Shuru
Apke Nagar Ki App…
விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகம் திறப்பு விழா பாலக்கோடு புறவழிச் சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற தொகுதி மாவட்ட தலைமை அலுவலகம் நேற்று திறப்பு விழா நடைபெற்றது மாவட்டத்தில் ராஜகோபால் தலைமையில் நடைபெற்றது விழாவில் ஒன்றிய செயலாளர் செல்வன் முன்னிலை வகித்தார் திமுக மகளிர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் மணிமேகலை விஜயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி அலுவலகத்தை திறந்து வைத்தார்
Raja
விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகம் திறப்பு விழா பாலக்கோடு புறவழிச் சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற தொகுதி மாவட்ட தலைமை அலுவலகம் நேற்று திறப்பு விழா நடைபெற்றது மாவட்டத்தில் ராஜகோபால் தலைமையில் நடைபெற்றது விழாவில் ஒன்றிய செயலாளர் செல்வன் முன்னிலை வகித்தார் திமுக மகளிர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் மணிமேகலை விஜயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி அலுவலகத்தை திறந்து வைத்தார்
More news from Tamil Nadu and nearby areas
- Post by Periyasamy1
- இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக கொடியேற்றப்பட்ட ஆட்டோ சங்க ஓட்டுநர்கள். தர்மபுரி மாவட்டம் அரூர் நகரப் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் பேருந்து நிலையம் முன்பு குடியரசு தினமான இன்று தேசிய கொடியை ஏற்றுவதற்கான நிகழ்வை நடத்தியுள்ளனர். அப்போது இந்திய வரைபடம் மற்றும் இந்திய தேசிய கொடி வர்ணத்தை கோலப்பொடி மூலம் வரைந்து இருந்தனர். இதனைத் தொடர்ந்து அரூர் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக உள்ள சக்திவேல் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர்கள் அருகே இருந்த பொதுமக்களுக்கு சாக்லேட் மற்றும் இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இந்திய நாடு குடியரசு நாடாக அறிவித்தும் 76 ஆண்டுகளுக்கு பிறகு 77வது ஆண்டாக தொடரக்கூடிய இந்த நிலையில் முதல் முறையாக ஆட்டோ ஓட்டுநர்கள் சார்பில் தேசிய கொடியை ஏற்றி வைத்து இந்த விழாவை சிறப்பித்ததற்கு நாங்கள் பெருமைப்படுவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.1
- கிருஷ்ணகிரி அருகே உள்ள மிட்டஅள்ளி ஊராட்சியில் நடைப்பெற்ற கிராம சபை கூட்டம்.1
- உதயந்திரம் பேரூராட்சியில் 77வது குடியரசு தின விழா கொடியை பேரூராட்சி மன்ற தலைவி பூசா ராணி ஏற்றி வைத்தார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயந்திரம் பேரூராட்சி பகுதியில் 77வது குடியரசு தின விழாவை முன்னிட்டு பேரூராட்சி மன்ற தலைவி பூசா ராணி மற்றும் இளநிலை உதவியாளர் குமார் ஆகியோர் மூவண்ண தேசிய கொடியை இயற்றினார். நகரமன்ற உறுப்பினர் செல்வராஜ் உட்பட அனைத்து கவுன்சிலர்கள் மற்றும் அனைத்து அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். ராணுவ வீரர்கள் பதத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. ஆசிரியர்கள் அரசு துறையை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் பலரும் இதில் பங்கேற்றனர். இறுதியாக அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.1
- இராசிபுரம் வட்டத்தில் உள்ள உடுப்பத்தான் புதூரில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்று ஜனவரி 26 திங்கள் கிழமை குடியரசு தின விழா தலைமை ஆசிரியர் கொடியேற்றத்துடன் கொண்டாடப்பட்டது நிகழ்வில் சேலம் மாவட்டம் சர்வதேச சட்ட உரிமை மற்றும் மனித நீதி சபை அமைப்பு சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேனா பென்சில் நோட் போன்ற உபகரண பொருட்கள் வழங்கப்பட்டு மற்றும் இனிப்புகள் வழங்கி விழாவை சிறப்பித்தார்கள் அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்4
- திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா கொளத்துப்பாளையம் பேரூராட்சி 1 வது வார்டு மதுக்கம்பாளையம் பிரிவில் அடிபடை வசதியின்றி தவிக்கும் மக்கள் நடவடிக்கை எடுக்குமா பேரூராட்சி நிர்வாகம்1
- Post by Periyasamy1
- தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம் புலிகரை ஊராட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அலுவலகத்தில் இ.ஆர்.சின்னசாமி மற்றும் முன்னாள் வேளாண் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சரும் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி அன்பழகன் தலைமையில் இன்று பல்வேறு மாற்று மாற்றுக் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் அதிமுக-வில் இணைந்தனர். அவர்களை அமைச்சர் பொன்னாடை போர்த்தி அதிமுக கட்சி கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் குறித்து விளக்கி அவர்களை வரவேற்றார். இந்நிகழ்வில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்1
- குடியரசு தினத்தை முன்னிட்டு காவல்துறை மற்றும் பத்திரிகையாளர் இடையே நட்பு ரீதியான கிரிக்கெட் போட்டி.1