Shuru
Apke Nagar Ki App…
பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் முதல் போக நெல் அறுவடை பணி தீவிரம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம், சில்வார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5,000-ம் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் முதல் போக நெல் நடவு செய்யப்பட்டது. தற்பொழுது நெற்பயிர்கள் நன்கு விளைச்சல் அடைந்த நிலையில் அப்பகுதிகளில் நெல் அறுவடைப்பணி தீவிரமாக துவங்கி உள்ளது. தற்பொழுது ஏக்கருக்கு 35 முதல் 38 வரையிலான நெல் மூட்டைகள் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Vivek Selvaa
பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் முதல் போக நெல் அறுவடை பணி தீவிரம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம், சில்வார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5,000-ம் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் முதல் போக நெல் நடவு செய்யப்பட்டது. தற்பொழுது நெற்பயிர்கள் நன்கு விளைச்சல் அடைந்த நிலையில் அப்பகுதிகளில் நெல் அறுவடைப்பணி தீவிரமாக துவங்கி உள்ளது. தற்பொழுது ஏக்கருக்கு 35 முதல் 38 வரையிலான நெல் மூட்டைகள் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- தேனி மாவட்டம் தேனி அருகே அன்னஞ்சி விளக்கு பகுதியில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இரு சமுதாய கிராம மக்கள் ஒன்றிணைந்து கோயில் திருவிழாக்கள் மற்றும் பூஜைகளை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கோயிலை நிர்வாகிப்பது குறித்து இருதரப்பினரிடையே பிரச்சனை ஏற்பட்டு பெரியகுளம் கோட்டாட்சியர் விசாரணை நடைபெற்று வந்தது . தற்போது கோயில் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக ஒரு தரப்பினர் நீதிமன்றம் சென்று உத்தரவைப் பெற்று வந்து ஜேசிபி வைத்து கோயிலை இடிக்கும் பணியை மேற்கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு தரப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோயில் வளாகத்தில் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது . இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பராமரிப்பு பணியையும் மேற்கொள்ளாமல் அனைவரையும் அங்கிருந்து கலைந்து செல்ல அறிவுறுத்தினர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.1
- திண்டுக்கல் மாவட்டம் விருப்பாச்சியில் இன்று மத்திய அரசு சிலிண்டர் தட்டுப்பாட்டை தடுக்காததை கண்டித்தும், சிலிண்டர் விலைவாசியை உயர்வதை கண்டித்தும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்1
- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில், உலகம் முழுவதிலும் உள்ள விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்று கூடி தங்களது புதிய கண்டுபிடிப்புகளை பகிர்ந்து கொள்ளும் நவீன தொழில்நுட்ப மாநாடு நடைபெற்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புவி வெப்பமடைவதை தடுத்தல், தூய்மையான எரிசக்தி ஆதாரங்களை நானோ தொழில் நுட்பத்தின் மூலம் மேம்படுத்துவது போன்ற பல்வேறு பயன்பாடுகள் குறித்து இந்த சர்வதேச மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.1
- திருச்சியில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், "இந்தியாவில் கேஸ் தட்டுப்பாடு என்பது இல்லை. ஊடகங்கள் கேஸ் தட்டுப்பாடு என்கிற செய்தியை பரப்புகிறது. எரிபொருள் இருப்பு குறித்து விரிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படும். தவெகவை NDA கூட்டணியில் இணைப்பது குறித்து, தமிழ்நாட்டில் NDA கூட்டணிக்கு தலைமை வகிக்கும் எடப்பாடி பழனிசாமி தான் முடிவெடுக்க வேண்டும்" என்றார். இந்த நிகழ்வில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.1
- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மரணம் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் அதிகாரிகள் இன்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வ சுரபி தலைமையில், எஸ்.பி. சிவபிரசாத், ஆர்.டி.ஓ ஜெபி கிரேசியா, தாசில்தார் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் காவல் நிலையத்தில் உள்ள பதிவுகளை பரிசோதித்தனர்1
- கடையநல்லூரில் தவெக சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது1
- பெரியகுளம் வடகரை பகுதியில் அமைந்துள்ள பகவதி அம்மன் திருக்கோவில் திருவிழா கடந்த ஒரு வார காலமாக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக ஏராளமான பக்தர்கள் அழகு குத்தி காவடி எடுத்து பெரியகுளம் நகர் வழியாக ஊர்வலமாக சென்று தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வழிபட்டனர்.1
- தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவர் திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளராக இருந்துள்ளார் இவர் கெங்குவார்பட்டி பகுதியில் தனியார் மதுபான கடை வைத்து நடத்தி வருகிறார் இந்த கடையில் மதன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஸ்டீபன் தனியார் மதுபான கடை நடத்தி வருகிறார் இவருக்கும் சுதாகர் என்பவர் அரசு மதுபான கடையில் பார் எடுத்து நடத்தி வருகிறார் இருவருக்கும் ஏற்கனவே இந்த பார் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து உள்ளது இதனால் மதன் என்பவர் சுதாகர் நடத்தி வரும் ஹோட்டலுக்கு உணவருந்த சென்றபோது அங்கு கெங்குவார்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் இருந்துள்ளார் இருவருக்கும் ஓர் ஆண்டுகளுக்கு முன்பு முன் விரோதம் இருந்து வந்ததாகவும் இதனால் இருவருக்கும் அங்கு வாக்குவாதம் நடைபெற்று உள்ளது அப்போது மதனை முருகன், விமல் ராஜ் சந்தோஷ் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து தாக்கி உள்ளனர் இந்த பிரச்சனைக்கு காரணம் சுதாகர் என்று நினைத்து ஸ்டீபன் தூண்டுதலில் படி தனுஷ் மற்றும் இருவர் சேர்ந்து ஹோட்டலில் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். இதனை தகவல் அறிந்த சுதாகர் அங்கு வாட்ச்மேன்னாக பணிபுரியும் ஞானசேகர் என்பவரை இருசக்கர வாகனத்தை கொடுத்து யார் பெற்றோர் குண்டு வீசியது என போய் பார்த்து வாய் என கூறியுள்ளார் அப்போது அவர் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது சீசன் அரவிந்த் சக்தி பிரகாஷ் ஆகிய நான்கு பேரும் வழிமறித்து ஞானசேகரன் தாக்கி அவர் வந்த இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து நான்கு பேரும் சுதாகர் ஓட்டலுக்கு வந்து சுதாகர் மற்றும் பிரபுவையும் தாக்கியுள்ளனர் இந்த இருதரப்பு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் பிரபு ஞானசேகர் மதன் ஆகிய மூன்று பேரும் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தேவதானப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஸ்டீபன் விமல் சந்தோஷ் தனுஷ் ஆகிய நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கெங்குவார்பட்டி பகுதியில் ஹோட்டலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே அச்சமும் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது1
- இன்றைய இளைஞர்களின் தலை முறை எவ்வாறு போய்க்கொண்டிருக்கிறது என்பதை நன்றாக பாருங்கள் சினிமா மோகம் அரசியல் இந்த வயதில் நமக்குத் தேவையா என்பதை எந்த இளைஞர்களும் கண்டு கொள்வதில்லை ஆனால் சினிமாவின் மீது பைத்தியமாக அழிவதால் நாம் எதிர்கால வாழ்க்கை பாதிப்பாகிறது. அனைத்து அரசியல்வாதிகளுமே தான் மீண்டும் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தான் பார்க்கிறார்கள். அதனால் இதில் எந்த ஒரு கட்சித் தலைவருக்கும் நீங்கள் ஆதரவு அளிப்பது உங்களுடைய தனிப்பட்ட விஷயம். ஆனால் கல்வி என்பது அனைவருக்கும் முக்கியம். அனைத்து அரசியல்வாதிகளுமே அரசியலில் சம்பாதித்து தங்களுடைய பணத்தையும் தங்களுடைய குடியுரிமையும் வெளிநாட்டில் வைத்திருக்கிறார்கள். நாளை நாட்டிற்கு வறுமை வரும்போது தனி ஜெட்டில் பறந்து குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சென்று செட்டில் ஆகி விடுவார்கள். ஒன்றுமே பிழைக்க வழி இல்லாத ஒரு நாட்டில் நாம் எவ்வாறு வாழ்வது. தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு கட்சியின் நம்புவது உங்கள் கையில் உள்ளது. இந்த செய்தி நிச்சயமாக ஒரு அரசியல் பதிவாக இருக்க நான் விரும்பவில்லை அனைத்து அரசியல் தலைவர்களும் தங்கள் குடும்பத்திற்காகவே வாக்குறுதிகளை கொடுக்கிறார்கள் அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி. ஆனால் கல்வி குடும்பம் இதுதான் நம்முடைய வாழ்க்கை என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள மட்டுமே இந்த தொகுப்பு ஒரு அரசியல் தலைவரை வாழ்த்தி பேச வேண்டும் என்பதற்காக இந்த செய்தி கிடையாது மற்றொருவருடைய பதிவை எடுத்து தான் இதில் போட்டு இருக்கிறேன். ஆனால் அவர் சொல்லக்கூடிய அரசியல் தலைவருக்கு ஓட்டு போடுங்கள் என்று நான் சொல்லவில்லை.1