தவெக மாநில கட்சி அங்கீகாரம் பிரியாணி வழங்கி புதுக்கோட்டையில் நிர்வாகிகள் கொண்டாட்டம் புதுக்கோட்டை உழவர் சந்தை அருகில், தமிழக வெற்றி கழகத்தை மாநில கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை வரவேற்கும் வகையிலும், தமிழக முதல்வர் விஜய் அவர்களின் நல்லாட்சி சிறப்பாக நடைபெற வேண்டியும், புதுக்கோட்டை மாவட்ட இளைஞரணி சார்பில் பி.ஆர். பிரவீன் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கி கொண்டாடப்பட்டது. முன்னதாக தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் அவர்களின் அறிவுறுத்தலின்படி, 500 ஏழை, எளிய மக்களுக்கு சுடச்சுட பிரியாணி வழங்கப்பட்டது.17-வது வாரமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இளைஞரணி மாவட்ட நிர்வாகி தனசேகரன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் சேட்டு, பி.ஆர். பிரவீன், நரிமேடு பிரபு மற்றும் பொறுப்பாளர்கள் சதீஷ், ரமேஷ், பி.ஆர். பிரபு, கோகுல், பிரவீன், வினோத், மணி, சுப்புராம், ஹரி, சேகர் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு சுடச்சுட பிரியாணி வழங்கினர்.மேலும், தேர்தல் ஆணையத்தின் மாநில கட்சி அங்கீகாரம் கிடைத்ததை வரவேற்கும் வகையில் நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தவெக மாநில கட்சி அங்கீகாரம் பிரியாணி வழங்கி புதுக்கோட்டையில் நிர்வாகிகள் கொண்டாட்டம் புதுக்கோட்டை உழவர் சந்தை அருகில், தமிழக வெற்றி கழகத்தை மாநில கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை வரவேற்கும் வகையிலும், தமிழக முதல்வர் விஜய் அவர்களின் நல்லாட்சி சிறப்பாக நடைபெற வேண்டியும், புதுக்கோட்டை மாவட்ட இளைஞரணி சார்பில் பி.ஆர். பிரவீன் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கி கொண்டாடப்பட்டது. முன்னதாக தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் அவர்களின் அறிவுறுத்தலின்படி, 500 ஏழை, எளிய மக்களுக்கு சுடச்சுட பிரியாணி வழங்கப்பட்டது.17-வது வாரமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இளைஞரணி மாவட்ட நிர்வாகி தனசேகரன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் சேட்டு, பி.ஆர். பிரவீன், நரிமேடு பிரபு மற்றும் பொறுப்பாளர்கள் சதீஷ், ரமேஷ், பி.ஆர். பிரபு, கோகுல், பிரவீன், வினோத், மணி, சுப்புராம், ஹரி, சேகர் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு சுடச்சுட பிரியாணி வழங்கினர்.மேலும், தேர்தல் ஆணையத்தின் மாநில கட்சி அங்கீகாரம் கிடைத்ததை வரவேற்கும் வகையில் நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
- புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் இமானுவேல் சேகரனாரின் 69-ஆம் ஆண்டு குருபூஜை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் இமானுவேல் சேகரனாரின் 69-ஆம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் அவரது திருவுருவப் படம் இடம்பெற்ற பதாகை அமைக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திரண்டு வந்து அவரது நினைவைப் போற்றினர். மேலும் இமானுவேல் சேகரனாரின் சமூகப் பங்களிப்பு தியாகம் மற்றும் சமுதாயத்திற்காக ஆற்றிய பணிகளை நினைவுகூரும் வகையில் மரியாதை செலுத்தப்பட்டது. குருபூஜையை முன்னிட்டு அப்பகுதியில் அமைதியான முறையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையொட்டி கறம்பக்குடி சீனிக்கடை முக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.1
- Post by Prasanth1
- இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய் சொந்த காரணங்களுக்காக சென்றுள்ளாரா முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக சென்று உள்ளாரா என்ற விபரத்தினை அவர் தமிழகம் வந்த பின்னர் தெரிவிக்க வேண்டும். சிவகங்கையில் பாஜக தமிழக தலைவர் நைனார் நாகேந்திரன் பேட்டி சிவகங்கையில் பாஜக நிர்வாகி இல்ல நிகழ்வில் கலந்து கொள்ள வந்த தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தபோது, லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய் சொந்த காரணங்களுக்காக சென்றுள்ளாரா முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக சென்று உள்ளாரா என்ற விபரத்தினை அவர் தமிழகம் வந்த பின்னர் தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் மேலும் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.1
- ஐக்கிய வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (UFBU) சார்பில் நாடு தழுவிய அளவிலான ஒரு நாள் வங்கி வேலைநிறுத்தப் போராட்டம் திருவாடானை பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் வங்கிகள் சங்கம் (IBA) சார்பில் 5 நாள் வேலை ஒப்பந்தத்தை அமல்படுத்துவது. காலியாக உள்ள எழுத்தர் (Clerk) மற்றும் துணைப் பணியாளர் (Sub-staff) பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஓய்வூதியக் கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அதனால் வாடிக்கையாளர்கள் சிரமப்பட்டனர்1
- காட்டுப்புத்தூர் இன்று நடைபெற்ற வார சந்தையில் குவிந்த பொதுமக்கள் திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் மோகனூர் சாலையில் இன்று நடைபெற்ற வெள்ளிக்கிழமை வார சந்தையில் காய்கனிகள் வாங்குவதற்கு பொதுமக்கள் குவிந்தனர்.கத்தரிக்காய் தக்காளி வெங்காயம் முட்டைகோஸ் உருளைக்கிழங்கு காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகள் வாங்குவதற்கு காட்டுப்புத்தூர் சீலை பிள்ளையார் புத்தூர் ஸ்ரீ ராம சமுத்திரம் சின்ன பள்ளிபாளையம் பெரிய பள்ளிபாளையம் பிடாரமங்கலம் உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட கிராம மக்கள் காய்கனிகள் வாங்குவதற்கு குவிந்துள்ளனர்1
- லிட்டர் இமானுவேல் 69 ஆவது குருபூஜை விழா திமுக திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்எல்ஏ மலர் தூவி மரியாதை. விக்டர் இம்மானுவேல் 69 ஆவது குருபூஜை தினத்தை முன்னிட்டு விக்டர் இம்மானுவேல் திருவுருவப்படத்திற்கு திமுகதிருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னால் எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் மலர் தூவி மரியாதை செலுத்தினார் உடன் நகரச் செயலாளர் சிவக்குமார், மாவட்டத் துணைச் செயலாளர் மயில்வாகனன், உன் முன்னாள் ஒன்றிய செயலாளர் சோழன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவன் நடராஜன், சித்தூர் மணிவேல் நகராட்சி கவுன்சிலர்கள் சுபஸ்ரீ பாலகுமார், முகேஷ், தொண்டரணி அமைப்பாளர் ரியல் எஸ்டேட் கார்த்திக், கிளைச் செயலாளர் முருகன், புதுப்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் சரவணன், பட்டாசு செந்தில், மகளிர் அணி சாந்தி உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.1
- காரைக்குடியில் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டம். தொடர் விடுமுறையால் வாடிக்கையாளர்கள் பாதிக்கும் அபாயம். வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை, ஓய்வூதிய திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் பொதுத்துறை வங்கிகளைச் சேர்ந்த சுமார் 8 லட்சம் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஆரிய பவன் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஸ்டேட் வங்கி முன்பு ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இன்று நடைபெறும் போராட்டத்தைத் தொடர்ந்து, நாளை வார விடுமுறை தொடங்குகிறது. அதன்பின்னர் விநாயகர் சதுர்த்தி விடுமுறையும் வருவதால், தொடர் விடுமுறை காரணமாக வாடிக்கையாளர்களின் காசோலை உள்ளிட்ட வங்கி பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும், இந்த தொடர் விடுமுறையால் ஏடிஎம் சேவைகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனியார் வங்கி ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.1
- அரசு பள்ளி முன்பு ஆபத்தான பட்டுப்போன மரம் அகற்ற வேண்டும் என வேண்டுகோள் திருவாடானை தாலுகா ஆதியூர் அரசு தொடக்கப் பள்ளியின் நுழைவாயிலில் உள்ள பட்டுப்போன மரம் ஒன்று, மாணவர்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த மரம் முழுமையாக காய்ந்து, இலைகள் உதிர்ந்து, கிளைகள் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. பள்ளியின் நுழைவாயிலிலேயே இந்த மரம் இருப்பதால், மாணவ, மாணவிகள் தினமும் அதன் அருகிலேயே கடந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எதிர்பாராதவிதமாக மரம் அல்லது அதன் கிளைகள் முறிந்து விழுந்தால், மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக தலையிட்டு, அந்தப் பட்டுப்போன மரத்தை அகற்றி, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.1
- கே குமார் செய்தியாளர் முசிறி முசிறி அருகே ஊரக்கரையில் 125 நாள் வேலை காத்திருப்பு போராட்டம் - அதிகாரிகள் யாரும் வராததால் அடுப்பு வைத்து கஞ்சி காய்ச்சி பொதுமக்கள் போராட்டம் திருச்சி மாவட்டம், முசிறி அருகே தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊரக்கரை ஊராட்சியில், 125 நாள் வேலை முழுமையாக வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விவசாய தொழிலாளர்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இன்று காலை 10 மணி முதல் நடைபெறும் போராட்டத்தை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாததுடன், பேச்சுவார்த்தைக்கும் வராததால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக அங்கேயே அடுப்பு வைத்து சமையல் செய்து கஞ்சி காய்ச்சி சாப்பிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர், முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாண்டியன், நிர்வாகிகள் வீரவிஜயன், சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகள் குறித்து பேசினர். கே குமார் செய்தியாளர் முசிறி கே குமார் செய்தியாளர் முசிறி முசிறி அருகே ஊரக்கரையில் 125 நாள் வேலை காத்திருப்பு போராட்டம் - அதிகாரிகள் யாரும் வராததால் அடுப்பு வைத்து கஞ்சி காய்ச்சி பொதுமக்கள் போராட்டம் திருச்சி மாவட்டம், முசிறி அருகே தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊரக்கரை ஊராட்சியில், 125 நாள் வேலை முழுமையாக வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விவசாய தொழிலாளர்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இன்று காலை 10 மணி முதல் நடைபெறும் போராட்டத்தை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாததுடன், பேச்சுவார்த்தைக்கும் வராததால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக அங்கேயே அடுப்பு வைத்து சமையல் செய்து கஞ்சி காய்ச்சி சாப்பிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர், முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாண்டியன், நிர்வாகிகள் வீரவிஜயன், சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகள் குறித்து பேசினர். மேலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மாவட்டம், முசிறி அருகே தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊரக்கரை ஊராட்சியில், 125 நாள் வேலை முழுமையாக வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விவசாய தொழிலாளர்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இன்று காலை 10 மணி முதல் நடைபெறும் போராட்டத்தை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாததுடன், பேச்சுவார்த்தைக்கும் வராததால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக அங்கேயே அடுப்பு வைத்து சமையல் செய்து கஞ்சி காய்ச்சி சாப்பிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர், முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாண்டியன், நிர்வாகிகள் வீரவிஜயன், சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகள் குறித்து பேசினர். மேலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.1