சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69 நினைவு நாளை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத்தின் வடக்கு மாவட்ட சார்பில் கோவில்பட்டி அருகே தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69 நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே திட்டங்குளத்தில் அமைந்துள்ள தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவருட்சிலைக்கு தமிழக வெற்றி கழகத்தின் வடக்கு மாவட்ட சார்பில் தமிழக வெற்றி கழக வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் கலந்து கொண்டு தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69 நினைவு நாளை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத்தின் வடக்கு மாவட்ட சார்பில் கோவில்பட்டி அருகே தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69 நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே திட்டங்குளத்தில் அமைந்துள்ள தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவருட்சிலைக்கு தமிழக வெற்றி கழகத்தின் வடக்கு மாவட்ட சார்பில் தமிழக வெற்றி கழக வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் கலந்து கொண்டு தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- சில்வர்ஸ்டோன் ரேஸ்: லண்டனில் கூடிய ரசிகர்களைப் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்திய நடிகர் அஜித்! சில்வர்ஸ்டோன் பந்தயத்தில் (Race) பங்கேற்பதற்காக லண்டன் சென்றுள்ள நடிகர் அஜித், அங்கே குவிந்த ரசிகர்களிடம் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்களைப் பாதுகாப்பாக இருக்குமாறு அவர் அறிவுறுத்திய நிலையில், சிலர் அதைக் கவனிக்காமல் கூச்சலிட்டதால் "முக்கியமான விஷயம் சொல்கிறேன், தயவுசெய்து கேளுங்கள்" என லேசாகக் கடிந்துகொண்டார். தொடர்ந்து, அங்கு வந்திருந்த அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். இந்த நிலையில், லண்டனில் நடைபெறவுள்ள இந்த கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.1
- பாரதியார் இம்மானுவேல் சேகரனார் நினைவு நாள் - திமுகவினர் அஞ்சலி தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் இம்மானுவேல் சேகரனின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினார் இதுபோல் மகாகவி பாரதியாரின் 105 வந்து நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் புகைப்படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது தியாகி இம்மானுவேல் சேகரனின் 69 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் இம்மானுவேல் சேகரன் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில் வைக்கப்பட்டிருந்த தியாகி இம்மானுவேல் சேகரனின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் ஏராளமான திமுகவினர் மலர் மரியாதை செலுத்தினார்கள் இதுபோல் மகாகவி பாரதியாரின் 105வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் திரு உருவப்படத்திற்கும் மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் மாநகராட்சி மண்டல தலைவர் பால குருசாமி மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்1
- நெல்லை மாவட்டம் பத்தமடை சேரன்மகாதேவி சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் மிளா நெல்லை மாவட்டம் பத்தமடையில் வந்து சேரன்மகாதேவி செல்லும் புறவழிச்சாலை பகுதியில் மிளாக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் பயணிக்கின்றனர். நேற்று இரவு மிளா தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது1
- தென்காசி மாவட்டம் சுரண்டையில் இருந்து பாவூர்சத்திரம் செல்லும் ரோட்டில் குருங்காவனத்தில் சிற்றாறு குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் உள்ள இரும்பு ராடுகள் பெயர்ந்து வாகனங்களின் டயர்கள் மற்றும் பாதசாரிகளின் பாதங்களை சேதப்படுத்தி வருகிறது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதனை கவனத்தில் கொண்டு சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆறுமுகநேரி இந்து முன்னணி சார்பாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணி ஆறுமுகனேரி நகர இந்து முன்னணியும் இணைந்து நடத்தும் மாபெரும் இந்திய எழுச்சி திருவிழா 🙏3
- அருப்புக்கோட்டை வழியாக தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடிக்கு செல்லும் வாகனங்களில் இளைஞர்கள் தொங்கியபடியும் முகம் சுளிக்கும் வகையில் கத்தியபடியும் அதிவேகமாக செல்வதால் பொதுமக்கள் கடும் அவதி காவல்துறை அறிவுறுத்தல் படி அருப்புக்கோட்டையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டதால் சிரமம் அடைந்த வியாபாரிகள் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு ஏராளமான பொதுமக்கள் வாகனங்களில் செல்வது வழக்கம். இதில் விருதுநகர், சாத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வழியாகத்தான் பரமக்குடி செல்ல முடியும். இவ்வாறு வாகனங்களில் அருப்புக்கோட்டை வழியாக செல்லும் இளைஞர்கள் வாகனங்களில் தொங்கியபடியும் அதிக அளவு கூச்சலிட்டு கொண்டும் பொது மக்களுக்கு முகம் சுளிக்கும் வகையில் கத்தியபடியும் சென்றனர். வாகனங்களில் கதவைத் திறந்து அதில் தொங்கியபடி ஆபத்தான வகையில் இளைஞர்கள் பயணம் செய்வது பொதுமக்கள் இடைய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு செல்லும் வழியில் உள்ள அனைத்து கடைகளையும் காவல்துறையினர் மூட அறிவுறுத்தி உள்ளதால் வணிகர்களும் சிரமம் அடைந்துள்ளனர். போலீசாரின் அறிவுறுத்தல் படி அருப்புக்கோட்டையில் காந்திநகர், திருச்சுழி ரோடு, ஆத்திபட்டி பகுதிகளில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன. தொடர்ந்து இதுபோன்ற தலைவர்களின் நினைவிடத்திற்கு வாகனங்களில் செல்லும் இளைஞர்கள் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் முக சுழிப்பை ஏற்படுத்தும் வகையிலும் செல்வதால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.1
- ஐந்து நாள் மட்டுமே வேலை தூத்துக்குடியில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி மத்திய அரசு வங்கி ஊழியர்களுக்கு ஐந்து நாள் வேலைமுறையை அமல்படுத்த வேண்டும் மேலும் பி எல் ஐ திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் 200க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் பங்கேற்பு வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக வங்கி பணிகள் முழுமையாக முடக்கம் வாடிக்கையாளர்கள் பாதிப்பு நாடு முழுவதும் அனைத்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசு வங்கி ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை என்ற நடைமுறையை அமல்படுத்த வேண்டும் மேலும் ஒரு தலைபட்ச்சமான பி எல் ஐ திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் அனைத்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் கனரா வங்கி முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் 200க்கும் மேற்பட்ட ஆண் பெண் வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பண பரிவர்த்தனை முற்றிலுமாக பாதிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் மிகவும் பாதிக்கப்பட்டனர் மேலும் வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் காரணமாகவும் தொடர்ந்து மூன்று நாட்கள் வருகிற 14-ஆம் தேதி வரை வங்கிகள் விடுமுறை காரணமாக ஏடிஎம் சேவை உள்ளிட்ட வங்கி சேவைகள் முற்றிலுமாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது1
- மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே திரையரங்கில் தீ விபத்து. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே மேல கோபுர தெருவில் உள்ள பழமையான சென்ட்ரல் திரையரங்கம் இன்று (செப்.12) இரவு 8 மணி அளவில் திடீரென தீ பிடித்தது. இந்த தியேட்டரில் கடந்த சில வருடங்களாக திரைப்படங்கள் திரையிடுவது இல்லை. இருப்பினும் திரையரங்கு வளாகத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்துமிடமாக செயல்பட்டு வந்துள்ளது . இந்நிலையில் இன்று இரவு 8 மணி அளவில் திரையங்கில் உள்ளே திடீரென தீ விபத்து ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் ஏதும் தெரியவில்லை. வளாகத்தில் இருந்த கார்கள் அப்புறப்பட்டு வருகின்றன. மேலும் தியேட்டர் உள்ளே அப்பகுதியில் உள்ள கடைக்காரர்கள் 15 பேருக்கு மேல் தங்கள் கடை பொருட்களை குடோன் போல் வைத்து பொருட்களை எடுத்து வந்துள்ளனர். 4 க்கும் மேற்பட்ட மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திரையரங்கு உள்ளே தீ பிடித்து எரிவதால் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.1
- ராஜபாளையத்தில் நடந்த விபத்தில் இரண்டாம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் திருவனந்தபுரம் தெருவை சேர்ந்த தனியார் தொழிலாளி ராதாகிருஷ்ணன் என்பவரது மூத்த மகன் ரோகித் (7) தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான். இன்று காலை பள்ளி செல்வதற்காக தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது, நிறுத்தத்தில் காத்திருந்த மாணவர்களை ஏற்றி செல்ல வந்த தனியார் கல்லூரி பேருந்து மோதியதில், சிறுவன் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தான். சிறுவன் உடலை மீட்ட தெற்கு காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் பேருந்து ஓட்டுநர் மம்சாபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.1