Shuru
Apke Nagar Ki App…
பாபநாசம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் அசாருதீன் உதுமான்அலி வேட்பு மனு தாக்கல் செய்தார். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டசபை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினருக்கு போட்டியிடுபவர்களிடத்தில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. தமிழக வெற்றிக்கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அசாருதீன் உதுமான்அலி கையில் நெற்கதிர் எடுத்துகொண்டு கட்சி மாவட்டச் செயலாளர் நிஜாம்அலி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜெயமணி, மாவட்ட துணை செயலாளர் ரம்யா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலையரசி, ஒன்றிய செயலாளர் ராஜா, வினோத், உட்பட கட்சி மாவட்ட, ஒன்றிய நகர கிளை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் 500 க்கும் மேற்பட்டவர்களுடன் பாபநாசத்தில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.
சிவகுமார்.மு
பாபநாசம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் அசாருதீன் உதுமான்அலி வேட்பு மனு தாக்கல் செய்தார். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டசபை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினருக்கு போட்டியிடுபவர்களிடத்தில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. தமிழக வெற்றிக்கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அசாருதீன் உதுமான்அலி கையில் நெற்கதிர் எடுத்துகொண்டு கட்சி மாவட்டச் செயலாளர் நிஜாம்அலி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜெயமணி, மாவட்ட துணை செயலாளர் ரம்யா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலையரசி, ஒன்றிய செயலாளர் ராஜா, வினோத், உட்பட கட்சி மாவட்ட, ஒன்றிய நகர கிளை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் 500 க்கும் மேற்பட்டவர்களுடன் பாபநாசத்தில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.
More news from தமிழ்நாடு and nearby areas
- நாகப்பட்டினம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அதிமுக வேட்பாளர் தங்க. கதிரவன் இன்று மனு தாக்கல் செய்ய வந்தார். அதே நேரத்தில் தவெக வேட்பாளர் சுகுமாறனும் தனது ஆதரவாளருடன் வந்த போது இரண்டு கட்சி தொண்டர் கோஷம் போட ஆரம்பித்தனர். இதனால் இருதரப்பினரும் மோதி கொள்ளும் வகையில் பதட்டம் நிலவியதால் பாதுகாப்பு போலீசார் இருதரப்பினரையும் அப்புறப்படுத்தினார்கள்1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியின் தவெக வேட்பாளர் R.கதிரவன் இன்று காலை தேர்தல் அதிகாரி ஜெயசித்ரா கலாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் மணப்பாறை சட்டமன்ற தொகுதியின் அனைத்து பூத் பொறுப்பாளரான கிளைச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து மணப்பாறையின் பல பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.1
- கரூர் மாவட்டம் சிந்தாமணிப்பட்டியில் குடிநீர் பை உடைந்து போய்விட்டது பல மாதமாக குடிநீர் பைப்பை சரி பார்க்கவில்லை பலமுறை தகவல் கொடுத்தேன் சரி பார்க்கவில்லை6
- Post by JEK MEDIAtamil2
- நாமக்கல் மல்லசமுத்திரம் அருகே துத்திப்பாளையம் பகுதியில் வைக்கோல் ஏற்றி சென்ற லாரி மின்கம்பி உரசியதில் தீப்பிடித்து எரிந்தன அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு தீயணைப்பு துறையினர் வந்து தீயணைத்தனர் இருந்தபோதிலும் லாரி முற்றிலும் எரிந்து நாசமாயின சிறிது நேரம் அப்பகுதியில் பதட்டம் நிலவியது1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பழமை வாய்ந்த ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ராமநவமி பிரம்மோற்சவப் பெருவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் பக்திப் பெருக்குடன் நடைபெற்றது. விழாவின் பின்னணி இந்த பிரம்மோற்சவ விழா கடந்த ஒன்பது நாட்களுக்கு முன்னதாகக் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மாலை நேரங்களில் சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம் எனப் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்று வந்தன. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்தை முன்னிட்டு, இன்று காலை ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி, சீதா பிராட்டி மற்றும் லெட்சுமணருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், விசேஷ அலங்காரத்தில் சுவாமிகள் பெரிய தேரில் எழுந்தருளினர். "கோவிந்தா" கோஷங்கள் முழங்க, திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேவகோட்டையின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர், நிலையை வந்தடைந்தது. விழாவில் தேவகோட்டை நகர் பகுதியைச்சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.1
- நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் கட்சியின் மாவட்ட செயலாளர் சுகுமாறன் இன்று 4ந்தேதி சனிக்கிழமை நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் மாவட்ட கட்சி அலுவலகத்தில் இருந்து பப்ளிக் ஆபிஸ் சாலையில் ஊர்வலமாக சென்று நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்1
- நாம் தமிழர் கட்சி சீமான் மீது டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது தொடர்பாக டிஐஜி தரப்பு வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் கூறுகையில் உச்சநீதிமன்றத்தில் நீதியை பெறுவோம் என்றார்.1
- சேலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், சேலம் ஐந்து ரோடு அருகே உள்ள, தனியார் வணிக வளாகத்தில், தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி இன்று நடைபெற்றது. இதில் வணிக வளாகத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டால், அதனை எவ்வாறு அணைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும், மேலும் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை, எவ்வாறு கையாள்வது என்பது குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி இன்று வணிக வளாகத்தில் நடைபெற்றது. இதில் வணிக வளாகத்தில் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் சேலம் தீயணைப்புத்துறை ஊழியர்கள் அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1