேயே இருந்த சிறுத்தை, பின்னர் வனப்பகுதிக்குள் திரும்பிச் சென்றது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட வனச்சரகங்களில் சிறுத்தை, புலி, மான், கரடி, யானை போன்ற பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், வனவிலங்குகள் சாலைகளில் அதிக அளவில் நடமாடுகின்றன. பகல் நேரங்களிலும் யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்லுமாறு வனத்துறையினர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், இரவு நேரங்களில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் கூடுதல் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர்.
    1
    நேற்று இரவு, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட திம்பம் மலைப்பாதையில் ஒரு தடுப்புச்சுவர் மீது சிறுத்தை ஒன்று படுத்திருந்தது. இதைக் கண்ட வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் படமெடுத்தார். நீண்ட நேரம் அங்கேயே இருந்த சிறுத்தை, பின்னர் வனப்பகுதிக்குள் திரும்பிச் சென்றது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட வனச்சரகங்களில் சிறுத்தை, புலி, மான், கரடி, யானை போன்ற பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், வனவிலங்குகள் சாலைகளில் அதிக அளவில் நடமாடுகின்றன. பகல் நேரங்களிலும் யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்லுமாறு வனத்துறையினர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், இரவு நேரங்களில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் கூடுதல் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர்.
    user_Dinesh
    Dinesh
    கோபிசெட்டிபாளையம், ஈரோடு, தமிழ்நாடு•
    2 hrs ago
  • குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை எழும்பூரில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் முக்கிய அரசியல் நிகழ்வாகக் கருதப்படுகிறது.
    1
    குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை எழும்பூரில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் முக்கிய அரசியல் நிகழ்வாகக் கருதப்படுகிறது.
    user_SKYN MEDIA LIVE...
    SKYN MEDIA LIVE...
    Local News Reporter கிண்டி, சென்னை, தமிழ்நாடு•
    14 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.