வரம் அன்பழகி அம்மன் கோவிலில் 6 கிராம் தங்க தாலி திருட்டு : திருடிய தடையம் தெரியாமல் இருக்க சிசிடிவி கேமரா, ஹார்ட்டிஸ்க் எடுத்துச் சென்ற மர்மநபர்கள் நாகப்பட்டினம் மாவட்டம் காமேஸ்வரம் தண்ணீர்பந்தல் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ அன்பழகி அம்மன் கோயிலில் நடந்துள்ள திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நேற்றிரவு கோவிலின் அறங்காவலர் நடராஜன் கோவிலை பூட்டிவிட்டு சென்ற நிலையில், இன்று காலை வந்து பார்த்தபோது கோவிலின் கேட்டில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சாமியின் கழுத்தில் இருந்த சுமார் 2 கிராம் மதிப்புள்ள 3 தாலிகள், மொத்தம் 6 கிராம் தங்க நகைகள் திருடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.மேலும் திருடியது தெரியாமல் இருக்க கோவிலில் பொருத்தப்பட்டிருந்த 3 சிசிடிவி கேமராக்கள் மற்றும் அவற்றின் ஹார்ட்டிஸ்க் ஆகியவற்றையும் மர்மநபர்கள் கழற்றி எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் கோவிலின் உண்டியல் உடைக்கப்படாத நிலையில் இந்த திருட்டு சம்பவம் குறித்து அறங்காவலர் நடராஜன் கீழையூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வரம் அன்பழகி அம்மன் கோவிலில் 6 கிராம் தங்க தாலி திருட்டு : திருடிய தடையம் தெரியாமல் இருக்க சிசிடிவி கேமரா, ஹார்ட்டிஸ்க் எடுத்துச் சென்ற மர்மநபர்கள் நாகப்பட்டினம் மாவட்டம் காமேஸ்வரம் தண்ணீர்பந்தல் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ அன்பழகி அம்மன் கோயிலில் நடந்துள்ள திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நேற்றிரவு கோவிலின் அறங்காவலர் நடராஜன் கோவிலை பூட்டிவிட்டு சென்ற நிலையில், இன்று காலை வந்து பார்த்தபோது கோவிலின் கேட்டில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சாமியின் கழுத்தில் இருந்த சுமார் 2 கிராம் மதிப்புள்ள 3 தாலிகள், மொத்தம் 6 கிராம் தங்க நகைகள் திருடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.மேலும் திருடியது தெரியாமல் இருக்க கோவிலில் பொருத்தப்பட்டிருந்த 3 சிசிடிவி கேமராக்கள் மற்றும் அவற்றின் ஹார்ட்டிஸ்க் ஆகியவற்றையும் மர்மநபர்கள் கழற்றி எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் கோவிலின் உண்டியல் உடைக்கப்படாத நிலையில் இந்த திருட்டு சம்பவம் குறித்து அறங்காவலர் நடராஜன் கீழையூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- நாகப்பட்டினம் மாவட்டம் காமேஸ்வரம் தண்ணீர்பந்தல் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ அன்பழகி அம்மன் கோயிலில் நடந்துள்ள திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நேற்றிரவு கோவிலின் அறங்காவலர் நடராஜன் கோவிலை பூட்டிவிட்டு சென்ற நிலையில், இன்று காலை வந்து பார்த்தபோது கோவிலின் கேட்டில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சாமியின் கழுத்தில் இருந்த சுமார் 2 கிராம் மதிப்புள்ள 3 தாலிகள், மொத்தம் 6 கிராம் தங்க நகைகள் திருடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.மேலும் திருடியது தெரியாமல் இருக்க கோவிலில் பொருத்தப்பட்டிருந்த 3 சிசிடிவி கேமராக்கள் மற்றும் அவற்றின் ஹார்ட்டிஸ்க் ஆகியவற்றையும் மர்மநபர்கள் கழற்றி எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் கோவிலின் உண்டியல் உடைக்கப்படாத நிலையில் இந்த திருட்டு சம்பவம் குறித்து அறங்காவலர் நடராஜன் கீழையூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1
- நாகையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலை பண்பாட்டுத் துறை, தஞ்சாவூர் மண்டலக் கலை பண்பாட்டு மையத்தின் கீழ் இயங்கி வரும் மாவட்ட சவகர் சிறுவர் மன்றங்களில் உலக ஓவிய தின விழா 5 வயது முதல் 16 வயது வரை உள்ள சிறார்களுக்கு ஓவியப் பயிற்சிப்பட்டறை நடைப்பெற்றது.முன்னதாக மாணவர்களின் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கிராமிய நடனங்கள் ஆகிய கலைப்பிரிவுகளில் போட்டிகளும் நடைப்பெற்றது.மேலும் இப்பயிற்சியில் கலந்து கொண்ட சிறுவர்கள் வரைந்த ஓவியத்தினை காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சி அறையை மண்டல உதவி இயக்குநர் எம்.இராஜாராமன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.பின்பு உலக ஓவிய தின விழாவில் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கினர்.ஓவிய பயிற்சியில் பங்கேற்ற அனைத்து சிறுவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் நாகை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளிகளிலிருந்து 5 வயது முதல் 16 வயது வரையிலான மாணவ மாணவியர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.இதில் கல்லூரி முதல்வர் செ.அஜிதா, திட்ட அலுவலர் எம்.எட்வின் மற்றும் ஓவிய ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவ,மாணவிகள் பங்கேற்றனர்.1
- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா ஆலடிக்குமுளை ஊராட்சியில் உள்ள தாமரைக்குளம் வட கரையில் உள்ள சிமெண்ட் சாலை கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக சேதம் அடைந்து பள்ளி செல்லும் குழந்தைகள் பெரியவர்கள் பொதுமக்கள் 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர் இப்பொழுது சாலை பழுதடைந்து உள்ளதால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும் கீழே விழுந்து பாதிக்கப்படுகின்றனர் சாலையை சரி செய்து தரும்படிபலமுறை புகார் அளித்தும் பொது மக்களுக்கு பயனில்லை எனவே இந்த சிமெண்ட் சாலையை சரி செய்து தரும்படி விரைவில் தேர்தல் வர இருப்பதால் இப்பொழுதாவது சரி செய்து தருவார்களா என்று நம்பிக்கையுடன் இந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது4
- Post by பெரியசாமி2
- குளித்தலை நகராட்சி மணத்தட்டையில் ரூ.13.04 கோடி மதிப்பீட்டில் அம்ருத் 2.0 திட்டத்தின் குடிநீர் சேவையை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட மணத்தட்டை பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அம்ருத் 2.0 திட்டத்தின் 2022-.23 குளித்தலை நகராட்சியில் குடிநீர் மேம்பாட்டு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ.13.04 கோடி மதிப்பீட்டில் இரண்டு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மணத்தட்டை மேல்நிலை நீர் தேக்க தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்வு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து குளித்தலை நகர் மன்ற தலைவர் சகுந்தலா, நகராட்சி ஆணையர் சுதர்சன், நகராட்சி பொறியாளர் தியாகராஜன், அம்ருத் திட்ட மேலாளர் சத்யன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டதை காணொளியில் பார்வையிட்டனர். பிறகு பட்டாசு வெடித்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர். இந்நிகழ்வில் நகர் மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள், மணத்தட்டைப் பகுதி ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்1
- நாமகிரிப்பேட்டை ஒன்றியம், கார்கூடல்ப்பட்டி ஊராட்சியில் 128 பயானாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் எம்பி கலந்து கொண்டு பொதுமக்களிடம் அரசு திட்டங்கள் குறித்து உரையாடி இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார். இந்த நிகழ்வில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.1
- Post by M. JAYARAMAN1
- நாகப்பட்டினம் மாவட்டம் தேவூரில் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ குதம்பை நாயகி அம்பிகா சமேத ஸ்ரீ உத்தரேசமுடையார் ஆலயம் அமைந்துள்ளது. முற்றிலுமாக சிதிலமடைந்து கிடந்த இந்த ஆலயத்தில் சுவாமி சன்னதி, அர்த்த மண்டம், அம்பாள் சன்னதி, விமானம், விநாயகர், சன்டிகேஸ்வரர் சன்னதிகள் புதிதாக அமைக்கப்பெற்று 400 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைப்பெற்றது. கும்பாபிஷேக விழாவானது கடந்த 2 ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், வாஸ்து சாந்தி, கோ பூஜையுடன் யாகசாலை பூஜைகள் நடைப்பெற்று பூர்ணாஹூதி தீபாரதனைகள் நடைப்பெற்று வந்தது. இன்று நான்காம் கால யாக சாலை பூஜைகள் நிறைவுப்பெற்று பூர்ணாஹூதி தீபாரதனை நடைப்பெற்றது. தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைப்பெற்றது. சிவச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கலசத்தை சுமந்து வந்து வேத மந்திரங்கள் ஓதி ஆலயங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. தொடர்ந்து புனித நீர் தெளிக்கப்பட்டது. மூலவர் உத்தரேசமுடையார், குதம்பை நாயகி அம்மாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்று மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்1