ஏற்காடு அதிமுக வேட்பாளர் உஷாராணி இறுதி கட்ட பிரச்சாரம்! தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில், சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் உஷாராணி, இன்று மாலை சேலம் ஏற்காடு வண்டி கடை ரவுண்டானா அருகில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்வதற்கு முன், அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிவிப்புகள் குறித்து வாக்காளர்களிடையே விவரமாக எடுத்துரைத்து, ஏற்காடு பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும் விளக்கமாக பேசினார். மேலும் தான் வெற்றி பெற்ற பிறகு, மலைவாழ் பகுதி மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், பல்வேறு அடிப்படை நலத்திட்டங்களை செயல்படுத்தி, ஏற்காடு சட்டமன்றத் தொகுதியை தமிழகத்தில் முன்மாதி தொகுதியாக மாற்றி காட்ட வேண்டும் என வாக்காளர்கள் இடையே பேசி தேர்தல் ஆணையம் அறிவித்தபடி மாலை 5 மணிக்கு தனது பிரச்சாரத்தை முடித்து கொண்டார்.
ஏற்காடு அதிமுக வேட்பாளர் உஷாராணி இறுதி கட்ட பிரச்சாரம்! தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில், சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் உஷாராணி, இன்று மாலை சேலம் ஏற்காடு வண்டி கடை ரவுண்டானா அருகில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்வதற்கு முன், அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிவிப்புகள் குறித்து வாக்காளர்களிடையே விவரமாக எடுத்துரைத்து, ஏற்காடு பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும் விளக்கமாக பேசினார். மேலும் தான் வெற்றி பெற்ற பிறகு, மலைவாழ் பகுதி மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், பல்வேறு அடிப்படை நலத்திட்டங்களை செயல்படுத்தி, ஏற்காடு சட்டமன்றத் தொகுதியை தமிழகத்தில் முன்மாதி தொகுதியாக மாற்றி காட்ட வேண்டும் என வாக்காளர்கள் இடையே பேசி தேர்தல் ஆணையம் அறிவித்தபடி மாலை 5 மணிக்கு தனது பிரச்சாரத்தை முடித்து கொண்டார்.
- சேலம் மாநகராட்சி திமுக கவுன்சிலர் சர்க்கரை சரவணன் வெளியிட்டுள்ள சமூக வலைதள வீடியோ அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.அதில் சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான ராஜேந்திரன்,கட்சியில் உள்ள முக்கியத் தலைவர்களை ஓரங்கட்டிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இதனால் நிர்வாகிகள் தேர்தல் பணியில் சுணக்கம் காட்டி வருவதாகவும், இதனால் அமைச்சரின் வெற்றி கேள்விக்குறியாகி? என தெரிவித்துள்ளார்1
- Post by Periyasamy1
- பாலக்கோடு திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார் பேட்டி. பாலக்கோடு தொகுதியில் 25 ஆண்டு காலமாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே.பி.அன்பழகன், விவசாயம், வளர்ச்சி சார்ந்த திட்டங்களையும், நீர்ப்பாசன திட்டங்களையும், இதுவரை செய்யவில்லை என்பது மக்கள் குற்றச்சாட்டு, ஒவ்வொரு இடத்திலும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட செய்து தரவில்லை. பழங்குடியினர், இஸ்லாமியர், ஆதிதிராவிடர் வாழக்கூடிய பகுதிகளில் கூட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை. இதுவரை 6 கிராமங்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது. 25 ஆண்டு காலமாக அமைச்சராகவும் நிறைவேற்றவில்லை. இரண்டு தொழிற்சாலைகளை கொண்டு வந்திருந்தால், கூட மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும். ஓசூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இருக்கும் போது கேபி அன்பழகன் ஆளுங்கட்சியாக இருக்கும் பொழுது நினைத்திருந்தால் படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும். விவசாயத்தை நம்பி இருக்கின்ற பாலக்கோடு பகுதிகளுக்கு நீர் பாசன திட்டங்கள் இல்லை. இங்கு இருக்கின்ற சர்க்கரை ஆலை சிறந்த சர்க்கரை ஆலை ஆக விருது பெற்றது. ஆனால் கரும்பு உற்பத்தி இல்லை என்பதால், மூடும் நிலைமையில் இருந்து வருகிறது. ஒரு அமைச்சராக இருப்பவர் நினைத்திருந்தால், இதை செய்வதற்கு ஐந்தாண்டுகள் தேவைப்பட்டிருக்கும். ஆனால் எதையும் செய்யாமல் 25 ஆண்டுகள் இருந்திருக்கிறார். இதனால் சர்க்கரை ஆலை மூடும் நிலையில் இருந்து வருகிறது. இவரைப் பார்த்தால் மக்களுக்கு ஒரு பயமான நிலை தான் இருந்து வருகிறது. இவரை கேள்வி கேட்ட ஒருவரை தாக்கியுள்ளனர். தற்போது அவரை எதிர்த்து நாம் போட்டியிடும் போது மக்கள் ஓரணியில் திரண்டு நம் பின்னாடி இருக்கிறார்கள். மிகப்பெரிய வெற்றியை தர தயாராகி இருக்கிறார்கள். அப்பப்ப தேர்தல் வரும் நேரத்தில் மட்டும் எல்லோருக்கும் வீடுகளுக்கு சேலை கொடுக்கிறார்கள். எங்களுக்கு வேலை தான் முக்கியம் என சொல்கிறார்கள். வேலை இருந்தால் சேலையை நாங்களே வாங்கிக் கொள்வோம். இப்படித்தான் எங்களை ஏமாற்றி வருகிறார். இப்பொழுது நான் கொடுத்திருக்கின்ற வாக்குறுதி உங்கள் பேரக் குழந்தைகள், அடுத்த தலைமுறை வரும்போது நம்பிக்கை கூறிய வகையில் ஒரு வேலையை கொடுப்பேன் என்று உறுதி அளித்திருக்கிறேன். இந்த பகுதியில் இருந்து தக்காளி, மாம்பழம், தென்னை உள்ளிட்ட விவசாய பொருட்கள் மதிப்பு கூட்டு பொருள்கள் தயாரித்து அவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கின்ற வகையில் மதிப்பு கூட்டு தொழிற்சாலையை கொண்டு வருவேன். பன்னாட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து தக்காளி கூழ் பேக்டரி கொண்டு வருவேன். காய்கறிகள் இந்த பகுதியில் அதிகமாக உற்பத்தி ஆகிறது. ஆனால் ராயக்கோட்டை சென்று அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதற்கு குளிர்சாதன வசதிகளுடன் கூடிய பெரிய சந்தை உருவாக்கி, ஒரு வளர்ச்சிக்கான பாலக்கோடு மக்களிடம் ஒப்படைப்பேன் அது மே நான்காம் தேதிக்கு பிறகு நடைபெறும். எனக்கு எண்ணேகோல் புதூர் திட்டத்தை நிறைவேற்ற 8 மாதங்கள் போதும். தண்ணீர் கொண்டு வரப்பட்டதற்கு ஒரு வருடத்திற்கு செய்து கொடுப்பேன். இந்த மாவட்டமே மாறப் போகிறது. பாலக்கோடு மிக செழிப்பான விவசாயம் சார்ந்த பகுதியாக இருக்கும். தமிழ்நாட்டிலேயே இது மாதிரியான வளர்ச்சி எங்கும் இல்லாத அளவிற்கு செய்யப் போகிறோம். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பொழுது சாலையில்லாத மலை கிராமங்களுக்கு சாலை உள்ளிட்ட 12000 கோடிக்கு நலத்திட்ட உதவிகளை தருமபுரி மாவட்டத்திற்கு கொண்டு வந்திருக்கின்றேன். இதைப் பற்றி எங்கும் நான் பேசவில்லை. வளர்ச்சிக்கான திட்டத்தை மட்டும் பேசி இருக்கேன். அதேபோல் கே.பி.அன்பழகனை தனிப்பட்ட முறையில் எங்கு விமர்சனம் அடையவில்லை. வளர்ச்சி வேண்டும் அடுத்த தலைமுறைக்கு வளர்ச்சிகரமான பாலகோடு ஒப்படைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எல்லா திட்டங்களையும் செய்து தருமபுரி மாவட்டம் விவசாய மற்றும் தண்ணீர் பற்றாக்குறை இல்லாத மாவட்டமாக உருவாக்க போகிறேன் என தெரிவித்தார்.1
- குளித்தலையில் அண்ணா திமுக சார்பில் கடந்த 30 நாட்களாக வாக்குகள் சேகரிக்க உதவிய பொறுப்பாளர்களுக்கும் கழக நண்பர்களுக்கும் அனைவருக்கும் அண்ணா திமுக சார்பாக குளித்தலை சட்டமன்ற உறுப்பினராக போட்டியிடும் எஸ் கருணாகரன் அவர்கள் நன்றிகளை தெரிவித்து குளித்தலை பகுதியில் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனக்கூறி குளித்தலை பேருந்து நிலைய காந்தி சிலை முன்பு பொதுமக்கள் இடையே அண்ணா திமுகவுக்கு அனைவரும் வாக்குகள் அளிக்க வேண்டும் என பிரச்சாரம் மேற்கொண்டார்1
- கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு மையத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு காவல்துறை துணை ராணுவம் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மூலம் பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் பணிகளை வட்டாட்சியர் அலுவலகம் இருந்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும்கலெக்டர்நேரில் பார்வையிட்டார்.1
- திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக வேட்பாளராக தங்கராஜ் போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைவதை முன்னிட்டு திருப்பூர் மாநகரின் முக்கிய பகுதிகள் வழியாக நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் பிரம்மாண்ட பேரணி நடத்தி பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆர்.கதிரவனுக்கு ஆதரவாக இன்று மாலை மருங்காபுரியை அடுத்த பொன்னம்பட்டி பேரூராட்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருசக்கர வாகன பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தில் இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.1
- வேப்பனப்பள்ளி காந்தி சிலை அருகே நடைபெற்ற பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று வேப்பனபள்ளி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கே.பிமுனுசாமி அஇஅதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அனைத்தையும் மக்களிடம் கூறி நமது வேப்பனப்பள்ளி சட்டமன்றத்திலஇரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிசார்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் ஆகியவர்கள் கலந்து கொண்டன1