Shuru
Apke Nagar Ki App…
நேற்று திருச்சி வழியாக சேலம் செல்லும் வழியில் எப்படி போக்குவரத்து நெரிசல் இருக்கிறது என்று பாருங்கள்
நம்ம ஊரு ஆடானை 2
நேற்று திருச்சி வழியாக சேலம் செல்லும் வழியில் எப்படி போக்குவரத்து நெரிசல் இருக்கிறது என்று பாருங்கள்
More news from தமிழ்நாடு and nearby areas
- அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி தொண்டி பேரூராட்சி அலுவலகத்தை மக்கள் முற்றுகை தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 3 மற்றும் 4-வது வார்டு பகுதிகளில் போதிய சாலை மற்றும் குடிநீர் வசதிகள் இல்லை எனக் கூறி, அப்பகுதி பொதுமக்கள் தொண்டி பேரூராட்சி அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு மனு அளித்தனர். மீன்பிடித் தொழிலைப் பிரதானமாகக் கொண்டுள்ள தங்களது பகுதியில், தொழில் மூலம் ஈட்டும் வருமானம் முழுவதையும் குடிநீர் வாங்குவதற்கே செலவிட வேண்டிய அவலநிலை உள்ளதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். மேலும் சாலை வசதிகளை விரைந்து செய்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது1
- நேற்று திருச்சி வழியாக சேலம் செல்லும் வழியில் எப்படி போக்குவரத்து நெரிசல் இருக்கிறது என்று பாருங்கள்1
- வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள எல்.இ.டி. விளக்குகளால் இரவில் விபத்துகள் ஏற்படும் அபாயம். வாகனத் தணிக்கை மேற்கொண்டு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய பொதுமக்கள் கோரிக்கை. சிவகங்கை மாவட்டத்தில் இரவு நேரங்களில் சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு, விதிமுறைகளை மீறி பொருத்தப்பட்டுள்ள அதிக ஒளி வீசும் எல்.இ.டி. முகப்பு விளக்குகள் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக சில இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள அதிக சக்தி கொண்ட எல்.இ.டி. விளக்குகளின் ஒளி, எதிரே வரும் வாகன ஓட்டிகளின் கண்களில் நேரடியாக பாய்வதால் சில விநாடிகள் சாலையை தெளிவாக பார்க்க முடியாத நிலை உருவாகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தடுமாறுவதோடு, விபத்து அபாயமும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இரவு பயணங்களின் போது இந்த பிரச்சினை அதிகமாக காணப்படுவதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். விதிமுறைகளை மீறி மாற்றியமைக்கப்பட்ட முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீது வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் காவல்துறையினர் இணைந்து சிறப்பு வாகனத் தணிக்கை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனுமதிக்கப்பட்ட தரநிலைகளுக்கு உட்பட்ட விளக்குகள் மட்டுமே வாகனங்களில் பயன்படுத்தப்படுவதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது!1
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குறும்பப்பட்டி அருள்மிகு பேராயி அம்மன் செல்லாயி அம்மன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குரும்பபட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு பேராயி அம்மன் செல்லாயி அம்மன் ஆலய அஸ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரா பகுதிகளைச் சார்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். இதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.1
- சிங்கம்புணரி மங்கள விநாயகர் மங்கள விநாயகர் திருக்கோயிலில் இன்று காலை ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்திருக்கோயிலில் இன்று காலை ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் அருள்தரும் ஸ்ரீ மங்கள விநாயகர் திருக்கோயிலில் இன்று காலை ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. நேற்று இரவு முதற்கால யாகபூஜை நிறைவுபெற்றது. இன்று காலை இரண்டாம் கால யாகபூஜைகளுக்குப் பின் புனித தீர்த்த குடங்கள் கோவிலை வலம் வந்து விமானத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். சர்வ சாதகம் அருணகிரி சிவாச்சாரியார் தலைமையில் ஏழு சிவாச்சாரியார்கள் சிறப்பு யாக வேள்விகளை நடத்தினர். நிறைவாக பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.1
- புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது தற்போது புதுக்கோட்டை பகுதிகளில் உள்ள மாலையிடு திருக்கோவணம் 20 நிமிடமாக மழை பெய்து கொண்டிருக்கிறது புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் உள்ள மாலையிடு திருக்கோவர்ணம் கோவில்பட்டி முத்துரயன்பட்டி போன்ற பகுதிகளில் இன்று காலை முதல் மிகக் கடுமையான வெயில் அடித்த நிலையில் மாலை நாலு முப்பது முதல் நல்ல மழை பெய்து வருகிறது இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்1
- மூன்று நாட்களாக உபயோகத்தில் இல்லாத குடிநீர் பொதுமக்கள் அவதி. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வைகை வடகரை கிராமத்தில் மூன்று நாட்களுக்கு மேலாக பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய குடிநீர் மோட்டார் பழுதாகி உள்ளது இதனால் மூன்றாவது நாட்களாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர் சம்பந்தப்பட்ட நிர்வாகம் அதனை சரி செய்வதன் விரைந்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.1
- கோவில் திருவிழாவை முன்னிட்டு பாய்மர படகு போட்டி நடைபெற்றது திருப்பாலைக்குடியில் ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் பாய்மரபடகு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 15க்கும் மேற்பட்ட படகுகள் கலந்து கொண்டன. இப்போட்டிக்கு 15 கடல் மைல்கள் தொலைவு எல்கை நிர்ணயம் செய்யப்பட்டு போட்டி நடைபெற்றது.ஒவ்வொரு படகிற்கும் ஏழு நபர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டார்கள் இப்போட்டியில் கலந்து கொண்ட படகுகள் காற்றின் வேகத்தில் ஒன்றை ஒன்று முந்தி சென்றதும் படகை காற்றின் திசைக்கு ஏற்றவாறு வீரர்கள் பாய்மரத்தை திருப்ப சுறு சுறுப்பாக வேலை பார்த்தனர் இது பார்வையாளர்களை கவர்ந்தது. இப் போட்டியை காண சுற்று வட்டார மீனவ கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் வந்திருந்தனர். முடிவில் இப் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பையும் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.1