Shuru
Apke Nagar Ki App…
பிடித்த பாடலை கணவர் வைக்காதாள் மனைவி தூக்கு போட்டு தற்கொலை சேலம் ஆத்தூர் பழனியாபுரி ஊராட்சியை சேர்ந்த புவனேஸ்வரி 26 இவர் நேற்று வீட்டில் கணவருடன் டிவி பார்த்து கொண்டிருக்கும் பொழுது புவனேஸ்வரிக்கு பிடித்த பாடல் ஓடிக்கொண்டிருந்தது உடனடியாக கணவர் ரிமோட் எடுத்து சேனலை மாற்றி உள்ளார் இது கோபம் அடைந்த புவனேஸ்வரி வீட்டில் உள்ளே உள்ள அறையில் சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து ஆத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
Selva
பிடித்த பாடலை கணவர் வைக்காதாள் மனைவி தூக்கு போட்டு தற்கொலை சேலம் ஆத்தூர் பழனியாபுரி ஊராட்சியை சேர்ந்த புவனேஸ்வரி 26 இவர் நேற்று வீட்டில் கணவருடன் டிவி பார்த்து கொண்டிருக்கும் பொழுது புவனேஸ்வரிக்கு பிடித்த பாடல் ஓடிக்கொண்டிருந்தது உடனடியாக கணவர் ரிமோட் எடுத்து சேனலை மாற்றி உள்ளார் இது கோபம் அடைந்த புவனேஸ்வரி வீட்டில் உள்ளே உள்ள அறையில் சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து ஆத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
More news from தமிழ்நாடு and nearby areas
- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 300 கன அடியாக சரிவு கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு வரும் நீர்வரத்து குறைந்து வினாடிக்கு 300 கன அடியாக நீடித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நீர்வரத்து வினாடிக்கு 1000 கன அடியாக நீடித்து வந்த நிலையில், நேற்று இந்த நீர்வரத்து குறைந்து வினாடிக்கு 500 கன அடியாக நீடித்து வந்தன. இன்று மேலும் குறைந்து வினாடிக்கு 300 கன அடியாக சரிந்து நீடித்து வருகிறது. தற்போது வரக்கூடிய இந்த உபரி நீரின் வேகம் குறைந்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள, சினி ஃபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் கொட்டக்கூடிய தண்ணீரின் வேகமும் குறைந்தது. மேலும் இந்த நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதும் கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவை பொறுத்து உள்ளது1
- பஞ்சாயத்தில் முறைகேடு உள்ளதாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தால் என்னை கேட்காதீர்கள் பஞ்சாயத்தில் கேளுங்கள் என அலட்சியமாக அதிகாரி பொதுமக்களிடம் பதில் அளித்ததால் வாக்குவாதம். திரும்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் காக்கங்கரை கிராம பஞ்சாயத்தின் முறைகேடு குறித்து பதில் அறிக்கையில் பழைய பொருட்களின் இருப்பு அறையில் பாதுகாப்பாக உள்ளது என்று பதிவேடு சரியாக பராமரிக்கப்படுகிறது என்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேடு இல்லை என்றும் கழிவு நீர் கால்வாய் சரியான அளவிற்கு போடப்படுகிறது என்றும் சுந்தரம் பள்ளி தூய்மை பாரத் இந்தியா திட்டத்தின் கீழ் விற்பனை செய்ததில் முறைகேடு இல்லை என்றும் பதில் அளிக்கப்பட்டுள்ளது. மிகுந்த வேதனையும் வருத்தத்தையும் அளிக்கின்றது மாவட்ட ஆட்சியர் தனிக்கவனம் செலுத்தி நேரடியாக கள ஆய்வு செய்ய வேண்டும் என சுரேஷ்குமார் அளித்த மானுவில் தெரிவித்து இருந்தார்.1
- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா வையச்சேரி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன், ஸ்ரீமாயாண்டி அய்யனார், ஸ்ரீகருப்பண்ணசுவாமி, ஸ்ரீவீரனார்சுவாமி, ஸ்ரீமுனீஸ்வரசுவாமி, ஸ்ரீசப்தமாதா ஆகிய ஆலயங்களின் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் நடைபெற்று, முடிவுற்ற நிலையில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து கணபதி ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பூர்வாங்க பூஜைகள் உள்பட நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.. தொடர்ந்து மேள, தாளங்களுடன் வேத மந்திரங்கள் முழங்க, கடம்புறப்பட்டு கோயில்களின் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்று, மூலவர்களுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கிராமவாசிகள் நாட்டாண்மை மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை வையச்சேரி கிராமவாசிகள், நாட்டாண்மைகள்,உபயதாரர்ள்குலதெய்வ வழிபாட்டாளர்கள் விழாகுழுவினர்கள் செய்திருந்தனர்.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி மணப்பாறை தெற்கு ஒன்றியத்தில், அதிமுக சார்பில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா மற்றும் மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் அன்னதானமும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரவு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் பொது கூட்டம் நடைபெற்றது.1
- கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்ட அரங்கில் தேன்கனிகோட்டைவட்டம், குந்து மாரணப்பள்ளி கிராமத்தில் பட்டியலிமைக்கள் பல வருடங்களாக சொந்தமாக வீட்டுமனை வீடு இல்லாமல் இருக்கின்றர்க் வீட்டுமனை வழங்க கோரி அரசுக்குமனு அளித்தும் இதுவரை அரசு நேரில் விசாரிக்க கூட வர வில்லை அதனால் இன்று மாவட்ட ஆட்சியரிடம் வீட்டு மனையும்,கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டி தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.1
- வேடசந்தூர் பூதிபுரம் ஊராட்சியில் தைலா கவுண்டனூர் சீதப்பட்டி பூதிபுரம் குரும்பபட்டி மகாலட்சுமிபுரம் இந்தப் பகுதிகளில் நிறைய தெரு விளக்குகள் பழுதடைந்து இரவு நேரங்களில் பெண்கள் குழந்தைகள் நடமாட அச்சமடைந்து வந்தனர் இதை மாற்றிக் கொடுக்க ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர் அதன் அடிப்படையில் இன்று அனைத்து தெருவிளக்குகளையும் மாற்றி கொடுத்தனர் இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்1
- தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை மனுக்களாக அளித்தனர். வீட்டு வசதி, குடிநீர், நிலம் தொடர்பான பிரச்சினைகள், முதியோர் உதவித்தொகை, சமூக பாதுகாப்பு திட்டங்கள், சாலை வசதி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனுக்கள் வழங்கினர். பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்த மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அவற்றை உடனடியாக பரிசீலித்து விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும் பொதுமக்களின் கோரிக்கைகள் விரைவாக தீர்க்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நல வாரிய அலுவலர் வே பண்டரிநாதன் பழங்குடியின நல வாரிய அலுவலர் அசோக் குமார் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர்.1
- தஞ்சாவூர் மாவட்டம். பாபநாசம் தாலுக்கா, அய்யம்பேட்டை இந்தியன் சிட்டி ஸ்கூல் வளாகத்தில் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் மற்றும் அய்யம்பேட்டை நகர அரிமா சங்கம் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக சங்க மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் கருணாநிதி அனைவரையும் வரவேற்று பேசினார் சங்க மாநில தலைவர் முகமதுஇப்ராஹிம் சமூக நல்லிணக்க உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில்,உலக அமைதி மற்றும் ஒற்றுமைக்காக சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டது. பாபநாசம் வட்டாச்சியர் சந்தனவேல் மற்றும் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தினர்கள், அய்யம்பேட்டை அரிமா சங்கத்தினர்கள், விவசாயிகள், ஜமாஅத்தார்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியின் நிர்வாகிகள், இமாம்கள் உட்பட பலர் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் நாகல்புதூரில் அமைந்துள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியின் (குட்டவாத்தியார் பள்ளி) 100வது ஆண்டுவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள். மேலும் தற்போது பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.1