Shuru
Apke Nagar Ki App…
கடையநல்லூரில் திமுக, மதிமுக மற்றும் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பை கண்டித்து, ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக சட்ட முன் வரைவு நகலை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை தலைமை தாங்கினார் கடையநல்லூர் மதிமுக வேட்பாளர் தி.மு.இராசேந்திரன் தொகுதி பார்வையாளர் குணசேகரன் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி, நகர் மன்ற தலைவன் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான், நகரச் செயலாளர் அப்பாஸ் ,பீரப்பா, மதிமுக நகர செயலாளர் முருகன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானனோர் கலந்து கொண்டனர்
King
கடையநல்லூரில் திமுக, மதிமுக மற்றும் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பை கண்டித்து, ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக சட்ட முன் வரைவு நகலை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை தலைமை தாங்கினார் கடையநல்லூர் மதிமுக வேட்பாளர் தி.மு.இராசேந்திரன் தொகுதி பார்வையாளர் குணசேகரன் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி, நகர் மன்ற தலைவன் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான், நகரச் செயலாளர் அப்பாஸ் ,பீரப்பா, மதிமுக நகர செயலாளர் முருகன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானனோர் கலந்து கொண்டனர்
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by தமிழ்நாடுஅரசியல்1
- மதுரை விமான நிலைய இயக்குநருக்கு இன்று (ஏப்.16) காலையில் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், 2 மணி நேரத்திற்குள் வெடிகுண்டுகள் வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டது.மேலும், முக்கிய பிரமுகர்கள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என்றும், வெடிப்பின் தாக்கம் 2 கிலோமீட்டர் வரை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதியில் போலீஸார் மற்றும் குண்டு தடுப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், மின்னஞ்சல் அனுப்பியவரை கண்டறிய தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1
- தளபதி விஜய் சகோதரிகளுக்கு தாய் மாமன் சீரு வழங்கப்படும் எனவாக்குறுதி எடுத்துரைத்து பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து போடி வேட்பாளர் விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் அணை பகுதியில் சேர்ந்த தமிழக வெற்றி கழகம் மாவட்ட பொறுப்பாளர் காசி பாண்டி ஏற்பாட்டில் பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதி வேட்பாளர் சபரி ஐங்கரன், தேனி வடக்கு மாவட்ட செயலாளர் போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான பிரகாஷ் ஆகியோருக்கு தேவதானப்பட்டிக்கு வருகை தந்த போது வான வேடிக்கை மேளதாளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து பெரியகுளம் வேட்பாளருக்கு போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளரும் வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பேரூராட்சி பகுதியை பொதுமக்களை சந்தித்து விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார் அப்போது தமிழக வெற்றிக்கழக தேர்தல் வாக்குறுதியான தளபதி விஜய் சகோதரர்களுக்கு தாய்மாமன் சீரு வழங்கப்படும், வருடத்துக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கு ஆறு சிலிண்டர், பெண்களுக்கு மாதம் 2500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதியை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர் மேலும் தற்போது வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவின்போது மக்களான நீங்கள் தளபதி விஜய் வேட்பாளர்களை ஆதரித்து விசில் சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுங்கள் என பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டனர் இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகம் மாவட்ட ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்1
- நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 543-ல் இருந்து 816 ஆக உயர்த்துவது மற்றும் தொகுதிமறுவரையறை செய்வது தொடர்பான மசோதாக்களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் ஏப்.16 இன்று இதனை எதிர்த்து தமிழகம் முழுவதும் கருப்புக் கொடி போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.அதனைத் தொடர்ந்து திண்டுக்கல்லில் திமுக அலுவலகம் முன்பு அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது.1
- மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காரைக்குடி சட்டமன்றத் தொகுதி இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் S. மாங்குடி தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் மேற்கொண்டார், தேவகோட்டை நகரம் இராம்நகர் MPTC பணிமனை , ஜோசப் பள்ளி சர்ச் , ரைஸ்மில் காமாட்சி அம்மன் கோவில், வள்ளியப்ப செட்டியார் ஊரணி அருகில் தாயமங்கலம் கோவில், அருணகிரிபட்டிணம் ,இரவுசேரி ஊரணிகரை -15வது வார்டு, பள்ளிவாசல் பின்புறம் 27வது வார்டு ஒத்தக்கடை, காந்தி ரோடு பள்ளிவாசல் ,பழைய சருகனி ரோடு அம்மச்சி ஊரணி, கிருஷ்ணன் கோவில், ,கைலாசநாதபுரம் அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார், இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் ஆர் வி நகர் 23 வது வாரில் உள்ள பத்ரகாளி அம்மன் திருக்கோவிலில் அம்மாவாசை முன்னிட்டு பிரத்தியங்கிரா யாகம் நடைபெற்றது1
- அச்சன்புதூரில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் பாராளுமன்ற தொகுதி மறு வரையறை செய்து தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது1
- Post by தமிழ்நாடுஅரசியல்1
- தேர்தல் காலகட்டத்தில் தொகுதி வரையறையை அவசரமாக கொண்டு வந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கும் நோக்கோடு செயல்படும் மத்திய அரசை கண்டித்து திமுக வினர் தங்களது இல்லங்களில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து தேனி மாவட்டம் பெரியகுளம் திமுக கட்சி அலுவலகத்தில் நகர செயலாளர் முகமது இலியாஸ் தலைமையில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஒன்றிணைந்து மத்திய அரசு பாராளுமன்ற வரையறையை திருத்த மசோதாவை கண்டித்து கையில் கருப்பு கொடி ஏந்தி மசோதா நகலை எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர் மேலும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தம் மசோதா சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் தொடர்ந்து தமிழகத்திற்கு வஞ்சிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர் இந்த நகல் எரிப்பு போராட்டத்தில் நாங்கள் ஒண்ணும் அதிமுக அடிமை இல்லை நாங்கள் திமுக எதற்கும் அஞ்ச மாட்டோம் மத்திய அரசு போக்கை கண்டித்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து கண்டன கோஷங்களை எழுப்பினர் இதில் சிறப்பா அழைப்பாளர் திமுக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிஷாந்த், திமுக இணைச்செயலாளர் சேதுராமன்,மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார்,மாவட்ட பிரதிநிதி ராஜபாண்டி,நகர பிரமுகர் சேதுராமன், VTS ராஜவேலு, மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்1