Shuru
Apke Nagar Ki App…
N balu Nbalu
More news from தமிழ்நாடு and nearby areas
- *முல்லைப் பெரியாற்றில் அடித்துச் செல்லப்பட்டு மூன்று நாட்களுக்கு பின் மீட்கப்பட்ட உடல் - தந்தையின் உடலை பார்த்து மகள் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது* *தாய், தந்தை உயிரிழந்த நிலையில் ஆதரவின்றி வசித்து வரும் குடும்பத்தினருக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை* தேனி மாவட்டம் கூடலூர் லோயர்கேம்ப் பகுதியைச் சேர்ந்த சங்கர்(50) மற்றும் அவரது மனைவி கணேஸ்வரி (46) கடந்த செவ்வாய்க்கிழமை லோயர் கேம்ப் பாலம் அருகில் மதுரை மாநகராட்சி கூட்டு குடிநீர் திட்ட தடுப்பணை பகுதியில் உள்ள முல்லைப் பெரியாற்றில் கால்நடைகளுக்கு தேவையான புல் அறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் அப்போது சங்கர் மறுக்கரையில் இருந்த தனது பேரக்குழந்தையை அழைத்துக் கொண்டு வரும்போது ஆற்றின் வேகம் காரணமாக அடித்துச் செல்லப்பட்டார் தனது கணவரை காப்பாற்ற தண்ணீரில் இறங்கிய போது அவரின் மனைவியும் அடித்துச் செல்லப்பட்டார் இதனை அடுத்து கரையில் நின்று இருந்த நபர் உடனே ஆற்றில் இறங்கி குழந்தையை மட்டும் காப்பாற்றிய நிலையில் இருவரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர் தொடர்ந்து தீயணைப்புத் துறையினருக்கு தேடுதலில் ஈடுபட்ட நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு கணேஸ்வரியின் உடல் மீட்கப்பட்டு சங்கரை தொடர்ந்து தேடி வந்தனர் இந்த நிலையில் இன்று மாலை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சங்கரின் உடல் மீட்கப்பட்டது இதனைத் தொடர்ந்து சங்கரின் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து வந்தனர் அவரின் உடலைப் பார்த்து மகள், மகன் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுது சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது இதனை அடுத்து சங்கரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்பு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது தந்தை மற்றும் தாய் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிர் இழந்த நிலையில் ஆதரவின்றி வசித்து வரும் மகன் மற்றும் மகளுக்கு தமிழக அரசு உதவ நிதி உதவி வழங்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்1
- *பெண்களுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் !!* வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள பெண்களுக்கான *TATA ELECTRONICS மற்றும் VPB MEMORIAL TRUST* இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நாள் : 04-01-2026 இடம் : சிநேகா மஹால் வேடசந்தூர் நேரம் : காலை 9மணி முதல் 5மணி வரை முகாமை துவக்கி வைப்பவர் ; *Dr.VPB.பரமசிவம்MBBS* கழக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள பெண்கள் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்2
- புதுக்கோட்டை: மன்னர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு! புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் செனையக்குடி கிராம எல்லையிலுள்ள பெரிய வயலகாட்டில் தனியாருக்கு சொந்தமான நிலம் அமைந்துள்ளது. அந்நிலத்தில் புதுக்கோட்டையை மன்னாராக இருந்து ஆட்சி செய்த தொண்டைமான் மன்னர் நிலம் தானம் வழங்கியதை வெளிப்படுத்தும் கல்வெட்டு, வாமன கோட்டுருவத்துடன் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் ஆ.மணிகண்டன் கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.1
- நேற்று சதுரகிரி மலைக்கு செல்ல குவிந்த பக்தர்கள். இரவு அங்கு தங்க அனுமதி இல்லை.1
- Tamil Golden Actor Nagesh Sir Dialogue! Life Fact மக்களே 👌 என்றும் உங்கள் நினைவுகளுடன்🙏 🎭 Nagesh – வாழ்க்கை வரலாறு (Biodata – தமிழ்) முழுப் பெயர்: யேஷ்வந்த் ராவ் திரைபெயர்: நாகேஷ் பிறந்த தேதி: 27 செப்டம்பர் 1933 பிறந்த இடம்: தார்வாட், கர்நாடகா (அப்போது மும்பை மாநிலம்) இறந்த தேதி: 31 ஜனவரி 2009 வயது: 75 தேசியம்: இந்தியன் மொழி: தமிழ் தொழில்: நடிகர், நகைச்சுவையாளர் திரைத்துறை: தமிழ் சினிமா 🎬 திரைப் பயணம் நாகேஷ் அவர்கள் தமிழ் சினிமாவின் நகைச்சுவை மாமன்னர் என அழைக்கப்பட்டவர். நகைச்சுவை மட்டுமல்லாமல் குணச்சித்திர மற்றும் காரக்டர் ரோல்கள் மூலம் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தினார். 1960–70களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். ⭐ பிரபலமான திரைப்படங்கள் சர்வர் சுந்தரம் காதலிக்க நேரமில்லை எதிர்நீச்சல் திருவிளையாடல் தில்லானா மோகனாம்பாள் மைக்கேல் மதன காமராஜன் 🏆 விருதுகள் பத்ம பூஷண் – இந்திய அரசின் உயரிய குடிமகன் விருது கலைமாமணி – தமிழக அரசு பல மாநில மற்றும் தேசிய திரைப்பட விருதுகள் ❤️ சிறப்பு நகைச்சுவையை நடிப்பு கலை என்ற உயரத்திற்கு கொண்டு சென்றவர் கமல் ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஊக்கமாக இருந்தவர் உடல் மொழி, முகபாவனை, டைமிங்—அனைத்திலும் சிறந்தவர்1
- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். நேற்று இரவு பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மலைக்கோவிலை சுற்றி கிரிவலம் வந்தனர். மலையை சுற்றிலும் பக்தர்களுக்கு அன்னதானம் ஏற்பாடும் செய்யப்பட்டு இருந்தது1
- 😄சிரிக்கவும் 🤔 சிந்திக்கவும்1
- உதிரி பாகங்களின் விலை உயர்வுக்கு ஏற்ப போர்வெல் கட்டணத்தை உயர்த்தக்கோரி தேனி மாவட்டத்தில் போர்வெல் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் குமுளி- மதுரை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் 50க்கும் மேற்பட்ட போர்வெல் வாகனங்களை நிறுத்தி வைத்து 4வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் திருச்செங்கோட்டை தலைமை இடமாக வைத்து போர்வெல் உரிமையாளர்கள் சங்கம் இயங்கி வருகிறது.அங்குள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போர்வெல் வாகனங்கள் இந்தியா முழுவதும் சென்று பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.இவற்றில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும் ,வாகன பராமரிப்பு மற்றும் பழுது பார்ப்பு மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை உள்ளிட்ட சார்பு தொழில் பணிகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் வேலை செய்து வருகின்றனர்.இந்நிலையில் துளைபோட பயன்படுத்தப்படும் காப்பர், ராடு உள்ளிட்ட பல்வேறு உதிரி பாகங்களின் விலை சந்தை மார்க்கெட்டில் ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்படுவதால் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.சீனாவில் இருந்து வரும் காப்பர் மூலப்பொருள் வரத்து நின்றதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்தியாவில் கையிருப்பில் உள்ள காப்பர் குறிப்பாக கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 20,000 ரூபாய் அளவிற்கு விலை உயர்ந்துள்ளது.ஆனால் குறிப்பாக விலை உயர்வுக்கு ஏற்ப போர்வெல் கட்டணத்தை உயர்த்தி ஏஜெண்டுகளிடமும் பொதுமக்களிடமும் போர்வெல் உரிமையாளர்களால் வாங்க முடியவில்லை.இதனால் இந்தியா முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் போர்வெல் உரிமையாளர்கள் உதிரி பாகங்களின் விலை உயர்வுக்கு ஏற்ப போர்வெல் கட்டணத்தை உயர்த்த கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்ட போர்வெல் உரிமையாளர்கள் குமுளி - மதுரை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஆண்டிபட்டி அருகே கரிசல்பட்டி விலக்கு பகுதியில் 50க்கும் மேற்பட்ட போர்வெல் வாகனங்களை நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்க தற்போது 4வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு இதற்கு நடவடிக்கை எடுத்து உதிரி பாகங்களின் விலை உயர்வுக்கு ஏற்ப கட்டணத்தை உயர்த்தும் வரை காலவரையற்ற முறையில் தங்களது போராட்டம் தொடரும் என போர்வெல் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.1
- பழனி வ உ சி பேருந்து நிலையத்தில் தேனி கம்பம் குமுளி மதுரை திருப்பூர் ஈரோடு ஆகிய ஊர்களுக்கு செல்ல போதிய பேருந்து இல்லாததால் பயணிகள் ஆபத்தை உணராமல் முந்தி சென்று பேருந்துகளில் ஏறுவதால் விபத்து நடக்க வாய்ப்புள்ளது. ஆகவே பழனி போக்குவரத்து கழகம் விரைவாக வீடு திரும்ப சிறப்பு பேருந்து இயக்க பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர் ...1