Shuru
Apke Nagar Ki App…
இராசிபுரம் வட்டத்தில் அத்தனூர் பேரூர் தெருமுனையில் பொதுமக்கள் குப்பைகள் கொட்டி வருவதால் பேரூராட்சி தெருமுனைகளில் குப்பைத் தொட்டிகளை வைக்குமாறு பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளன பேரூராட்சி உரிய நடவடிக்கை எடுக்குமாறு மக்களின் வேண்டுகோளாக உள்ளன
கணேஷ் G
இராசிபுரம் வட்டத்தில் அத்தனூர் பேரூர் தெருமுனையில் பொதுமக்கள் குப்பைகள் கொட்டி வருவதால் பேரூராட்சி தெருமுனைகளில் குப்பைத் தொட்டிகளை வைக்குமாறு பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளன பேரூராட்சி உரிய நடவடிக்கை எடுக்குமாறு மக்களின் வேண்டுகோளாக உள்ளன
More news from தமிழ்நாடு and nearby areas
- திருச்செங்கோடு நாராயணா இ டெக்னோ ஸ்கூல் மற்றும் ஜேபி ஆனந்த் செஸ் அகாடமி ஆகியவை இணைந்து நடத்திய 6வது மாவட்ட அளவிலான ஓபன் அண்ட் சில்ட்ரன்ஸ் செஸ் திருவிழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. எட்டு வயது, பதினோரு வயது, 14 வயதுக்கு கீழ் உள்ளோருக்கான போட்டி மற்றும் ஓபன் கேட்டகிரி, செஸ் டெஸ்ட் என்னும் ஐந்து வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான செஸ் போட்டி என ஐந்து பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டியில் 185 இளைஞர்கள் இளம்பெண்கள் குழந்தைகள் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஐந்து பிரிவுகளிலும் வெற்றி பெற்ற தலா 25 பேருக்கு என மொத்தம் 125 பேருக்குபரிசுகள் கோப்பைகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.மேலும் சிறப்பு பரிசுகளாக குழுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்ட 9 பேருக்குஸ்மார்ட் வாட்ச் கள் பரிசாக வழங்கப்பட்டது. செஸ் டெஸ்ட்போட்டியில் வெற்றி பெற்ற யுவதி கயன் ஆதித் செழியா ஆகியோருக்குமுறையை முதல் இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசுகளும் மேலும் 6 பேருக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது எட்டு வயதுக்கு உட்பட்டவர்களுக்கானபிரிவில் ஷியாம் விநாயக், சூர்யா, ஜிதிக்க்ஷா ஸ்ரீஆகியோருக்கு முதல் மூன்று இடங்களுக்கான பரிசுகளும் மேலும் 22 பேருக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது 11 வயதுக்குட்பட்டவருக்கான பிரிவில் அத்விக் ராஜன் சாய்,கனிஷ்க்,ரியா உள்ளிட்ட 25 பேருக்கும்பரிசுகள் வழங்கப்பட்டது 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் ஹரி சரண், அஸ்வதா ஜெய், சர்வேஷ் பிரவீன்,ஆகியோர் உள்ளிட்ட 25 பேருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது ஓபன் கேட்டகிரி பிரிவில் ஹேம் ஹர்சந் ,முராஹரி,ஜஸ்வின் ஆதித்யா ஆகியோர் உள்ளிட்ட 15 பேருக்கு பரிசுகள் வழங்கப் பட்டது.பரிசுப் பொருட்களாக ரொக்கப் பரிசு கோப்பைகள் பழக்கங்கள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்பாளர் சான்றிதழ் வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் நாராயணாஇ டெக்னோ பள்ளியின் உதவி பொது மேலாளர் பாலா பள்ளி முதல்வர் சசிகலா உதவி முதல்வர்கள் ஷர்மிளா ஷாலினி வள்ளிமுத்து ஆகியோர் உள்ளிட்ட உடற்பயிற்சி ஆசிரியர்கள் விளையாட்டுப் பயிற்சி ஆசிரியர்கள் போட்டி நடத்தினார்கள் பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.1
- பொதுமக்களை துரத்திய ஒற்றை யானையால் பரபரப்பு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் சமீப நாட்களாக கர்நாடக மாநிலத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளனர் வழக்கமாக கோடைகாலங்களில் தண்ணீர் & உணவுக்காக வரும் யானைகள் தற்போது முன்னதாகவே வந்துள்ளது. முண்டச்சி பள்ளம் என்ற பகுதியில் இன்று திங்கள்கிழமை யானை ஒன்று சாலை கடக்கும்போது இருசக்கர வாகனத்தில் இருந்தவர்கள் ஹாரன் அடித்து யானையை அச்சுறுத்தியதை அடுத்து யானை சிறிது தூரம் அவர்களை துரத்தி சென்றது இதனால் அப்பகுதியில் இருந்த மக்கள் அச்சத்தில் பயந்து ஓடினர் இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது பின்னர் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்4
- தருமபுரி டாஸ்மார்க் குடோன் அருகே நிற்கும், சரக்கு வாகனங்களில் இரவு நேரத்தில், பதுபாட்டல்களை திருடும் கும்பல்-சரக்கு வாகனங்களை டாஸ்மார்க் குடோனில் நீறுத்தி வைக்க அனுமதிக்க வேண்டுமென்று ஓட்டுநர்கள் வலியுறுத்தல். தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான கடைகளுக்கு அனுப்பும் மது பாட்டில்களை, இருப்பு வைத்து, பிரித்து அனுப்புவதற்கான மதுபானக் கிடங்கு தருமபுரி அடுத்த தடங்கம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து லாரியில் மது பாட்டில்களை கொண்டு வரப்படுகிறது. ஆனால் இரவு நேரங்களில் லாரிகள் வந்தால், மது பாட்டில் சேமித்து வைக்கும் கிடங்கிறாகுள் லாரிகள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலேயே லாரிகள் நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சாலையோரம் நிற்கும், மது பாட்டில்கள் ஏற்றி வரும் சரக்கு லாரியில், இரவு நேரங்களில் மர்ம நபர்கள் தார்பாலினை கிழித்து, மதுபான மது பாட்டில்களை திருடி செல்கின்றனர். இதனால் மது பாட்டில்களை ஏற்றி வரும் லாரிகளுக்கும், லாரி ஓட்டுநர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என கூறி, மது பாட்டில் சேமிப்பு கிடங்கில் லாரியை நிறுத்த அனுமதிக்க வேண்டுமென லாரி ஓட்டுநர்கள் வலியுறுத்துள்ளனர். ஆனாலும் லாரிகளை உள்ளே நிறுத்த அனுமதிக்க வில்லை. இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் சாலையோர நின்றிருந்த லாரி மீது ஏறி தார்பாலினை கிழித்து மது பாட்டில்களை திருடியுளாளனர். அப்பொழுது லாரி ஓட்டுநர்கள் வந்ததும் மது பாட்டில்களை விட்டுவிட்டு தப்பி ஓடி உள்ளனர். இதனால் மது பாட்டில் சேமிப்பு கிடங்கிற்குள்ளேயே லாரிகளை நிறுத்த அரசு அனுமதிக்க வேண்டும். எல்லா மாவட்டங்களிலும் மதுபாட்டில் சேமிப்பு கிடங்குகளிலேயே லாரிகள் நிறுத்தி வைக்கப்படுகிறது. தருமபுரியில் மட்டும் சேமிப்பு கிடங்களுக்குள் லாரி நிறுத்த அனுமதிக்காமல், இங்கு சாலையோரம் நிறுத்தி வைக்கப்படுவதால், லாரி மற்றும் லாரி ஓட்டுனர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. எனவே லாரி சேமிப்பு கிடங்களுக்குள் நிறுத்துவதற்கு, முடிவு தெரியும் வரைக்கும் மது பாட்டில்களை கூட சேமிப்பு கடைகள் இறக்க மாட்டோம் என லாரி ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.1
- பாலக்கோடு அருகே சின்னாறு அணையிலிருந்து விவசாய பாசனத்திற்கு 140 நாட்களுக்கு வினாடி 400கன அடி தண்ணீரை மாவட்ட ஆட்சியர் சதீஷ் திறந்து வைத்தார். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி கிராமத்தில் உள்ள சின்னாறு அணை நிரம்பியது. தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையேற்று அணையிலிருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் விவசாய பாசனத்திற்காக வலது புறகால்வாய் வழியாக வினாடிக்கு 400 கன அடி தண்ணீரை திறந்து வைத்து, மலர் தூவினார். இதில் பழைய ஆயக்கட்டு ஐந்து ஏரிகளுக்கும், புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு 140 நாட்களுக்கு திறக்கப்படும். இதன் மூலம் பஞ்சப்பள்ளி, பெரியானூர், போடிகுட்டப்பள்ளி, அத்திமுட்லு மாரண்டஅள்ளி, கொலசனஅள்ளி, பி.செட்டிஅள்ளி, ஜெர்த்தலாவ், பாலக்கோடு, குஜ்ஜரஅள்ளி, எர்ரனஅள்ளி, பேளாரஅள்ளி, சாமனூர் ஆகிய கிராமங்களில் உள்ள பழைய ஆயக்கட்டு பரப்பு 2626 ஏக்கர் மற்றும் புதிய ஆயக்கட்டு பரப்பு 1874 ஏக்கர் மொத்தம் 4500ஏக்கர் நிலம் பாசனவசதி பெறுகின்றன. மேலும் தண்ணீரை கிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சதீஷ் அறிவுறுத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன், பாரளுமன்ற உறுப்பினர் மணி மற்றும் பொதுபணித்துறை அதிகாரிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.1
- paree matric higher secondary school Pullambadi. contact 99424646052
- தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பொது மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்க திண்டுக்கல்லிற்கு வருகை தர உள்ள நிலையில் மேடை பந்தலை பார்வையிட்ட அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்1
- வேடசந்தூர் மகாலட்சுமிபுரம் குரும்பபட்டி பூதிபுரம் சீத்தபட்டி மினுக்கம்பட்டி காந்திநகர் ஐயர் மடம் இந்த பகுதிகளில் சுமார் ஒரு மாத காலமாக பொதுமக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் கிடைப்பதில்லை இதனால் பொதுமக்கள் குடிநீரின்றி மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்1
- தருமபுரி அருகே இரண்டு நபர்கள் புல்லட் பைக் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல். தருமபுரி காந்தி நகரை சேர்ந்த பாரத ஜனதா கட்சி தருமபுரி இளைஞர் அணி தலைவர் விக்னேஷ் என்பவர் வழக்கம்போல் நேற்று இரவு புல்லட் வாகனத்தை வீட்டு முன்பு நிறுத்திவிட்டு உறங்கச் சென்றுள்ளார். மேலும் மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த புல்லட் வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த நிலையில் விக்னேஷ் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது இரண்டு நபர்கள் வீட்டின் முன்பு நின்று அக்கம் பக்கத்தினர் யாராவது இருக்கிறார்களா என்று நோட்டமிட்டு பின்பு காலால் சைடு லாக்கை உடைத்து புல்லட் வாகனத்தை தள்ளி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதனை அடுத்து தர்மபுரி நகர காவல் நிலையத்தில் வினேஷ் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கட்சியில் பதிவாகி இருப்பது யார் என்பதை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்த பகுதியில் அரசு ஊழியர்கள், அரசு பிரமுகவர்கள் என ஏராளமானோர் உள்ளதால் வாகனங்களை நிறுத்த மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.1