logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கொடைக்கானலில் வனத்துறையை கண்டித்து இன்று உள்ளுர் டாக்ஸி வேண் உரிமையாளர்கள்.. இன்று மே 1 ம்தேதி கொடைக்கானலில் வனத்துறையை கண்டித்து உள்ளுர் டாக்ஸி வேண் உரிமையாளர்கள் டிரைவர்கள் தர்ணா மற்றும் மறியல் நடைபெற்றது காரணம் மேலே சுற்றுலா பயணிகள் பார்க்கும் சுமார் 12 இடங்களும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது சுமார் மூன்று மாதத்திற்கு முன்பு அந்தந்த இடங்களில் வனத்துறை சார்பில் பத்து ரூபாய் வாங்கப்பட்டது தற்போது வனத்துறை சார்பில் ஸ்கேனிங் முறையில் வாங்க படுவதாக கூறப்படுகிறது இது போக்குவரத்து நெரிசலை ஏற்படுவதாகவும் அனைத்து சுற்றுலா பயணிகள் ஸ்மார்ட் போன் வசதியுடன் ( ஜுபேஇருப்பதில்லை ) ஆகவே மூன்று மாதங்களாக வனத்துறை சார்பில் பேச்சு வார்த்தை நடத்தினோம் உடன்பாடு எட்டப்படவில்லை ஆகவே இன்று தர்ணா மற்றும் மறியல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது ஆகவே பெருமாள் மலை வரை சுமார் மூன்று மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது ஏற்கனவே தொடர் விடுமுறை காரணமாக போக்குவரத்து நெரிசல் வேறு சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்கள்

8 hrs ago
user_தங்க சுரேஷ்
தங்க சுரேஷ்
பத்திரிகையாளர் வாடிப்பட்டி, மதுரை, தமிழ்நாடு•
8 hrs ago

கொடைக்கானலில் வனத்துறையை கண்டித்து இன்று உள்ளுர் டாக்ஸி வேண் உரிமையாளர்கள்.. இன்று மே 1 ம்தேதி கொடைக்கானலில் வனத்துறையை கண்டித்து உள்ளுர் டாக்ஸி வேண் உரிமையாளர்கள் டிரைவர்கள் தர்ணா மற்றும் மறியல் நடைபெற்றது காரணம் மேலே சுற்றுலா பயணிகள் பார்க்கும் சுமார் 12 இடங்களும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது சுமார் மூன்று மாதத்திற்கு முன்பு அந்தந்த இடங்களில் வனத்துறை சார்பில் பத்து ரூபாய் வாங்கப்பட்டது தற்போது வனத்துறை சார்பில் ஸ்கேனிங் முறையில் வாங்க படுவதாக கூறப்படுகிறது இது போக்குவரத்து நெரிசலை ஏற்படுவதாகவும் அனைத்து சுற்றுலா பயணிகள் ஸ்மார்ட் போன் வசதியுடன் ( ஜுபேஇருப்பதில்லை ) ஆகவே மூன்று மாதங்களாக வனத்துறை சார்பில் பேச்சு வார்த்தை நடத்தினோம் உடன்பாடு எட்டப்படவில்லை ஆகவே இன்று தர்ணா மற்றும் மறியல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது ஆகவே பெருமாள் மலை வரை சுமார் மூன்று மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது ஏற்கனவே தொடர் விடுமுறை காரணமாக போக்குவரத்து நெரிசல் வேறு சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்கள்

More news from தமிழ்நாடு and nearby areas
  • திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நுழைவுக் கட்டண சுங்கச் சாவடியை மாற்றக் கோரி வாடகை வாகன ஓட்டுநர்கள் போராட்டம் 5 மணி நேரத்திற்கும் மேல் நீடிக்கும் நிலையில் முக்கிய சாலைகள் முடக்கம் தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானல் வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் அவதி.
    1
    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நுழைவுக் கட்டண சுங்கச் சாவடியை மாற்றக் கோரி வாடகை வாகன ஓட்டுநர்கள் போராட்டம் 
5 மணி நேரத்திற்கும் மேல் நீடிக்கும் நிலையில் முக்கிய சாலைகள் முடக்கம்
தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானல் வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் அவதி.
    user_Natarajan Pitchaimani
    Natarajan Pitchaimani
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    11 hrs ago
  • உப்புக்கோட்டை மற்றும் உப்பார்பட்டி கிராமத்தில் சேர்ந்த கள்ளழகர் முல்லைப் பெரியாற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து முல்லைப் பெரியாற்றின் கரையில் எதிர்சேவை நடைபெற்றது இதில் 10000 - க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள உப்புக்கோட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் சித்திரை திருவிழா கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி முன்னிட்டு இரவு சாமி வீதி உலா நடைபெறும் பகுதிகளில் சொக்கப்பர் கொளுத்தி கொண்டு செல்லப்பட்டனர் அதன் பின்பு கள்ளழகர் குதிரை வாகனத்தில் உப்புக்கோட்டை முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா நடைபெற்றனர். பின்னர் கள்ளழகர் சுவாமி மூலஸ்தான கோவிலுக்கு கொண்டு சென்று அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து இன்று காலை கள்ளழகர் குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி குதிரை வாகனத்தில் முல்லைப் பெரியாற்றில் வைபவம் நிகழ்ச்சி நடைபெற்றது அதேபோல் உப்பார்பட்டி சேர்ந்த கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி முல்லைப் பெரியாற்றில் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது . அதனைத் தொடர்ந்து உப்புக்கோட்டை முல்லை பெரியாற்றம் கரையில் இரு கிராமத்தைச் சேர்ந்த கள்ளழகர் குதிரை வாகனத்தில் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது இதில் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கோவிந்தோ கோவிந்தோ என கோசமிட்டு எதிர்சேவை நிகழ்ச்சியை கண்டு களித்தனர் அதன்பின்பு ஆற்றங்கரையில் வைக்கப்பட்ட பந்தலில் இரண்டு கிராமத்தைச் சேர்ந்த கள்ளழகர் சுவாமியை வைக்கப்பட்டுள்ளது. உப்புக்கோட்டை மற்றும் உப்பார்பட்டி கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து சுமார் 10,000 மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அதனைத் தொடர்ந்து அனைத்து பொது மக்களுக்கும் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது
    1
    உப்புக்கோட்டை மற்றும் உப்பார்பட்டி கிராமத்தில் சேர்ந்த கள்ளழகர் முல்லைப் பெரியாற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நடைபெற்றது.
தொடர்ந்து முல்லைப் பெரியாற்றின் கரையில் எதிர்சேவை நடைபெற்றது இதில் 10000 - க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்
தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள உப்புக்கோட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் சித்திரை திருவிழா கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி முன்னிட்டு இரவு சாமி வீதி உலா நடைபெறும் பகுதிகளில் சொக்கப்பர் கொளுத்தி கொண்டு செல்லப்பட்டனர் அதன் பின்பு  கள்ளழகர் குதிரை வாகனத்தில் உப்புக்கோட்டை முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா நடைபெற்றனர். பின்னர் கள்ளழகர் சுவாமி மூலஸ்தான கோவிலுக்கு கொண்டு சென்று அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து இன்று காலை கள்ளழகர் குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி குதிரை வாகனத்தில் முல்லைப் பெரியாற்றில் வைபவம் நிகழ்ச்சி நடைபெற்றது அதேபோல் உப்பார்பட்டி சேர்ந்த கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி முல்லைப் பெரியாற்றில் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது .
அதனைத் தொடர்ந்து உப்புக்கோட்டை முல்லை பெரியாற்றம் கரையில் இரு கிராமத்தைச் சேர்ந்த கள்ளழகர் குதிரை வாகனத்தில் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது 
இதில் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கோவிந்தோ கோவிந்தோ என கோசமிட்டு எதிர்சேவை நிகழ்ச்சியை கண்டு களித்தனர் அதன்பின்பு ஆற்றங்கரையில் வைக்கப்பட்ட பந்தலில் இரண்டு கிராமத்தைச் சேர்ந்த கள்ளழகர் சுவாமியை வைக்கப்பட்டுள்ளது.
உப்புக்கோட்டை மற்றும் உப்பார்பட்டி கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து சுமார் 10,000 மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
அதனைத் தொடர்ந்து அனைத்து பொது மக்களுக்கும் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    19 hrs ago
  • Post by RAJA news
    1
    Post by RAJA news
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    12 hrs ago
  • சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரைத் திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கிய இந்த திருவிழாவில் திருக்கல்யாண உற்சவம் மற்றும் தேரோட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக, மே 1 ஆம் தேதி இரவு சுமார் 8 மணியளவில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. முன்னதாக, அலங்கார மண்டபத்தில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர், ஸ்ரீ மீனாட்சி, சுந்தரேஸ்வரர் மற்றும் அம்பாள் மூவரும் வீதி உலா வந்து தெப்பக்குளத்தை அடைந்தனர். அங்கு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மங்கல வாத்தியங்களின் ஒலியுடன் தெப்பம், தெப்பக்குளத்தின் ஆறு படித்துறைகளையும் மூன்று முறை சுற்றி வலம் வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தெப்பக் கரையில் விளக்கேற்றி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற பிரார்த்தனை செய்தனர். விழாவின்போது தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், நகர காவல்துறையினர் ஆகியோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
    1
    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரைத் திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது.  
கடந்த வாரம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கிய இந்த திருவிழாவில் திருக்கல்யாண உற்சவம் மற்றும் தேரோட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  
இதன் தொடர்ச்சியாக, மே 1 ஆம் தேதி இரவு சுமார் 8 மணியளவில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. முன்னதாக, அலங்கார மண்டபத்தில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.  
பின்னர், ஸ்ரீ மீனாட்சி, சுந்தரேஸ்வரர் மற்றும் அம்பாள் மூவரும் வீதி உலா வந்து தெப்பக்குளத்தை அடைந்தனர். அங்கு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.  
மங்கல வாத்தியங்களின் ஒலியுடன் தெப்பம், தெப்பக்குளத்தின் ஆறு படித்துறைகளையும் மூன்று முறை சுற்றி வலம் வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தெப்பக் கரையில் விளக்கேற்றி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற பிரார்த்தனை செய்தனர்.  
விழாவின்போது தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், நகர காவல்துறையினர் ஆகியோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    2 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியம் தென்னம்பட்டி மற்றும் பிலாத்து ஊராட்சி ஆண்டிபட்டியில் இன்று மூன்று நாள் பெரிய கும்பிடு விழா சித்திரை திருவிழா நடைபெறுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் முதல் நாளான இன்று பக்தர்கள் 15 நாள் விரதம் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து விநாயகருக்கு அபிஷேகம் செய்தனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியம் தென்னம்பட்டி மற்றும் பிலாத்து ஊராட்சி ஆண்டிபட்டியில் இன்று மூன்று நாள் பெரிய கும்பிடு விழா சித்திரை திருவிழா நடைபெறுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் முதல் நாளான இன்று பக்தர்கள் 15 நாள் விரதம் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து விநாயகருக்கு அபிஷேகம் செய்தனர்.
    user_Farmers joint Liability Group
    Farmers joint Liability Group
    Farmer குஜிலியம்பாறை, திண்டுக்கல், தமிழ்நாடு•
    7 hrs ago
  • Post by G.thangarasu
    1
    Post by G.thangarasu
    user_G.thangarasu
    G.thangarasu
    Bus company Palani, Dindigul•
    11 hrs ago
  • மதுரை சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்வான வைகை ஆற்றில் அழகர் இறங்கும் வைபவத்தில் இன்று இலட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர். பக்தர்கள் தங்கள் முடி காணிக்கையை கொடுத்து நேர்த்தி கடனை செலுத்துவதற்காக ஓபுளா படித்துறை பகுதியில் குடும்பத்துடன் வந்து குழந்தைகளுக்கு முடி காணிக்கையை கொடுத்து அழகரை தரிசித்து செல்கின்றனர். இதனால் அப் பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
    1
    மதுரை சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்வான வைகை ஆற்றில் அழகர் இறங்கும் வைபவத்தில் இன்று இலட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர். பக்தர்கள் தங்கள்  முடி காணிக்கையை கொடுத்து நேர்த்தி கடனை செலுத்துவதற்காக  ஓபுளா படித்துறை பகுதியில் குடும்பத்துடன் வந்து குழந்தைகளுக்கு  முடி காணிக்கையை கொடுத்து அழகரை தரிசித்து செல்கின்றனர். இதனால் அப் பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    17 hrs ago
  • சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள கோயிலூர் ரோட்டில் ஆட்டோமொபைல் உரிமையாளர்கள் & பணியாளர் சங்கம் மே தின கொண்டாட்டம் இதில் 'சங்க உறப்பினர்கள் 200 க்கு மேற்பட்டவர்கள் பங்கேற்றனர் மற்றும், காரைக்குடி தொழில்வணிகக்கழகம் தலைவர் கண்ணப்பன் அவர் கழகக் கொடி ஏற்றி வைத்து அவர் பேசிகையில் நீங்கள் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் மேலும் தலைவர் செயலாளர் என்று வேறுபாடு இல்லாமல் நீங்கள் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார் எந்த நேரத்தில் எந்த உதவி செய்ய தயாராக இருக்கிறேன் மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு எனக்கு ரொம்ப பெருமையா இருக்குது என்று கூறினார் மேலும் வாழ்த்துரை திராவிட மணி அவர் பேசிகையில் மூன்றாம் ஆண்டு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன நீங்கள் ஒவ்வொருமே தொழில் வளம் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்று கூறினார் அதனைத் தொடர்ந்து முக்கிய நிர்வாகிகளுக்கு சால்வை அறிவித்தார்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் சான்றுகள் வழங்கினார்கள் மேலும் நிகழ்ச்சி முடிவில் ஆத்தங்குடி பெருமாள் கைவண்ணத்தில் அனைவருக்கும் மதிய விருந்து அளிக்கப்பட்டது தலைவர் சீனிவாசன் துணைச் செயலாளர் நாகராஜன் செயலாளர் வெங்கட்நாராயணன் பொருளாளர் கமலஹாசன் துணைத் தலைவர் ரமேஷ் நிர்வாக குழு உறுப்பினர் கருப்பையா கார்த்திக் ராஜா சந்திரசேகர் மற்றும் ஸ்பேர் பார்ட்ஸ் உரிமையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
    1
    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள கோயிலூர்  ரோட்டில் ஆட்டோமொபைல் உரிமையாளர்கள்  & பணியாளர் சங்கம் மே தின கொண்டாட்டம் இதில் 'சங்க உறப்பினர்கள் 200 க்கு மேற்பட்டவர்கள் பங்கேற்றனர் மற்றும், காரைக்குடி தொழில்வணிகக்கழகம் தலைவர் கண்ணப்பன் அவர்  கழகக் கொடி ஏற்றி வைத்து அவர் பேசிகையில் நீங்கள் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் மேலும் தலைவர் செயலாளர் என்று வேறுபாடு இல்லாமல் நீங்கள் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார் எந்த நேரத்தில் எந்த உதவி செய்ய தயாராக இருக்கிறேன்  மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு  எனக்கு ரொம்ப பெருமையா இருக்குது என்று கூறினார் மேலும் வாழ்த்துரை திராவிட மணி அவர் பேசிகையில் மூன்றாம் ஆண்டு மிகவும் சிறப்பாக செயல்பட்டு  வருகின்றன நீங்கள் ஒவ்வொருமே தொழில் வளம் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்று கூறினார் அதனைத் தொடர்ந்து முக்கிய நிர்வாகிகளுக்கு சால்வை அறிவித்தார்கள்  மற்றும் சங்க உறுப்பினர்கள் சான்றுகள் வழங்கினார்கள் மேலும் நிகழ்ச்சி முடிவில் ஆத்தங்குடி பெருமாள் 
கைவண்ணத்தில் அனைவருக்கும் மதிய விருந்து அளிக்கப்பட்டது
தலைவர் சீனிவாசன் 
துணைச் செயலாளர் நாகராஜன் 
செயலாளர் வெங்கட்நாராயணன் 
பொருளாளர் கமலஹாசன் 
துணைத் தலைவர் ரமேஷ் 
நிர்வாக குழு உறுப்பினர் கருப்பையா 
கார்த்திக் ராஜா சந்திரசேகர் மற்றும் ஸ்பேர் பார்ட்ஸ் உரிமையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    6 hrs ago
  • Post by G.thangarasu
    1
    Post by G.thangarasu
    user_G.thangarasu
    G.thangarasu
    Bus company Palani, Dindigul•
    11 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.