Shuru
Apke Nagar Ki App…
காலை வணக்கம் 🙏 ஓம் நமசிவாய 🙏
J.MUTHU
காலை வணக்கம் 🙏 ஓம் நமசிவாய 🙏
More news from தமிழ்நாடு and nearby areas
- *மணப்பாறை அருகே புத்தாநத்தத்தில் கடை அடைப்பு போராட்டம்* திருச்சி மாவட்டம், மணப்பாறை மணப்பாறை அருகே புத்தாநத்தம்அருகே புத்தாநத்தம் ஊராட்சியை புத்தாநத்தம் மற்றும் இடையபட்டி என இரண்டு ஊராட்சியாக பிரித்து அரசாணை வெளியிட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி மெய்யம்பட்டி, பாறைப்பட்டி, இடையபட்டி, வெள்ளையகவுண்டம்பட்டி, கணவாய்ப்பட்டி, கருஞ்சோலைப்பட்டி உள்ளிட்ட 18 கிராமங்களைச்சேர்ந்த பொதுமக்கள் கடந்த சில தினங்களுக்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து நேற்று புத்தாநத்தத்தில் ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 100 க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அதேபோல் ஆட்டோ மற்றும் மினி சரக்கு வேன்களும் ஓடவில்லை. ஆனால் ஊராட்சியை பிரிப்பதற்கு புத்தாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மட்டும் ஆதரவு தெரிவிக்கின்றனர். இதனால் ஊராட்சியை பிரிக்க ஆதரவு தெரிவிக்கும் ஒரு தரப்பினர் கடைகளை வழக்கம்போல் திறந்து வைத்துள்ளனர. எதிர்ப்பு தெரிவிக்கும் 18 கிராமமக்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊராட்சி பிரிப்பதால் பொருளாதார ரீதியாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடும் எனவே ஊராட்சியை பிரிக்கும் அரசாணையை ரத்து செய்யவேண்டும். ஊராட்சியை இரண்டாக பிரிக்காமல் பேரூராட்சியாக தரம் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சியை இரண்டாக பிரிக்கும் ஆணையை ரத்து செய்யாவிட்டால் கருப்புக்கொடி போராட்டம் நடத்துவோம் எனவும், வரவுள்ள சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராமத்தினர் தெரிவித்துள்ளனர். கடையடைப்பு போர்ட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.1
- ஆலங்குடி: மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய அமைச்சர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு கலை கல்லூரி மாணவர்களுக்கு இன்று மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான சிவ.வீ. மெய்யநாதன் கலந்து கொண்டு கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கி சிற்பித்தார். இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் தங்கமணி, ரவி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- ஆத்தூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி1
- வேடசந்தூரில் எம் எல் ஏ அலுவலகம் அருகில் பல நாட்களாக பழுதாகி உள்ள நிலையில் உள்ள அடி பம்ப் இந்த அடி பம்ப்பில் பலர் நல்ல குடி நீர் தேவைக்கு பயனடைந்து வந்தனர் வேடசந்தூர் சுற்றியும் எங்கும் நல்ல தண்ணீர் கிடையாது ஆனால் இந்த பம்ப்பில் மட்டுமே நல்ல தண்ணீர் கிடைக்கும். ஆனால் இப்பொழுதோ இதை சரி செய்து கொடுக்க யாரும் முன் வராததால் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.1
- திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆவண வைப்பறையில் கருநாகப் பாம்பு தீயணைப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டது1
- திண்டுக்கல் சோலைஹால் பகுதியில் உள்ள மீன் கடைகளை அகற்றி மேட்டுப்பட்டி சாலைகள் உள்ள குலசாலையில் மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது1
- விலையில்லா வேட்டி சேலை உற்பத்தி ஆண்டு முழுவதும் மேற்கொள்ள வேண்டும். உற்பத்தியில் வெளிப்படை தன்மை வேண்டும். வேட்டி சேலை உற்பத்தி செய்தவர்களுக்கு 3 ஆண்டாக நிலுவையில் உள்ள தொகை மற்றும் சீருடை உற்பத்தி செய்தவர்களுக்கு 6 ஆண்டு நிலுவைத் தொகை ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும். என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நெசவாளர் அணி மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் நெசவாளர் அணி மாநில தலைவர் G.N. சுந்தரவேல் பேட்டி* இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நெசவாளர் அணி மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்செங் கோட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நெசவாளர் அணி மாநில துணைத் தலைவர் டி.ஏ. கதிரேசன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் தேவராஜன் மாநில பொருளாளர் என்.காவேரி மாநில நிர்வாகி டி.ஆர்.கோதண்ட ராமன், காங்கிரஸ் கட்சி நாமக்கல் மாவட்டத் தலைவர் சர்வேயர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராககாங்கிரஸ் கட்சியின் மாநில நெசவளார் அணித் தலைவர் G.N. சுந்தரவேல் கலந்து கொண்டார் கூட்டத்தில் ஈரோடு மாவட்டத் தலைவர் சி.மாரிமுத்து, நாமக்கல் மாவட்ட பொது செயலாளர் நந்தகோபால், மாவட்ட பொருளாளர் TST. பொன்னுசாமி, Ex மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி, மற்றும்சிவாஜி சேகர் தியாகராஜன் மயில்சாமி மாவட்ட நெசவாளர் அணி தலைவர் மாரிமுத்து, முன்னாள் மாவட்ட தலைவர் நவீத், பொன்முடி ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில நெசவளார் அணித் தலைவர் G.N. சுந்தரவேல் கூறியதாவது. நெசவாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு கருதி விலை இல்லா வேட்டி திட்டம் தமிழக அரசால் கொண்டுவரப் பட்டது ஆனால் அந்த திட்டத்தின் கீழ் ஆண்டு முழுவதும் வேலை வழங்கப் படுவதில்லை. இரண்டு மாதம் அல்லது மூன்று மாதங்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது அந்த நிலையை போக்கி ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பு வழங்குகின்ற வகையிலே உற்பத்தி திட்டம் வழங்க வேண்டும். உற்பத்தி திட்டமானது வெளிப்படை தன்மையாக வழங்கப் படுவதில்லை. அது அனைத்து பகுதிகளிலும் புகாராக இருந்து வருகிறது. உற்பத்தி திட்டம் வழங்கப்படும் போது வெளிப்படை தன்மையாக வழங்க வேண்டும். மூன்று ஆண்டுகளாக நிலுவைத் தொகை வழங்கப்படாமல் உள்ளது. சீருடை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்ட துணிகளுக்கு ஆறாண்டுகளாக நிலுவைத் தொகை வழங்கப்படாமல் உள்ளது எனவே இதையெல்லாம் உடனடியாக தமிழக அரசு கலைய வேண்டும் அரசே கொள்முதல் செய்து கூட்டுறவு சங்கங்களுக்கு உடனடியாக வழங்குவதன் மூலமாக நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை கூட்ட முடியும். எனவே வேட்டி வேலைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் .அடுத்து அனைத்து நெசவாளர்களுக்கும் கல்வி ஊக்கத் தொகையாகவும் உதவித்தொகையாகவும் மருத்துவ பயன்பாடு என்பது வசதி படைத்தவர்களுக்கு இருக்கின்ற ஒரு மருத்துவ பயன்பாடு போல ஒவ்வொரு எளிய மக்களுக்கும் அதே ரீதியாக மருத்துவ காப்பீடு இருக்க வேண்டும். அடுத்து ஆண்டு முழுவதும் ரிபேட் தள்ளுபடி தள்ளுபடி என்பது இப்போது 20 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது மேலும் 60 வயதை கடந்த அனைத்து நெசவாளர்களுக்கும் மாத ஓய்வூதியமாக ரூபாய் 3000 வழங்க வேண்டும் என இந்த கூட்டத்தின் வாயிலாக தமிழக அரசையும் தமிழக முதல்வர் அவர்களையும் கேட்டுக்கொள்கிறோம். என கூறினார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியை எங்கள் தலைவர் முடிவு செய்வார். அவர் யாருடன் கூட்டணி என அறிவிக்கிறாரோ அவர்களுடன் இணைந்து பணியாற்றுவோம் என கூறினார்.1
- மணப்பாறை நகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இங்கு குப்பைகள் கொட்டகூடாது என்று தமிழக அரசு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தொடங்கி டெண்டர் விடப்பட்டுள்ளது. இதன்படி வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளில் மக்கும் குப்பைகளை உரமாகவும் மக்காத குப்பைகளை (பிளாஸ்டிக் கழிவுகள்) சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்பவேண்டும் என்று அரசு ஆணை சொல்கிறது. ஆனால் , மணப்பாறை நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தாமல் வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை அப்படியே நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டி வருகின்றனர். இதையறிந்த சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.1