Shuru
Apke Nagar Ki App…
தென்காசி மாவட்டம் சுரண்டையில் அய்யா வைகுண்டரின் 194வது அவதார தின விழாவை முன்னிட்டு பூம் பல்லக்கில் அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
King
தென்காசி மாவட்டம் சுரண்டையில் அய்யா வைகுண்டரின் 194வது அவதார தின விழாவை முன்னிட்டு பூம் பல்லக்கில் அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
More news from தமிழ்நாடு and nearby areas
- தூத்துக்குடி பகுதி சார்ந்த நடிகர்கள் நடித்த பிராட்வே சுந்தர் இயக்கத்தில் சட்டங்கள் ஆயிரம் திரைப்படத்தில் காப்பீடு திட்டத்தில் எத்தனை உள்ளது நமக்கு எதன் மூலம் பயன்படுகிறது என்பதை தெளிவாக கூறுகிறது கடன் வாங்கினால் எவ்வளவு துன்பத்தை சந்திக்க நேர்கிறது என்பதை விளக்குகின்ற படமாகவும் அமைந்துள்ளது கவர்ச்சி அல்லாத சண்டைக் காட்சி அல்லாத இரட்டை அர்த்த வசனம் இல்லாத படமாக அமைந்துள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்க வேண்டிய சமுதாயத்திற்கு தேவையான விழிப்புணர்வு படம்1
- (4-3-2026) புதன்கிழமை சென்னையில் நடைபெற்ற விழாவில் தூத்துக்குடி மீன் பிடி துறைமுகம் விரிவாக்க பணிகளுக்காக ரு.150 கோடியில் திட்ட பணிகளை அமைச்சர்கள் கீதா ஜீவன் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார், இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மீன்பிடி துறைமுக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றிவைத்து சிறப்புரை ஆற்றினார் மேலும் அவர் பேசுகையில் தூத்துக்குடி துறைமுகம் பல்வேறு வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது அதேபோல் அருகில் உள்ள அனைத்து மீன்பிடி தொழில் சார்ந்த கடற்கரை கிராமங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் மேலும் மீனவ மக்கள் தமிழக முதல்வருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், விரிவாக்க பணி ஒப்பந்தக்காரர்கள், கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அனைத்து நிலை வருவாய்த்துறை அலுவலர்களுக்கு சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் வருவாய் அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், வருவாய்த் துறையில் காலியாக உள்ள காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வருவாய் துறை அலுவலர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர் இதனால் தேனி - மதுரை நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது1
- மதுரை : திருச்சி ரயில்வே நுழைவு வாயிலில் இந்தி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டதைக் கண்டித்து திமுகவினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அங்குள்ள இந்தி எழுத்துக்கள் உடனடியாக அகற்றப்பட்டன. இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில், அகற்றப்பட்டது இந்தி எழுத்துக்கள் மட்டுமல்ல, ஆதிக்க வெறியின் ஆணவமும்தான் எனச் சாடியுள்ளார். உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசி போலி தமிழ் பற்று காட்டுபவர்களும், அடிமைத்தனத்தின் அடையாளமாய் அவர்களுக்குத் துணை நின்று தமிழ்நாட்டுக்குத் துரோகம் இழைப்போரும் தமிழ்நாட்டு மக்களால் அகற்றப்படுவார்கள் என்றும், தில்லியின் ஆணவத்திற்குத் தமிழ்நாடு என்றைக்குமே கட்டுப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.2
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் ஆதிலட்சுமிபுரம் அருகே உள்ள பழைய இரும்பு கடையில் திடீரென தீப்பற்றி எரிந்ததை தொடர்ந்து ஆத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் ஆத்தூர் மற்றும் நிலக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர்கள் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொழுந்துவிட்டு பற்றி எரிந்த தீயை நீண்ட நேரமாக போராடி தண்ணீரை பீச்சி அடித்து முற்றிலுமாக அணைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் புகை மூட்டமாக காட்சியளித்ததுடன் பரபரப்பான சூழல் நிலவியது.1
- பழனியில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை இன்று பிறப்பு விழா இன்று நடைபெறுகிறது1
- மதுரை.. மதுரை கிழக்கு தொகுதி ஆனையூர் 19-வது வார்டில் 117 பயனாளிகளுக்கு புதன்கிழமை மாலை பட்டா வழங்கப்பட்டது. மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான பி.மூர்த்தி பட்டா ஆணைகளை வழங்கினார். நீண்டகால கோரிக்கையை ஏற்று பட்டா வழங்கிய அமைச்சருக்குப் பயனாளிகள் நன்றி தெரிவித்தனர். இதற்கிடையில் மதுரை மேற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜு, தேர்தல் வந்தால் சாலைகள் பளபளக்கும் எனப் பேசியது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பாப்பாக்குடி தினமணி நகர் பகுதிக்கு கடந்த 4 ஆண்டுகளில் அவர் எந்த வசதியும் செய்யவில்லை என மக்கள் கூறுகின்றனர். மேற்குத் தொகுதி பொறுப்பாளராக அமைச்சர் பி.மூர்த்தி பொறுப்பேற்ற பின்பே சாலைகள் சீரமைக்கப்பட்டதாகக் கூறி, சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜுவால் ஏன் செய்ய முடியவில்லை என வாக்காளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.3
- Post by G.thangarasu1
- Post by RAJA news1